Skip to main content

தமிழக சங்கிகளின் கற்பிதங்கள்




‘அமமுகவையும் அதிமுகவும் இணைத்தால் திமுகவுக்கு கடும் போட்டியை தேர்தலில் அளிக்கலாம், அதே போல முக்குலத்தோர் வாக்குகளும் சிதறாமல் பார்த்துக் கொள்ளலாம்’ என சற்று முன் வரை பேசி வந்த சங்கிகள் இப்போது ‘அமமுகவின் வாக்குகள் அதிமுக-மோடி எதிர்ப்பு வாக்குகளே, அமுமக இணைப்பு நடந்தால் அவ்வாக்குகளை திமுக அள்ளிக் கொண்டு போய் விடும், அதனால் அமமுக தனியாக போட்டியிடுவதே நல்லது’ என மாற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்கள். காரணம், எடப்பாடியார் சாமர்த்தியமாக தில்லிக்கு சென்று பேரம் பேசி படிய வைத்தது. முக்குலத்தோர் / அமமுக ஆதரவு வாக்குகள் எப்படி ஒரே நாளில் மோடி எதிர்ப்பு வாக்குகள் ஆகின? மோடியைப் பார்த்தா மக்கள் மாநிலத் தேர்தலில் வாக்களிப்பார்கள்? இதைக் கேட்டால் ரவீந்திரன் துரைசாமி போன்ற ஏஜெண்டுகள் “மோடி அப்படித்தான் நினைக்கிறார்” என பதுங்குகிறார்கள். சரி, அவை அதிமுக அதிருப்தி வாக்குகள் எனில் அவை ஏன் அமமுகவுக்கு போக வேண்டும்? அமமுக என்ன எதிர்க்கட்சியா?


உண்மை என்னவெனில், பாஜக என்றுமே அதிமுகவை பலப்படுத்த விரும்பவில்லை. இந்த சசிகலா பிரச்சனையைக் கூட சீட்டு பேரத்தில் தன் கரத்தை வலுப்படுத்தவே அது பயன்படுத்துகிறது. பாஜக அடிப்படையில் ஒரு காலனியாதிக்கக் கட்சி. எப்படி கிழக்கிந்திய கம்பனி உள்ளூர் குறுநில மன்னர்களை தமக்குள் மோதவிட்டு, தம் படையைத் தருகிறோம் எனச் சொல்லி வரிவிதித்து பின்னர் நாட்டையே பிடித்ததோ அதே தந்திரத்தை தான் பாஜக பயன்படுத்துகிறது. அதிமுகவை இரண்டாக அல்ல மூன்றாக உடைக்கவே அது விரும்புகிறது. பலமுனை போட்டிகள் நடந்து வாக்குகள் சிதறி எல்லா கட்சிகளும் பாதுகாப்பற்று இருக்கும் நிலை தேர்தலுக்குப் பின் வர வேண்டும் என விரும்புகிறது. அப்போது அது பெரியண்ணாவாக செயல்பட்டு இங்கு ஒரு ஆட்சியை தன் நிழலின் கீழ் அமைக்கலாம் என கனவு காண்கிறது. இதை மக்கள் உணர்ந்து கொண்டு ஒரு திராவிட கட்சி மிகப்பெரும் வெற்றியடைய வைப்பதும், பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் பண்ணுவதும் முக்கியம். அந்த திராவிட கட்சி திமுகவாக இருப்பது தமிழகத்துக்கு பாதுகாப்பு. ஏனென்றால் இந்த ஆட்சியின் ஊழல்கள் அதிமுகவின் தலைக்கு மேல் கத்தியாக தொங்குகின்றன. மீண்டும் ஒருவேளை ஆட்சியில் அவர்கள் அமர்ந்தால் கூட அது மற்றொரு பினாமி ஆட்சியாகவே இருக்கும். 


ரவீந்திரன் துரைசாமி உள்ளிட்ட சங்கி ஏஜெண்டுகள் இப்போது எடுத்து வரும் ஒரு புதிய சரடு மோடி ஸ்டாலினுக்கு அணுக்கமாக இருக்கிறார் என்பது. லஷ்மணன் போன்ற அதிமுக / சசிகலா ஆதரவாளர்கள் சிலர் திமுகவும் பாஜகவும் ரகசிய உடன்படிக்கை என வேறு பேசி வருகிறார்கள். தொடர்ந்து திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக தன்னை நிலைப்படுத்தினாலும் இந்த பேச்சு ஓயவில்லை. இவர்களின் நோக்கம் பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்கு சென்று விடக் கூடாது என்பதே. சுவாரஸ்யம் என்னவெனில், பாஜக எதிர்ப்பலை இங்கு உண்டு எனினும் அது நிச்சயமாக தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதாக இருக்காது. பாஜகவுக்கு ஏன் வாக்குகள் கிடைப்பதில்ல என்றால் அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல அதை ஒரு கட்சியாகவே மக்கள் மதிக்கவில்லை என்பதாலே. அதனால் பாஜக திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக இந்த ஏஜெண்டுகள் பேசி நேரத்தை வீணடிக்க அவசியமில்லை. பாஜக எதிர்ப்பு, பாஜக ஆதரவு, பாஜக என எதுவுமே இங்கு இல்லை. அது உங்கள் கற்பனையிலும், ஊடக முதலாளிகள் மிரட்டப்படுவதால் டிவி விவாத மேடைகளிலுமே இருக்கிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...