விவசாயிகள் பாதிக்கப்பட்டோரின் இடத்தில் இருக்கும் வரை மட்டுமே அவர்களின் போராட்டம் வெல்லும். ஆனால் குடியரசு தினத்தன்று விதிகளௌ மீறி செங்கோட்டை வரை சென்று அங்கு தம் கொடி ஏற்றி, காவல்துறையுடன் மோதி உள்ளது விவசாயிகள் போராட்டம் தடம் மாறுவதையே காட்டுகிறது. வெற்றி வெகு அருகில் இருக்கையில் இப்படி கட்டுப்பாடற்ற போராட்டத்தில் ஈடுபடுவது மத்திய அரசையே வலுப்படுத்தும். இது நிகழ வேண்டுமென்றே ஜியின் அரசு போலீசாரை சற்று விட்டுப்பிடிக்க சொல்லியிருக்கக் கூடும்!
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

Comments