Skip to main content

விபத்து நடக்கிறதா நடத்தப்படுகிறதா? நாகார்ஜுனர் சொல்வதென்ன?



தற்செயல் நிகழ்வுகளில், efficient conditions நம்மால் அறியமுடியாத அளவில் உள்ளது என்று சொல்கிறீர்களா? உதாரணமாக, ஒருவர் பைக் கில் மோதி விடுகிறார். இந்த நிகழ்வு நடக்காமல் இருக்க கவனமாக செல்கிறோம். இருந்தும் நம் கை மீறி நடக்கிறது. 


இதேபோல் நான் வீட்டிற்குள் நடக்கும் பட்சத்தில் தற்செயலாக நாற்காலியில் காலை இடித்து கொண்டால் 4 நிலைகளின் சாராம்சம் என்னளவில் விடுபடாமல் இருக்கும் அல்லவா? Efficient condition நான் நடந்த வேகமும் நாற்காலியின் weight ஆக இருக்கும். ஆகவே, தற்செயல் நிகழ்வில் efficient conditon அறியமுடியாத அளவில் இருப்பதாகவும் தெரியவில்லை. இந்த நாற்காலி உதாரணம் primary condition ஆ?


- Habib Haadi


அன்புள்ள ஹபீப்

இது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு விபத்தில் மட்டுமல்ல எந்த ஒரு தற்செயலான நிகழ்விலும் செயலூக்க நிலை (efficient condition) என்னவாக இருக்கிறது என நாம் யோசித்தே ஆக வேண்டும். ஒரு நேர்முகத்துக்கு சென்று சிறப்பாக தேர்வெழுதி, பேசி விட்டு வருகிறோம், ஆனால் வேலை கிடைக்கவில்லை. கவனமாக இருக்கிறோம், ஆனால் கொரோனா வந்து விடுகிறது. நாம் ஓட்டளிக்காவிடினும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து விடுகிறது. ஒரு பெண் அழகாக ஆடையணிந்து மகிழ்ச்சியாக வெளியே போகும் போது ஒருவன் ஆபாசமாக அவளது மார்புகளை உற்றுப் பார்க்கிறான். அவளுக்கு தன் உடல் மீதே வெறுப்பு வருகிறது. நீங்கள் சொல்வதைப் போல, ஒருவருக்கு நாற்காலியில் கால் மோதி வலிக்கிறது. கோபமாக நாற்காலிக்கு ஒரு உதை விடுகிறார். பைக்கை ஓட்டிப் போகும் போது யாரோ குறுக்கே வர திடீர் பிரேக் போட்டு தடுமாறுகிறோம், பின்னால் வந்த பைக் நம் மீது மோதி பிரச்சனையாகிறது. அல்லது கார் ஓட்டும் போது ஒரு நொடி கவனம் பிசகி ஒரு குழந்தை மீது கார் மோதி விடுகிறது. பதைபதைத்துப் போகிறோம். இதற்கெல்லாம் யார் பிரதான காரணம்? எது பிரதான காரணம்? சந்தர்பங்களா? நாமா?


எனக்கு ஆறு மாதம் இருக்கையில் போலியோ தொற்று ஏற்பட்டு மாற்றுத்திறனாளி ஆனேன். இதைக் குறித்து நான் அதிகம் கவலைப்பட்டதில்லை. ஆனால் நான் ஒரு பெற்றோனாக இருந்து என் குழந்தைக்கு இப்படியாகியிருந்தால் அந்த குற்றவுணர்வை என்னால் தாங்கிக் கொண்டிருந்திருக்க முடியாது. இது யாருடைய கவனப் பிசகினால் ஏற்பட்டது?


இங்கு தான் நாகார்ஜுனரின் நிலைகள் குறித்த பகுப்பாய்வு நமக்கு பயன் தருகிறது - ஒரு நோய்த்தொற்று எனும் நிகழ்வின் போதான முதன்மை (செய்ய வேண்டும் எனும் விழைவு), செயலூக்க (நிகழ்வுக்கு காரணமான துவக்க செயல்) நிலைகள் மனிதருக்கு இல்லை. ஆனால் கிருமிக்கு உண்டு. உடனடி நிலை மற்றும் பார்க்கப்படும் பொருளின் நிலை ஆகியவை நமக்கு உண்டு. இவ்விதம் நோக்கும் போது எல்லாவற்றையும் மனிதரை ஆதாரமாக வைத்து சிந்திக்க அவசியம் இல்லை என நாம் கற்கிறோம். அது போல ஒரு நிகழ்வுக்கான இருப்பு அந்த நேரத்துக்கு மட்டுமே ஆனது. மாற்றுக் கற்பனை நிகழ்வை - தடுப்பூசி போட்டிருந்தால்? - முன்வைப்பதில் அர்த்தமில்லை. ஏனென்றால் அது அங்கு இல்லவே இல்லை. நவீன உலகின் மிகப்பெரிய சிக்கலே பல்வேறு நிகழ்வுகளை கோர்வையாக தொடர்புறுத்தி அதன் மையத்தில் மனிதனை வைத்துப் பார்ப்பது தான். இதன் அடிப்படை நோக்கம் மனித மையவாதத்தை கட்டுவித்து சாராம்சப்படுத்துவது. நாகார்ஜுனர் ஒருவர் சமயோஜிதமாக செயல்பட்டு ஒரு விபத்தை தவிர்க்கும் போது கூட அங்கு அவரது பங்களிப்பானது பல சார்புநிலைகளால் தோன்றுவது தானே தவிர அவரால் மட்டுமல்ல என தெளிவுபடுத்துவார். இது நம்மை மையப்படுத்தாமல் அகந்தை இல்லாமல் ஊக்கத்துடன் சுதந்திரமாக இயங்க உதவும். நவீன வாழ்வின் தொடர் குற்றவுணர்வுகளில் இருந்து காப்பாற்றும்.


ஆகையால் நீங்கள் குறிப்பிடும் நாற்காலியில் இடிபடுகிற உதாரணத்திலும், எந்த விபத்துகள், தற்செயல்களிலும் முதன்மை நிலை (primary condition) இருக்க முடியாது. விபத்துகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதன் பிரதான காரணமே விபத்தின் விளைவான ஆபத்து அல்ல, நமது பங்களிப்பு இன்றியே நாம் இருக்கிற ஓரிடத்தில் ஒன்று தற்செயலாக நடக்கிறதே எனும் அதிர்ச்சி தான். 


நன்றி

ஆர். அபிலாஷ்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...