Skip to main content

வாட்ஸ் ஆப் பாருங்கோ!



சன் நியூஸ் கேள்விக்களம் நிகழ்ச்சியில் ரியானா ட்வீட், அதற்கு எதிராக பாஜகவுக்கு முட்டுக் கொடுக்கும் செலிபிரிட்டுகள் குறித்து விவாதிக்கிறார்கள். பாஜகவுக்காக நாராயணன் வழக்கம் போல “எனக்கு எல்லாம் தெரியும், நீங்க எல்லாம் முட்டாள்கள், ஒருவேளை நான் தான் முட்டாள்னு நினைக்கிறீங்களா?” எனும் கணக்கில் பேசிக் கொண்டு போகிறார். ஒரு கட்டத்தில் கிரீட்டா டென்பேர் டூல் கிட் விவகாரத்தை ஆதாரமாக எடுத்து வைக்கிறார். அப்படியான டூல் கிட்டை தயாரித்து ஒரு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது டிவிட்டரில் வழக்கமான ஒன்றே. ஆனால் அதை பாஜகவினர் ஏதோ “துப்பாக்கி” படத்தில் குண்டு வைக்க தீவிரவாதிகள் தயாரித்த வரைபடம் விஜய்யிடம் மாட்டியதைப் போல பில்ட் அப் பண்ணுகிறார்கள். சமூகவலைதள பிரச்சாரம் பற்றி ஒன்றுமே தெரியாத மாங்கா மடையன்கள் மட்டுமே இதை ஒரு ஆதாரமாக ஏற்பார்கள். அது போகட்டும், பாஜக நாராயணனின் வாட்ஸ் ஆப்புக்கு யாரோ இதை அனுப்பி விட்டார்கள். அதைக் காட்டி பேசத் தொடங்கிய அவர் நெறியாளர் குணசேகரனிடம் “குணா உங்களுக்கும் வாட்ஸ் ஆப் பண்ணியிருக்கேன். பாருங்க, பாருங்க” என குதிக்கிறார். இதை ஏதோ படுபயங்கர ராணுவ ரகசியங்களை கண்டுபிடித்ததைப் போல விவாதம் முழுக்க கொண்டு செல்ல முயலும் அவர் தன்னை யாரும் பொருட்படுத்தவில்லை எனக் கண்டதும் திரும்ப திரும்ப “குணா உங்களுக்கு வாட்ஸ் ஆப் பண்ணியிருக்கேன். பாருங்க” என்கிறார். அவர் ஏன் இதை ஒரு நிகழ்ச்சியின் நடுவே செய்ய வேண்டும்? வேறெதற்கு நெறியாளரே தன் வாட்ஸ் ஆப் பார்வெர்டுகளை படிக்கிறவர், தன் கட்டுப்பாட்டில் இருக்கிறவர் எனக் காட்டத் தான். குணா உடனே “வாட்ஸ் ஆப்பில் வருவதை எல்லாம் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது” என நாராயணின் மூக்கை உடைத்து விட்டார். 


பாஜகவின் செய்தித் தொடர்பாளர்கள் இந்த உத்தியை பலமுறை வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்: 

1) நெறியாளர் வேண்டுமென்றே பாஜகவை, இந்துக்களை இருட்டடிப்பு செய்வதாக நிகழ்ச்சியின் போதே புகார் சொல்லி நெறியாளரை நெருக்கடிக்கு உள்ளாக்குவார்கள்.

2) அல்லது, நெறியாளரின் பெயரை சொல்லி தனிப்பட்ட தொனியில் உரையாடி (அதைக் கேட்க நெறியாளர் ஏதோ இவர்களின் கார் டிரைவர் போலத் தோன்றும்) அந்த விவாத அரங்கில் தனக்கு தனி தகுதி உண்டு எனக் காட்டிக் கொள்வார்கள். உ.தா., “இல்லை குணா” என்பதற்கும் “இல்லைங்க குணா” என்பதற்குமான வித்தியாசம்.


இந்த நாராயணனுடன் நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டிவி விவாதங்களில் கலந்து கொண்ட ஞாபகம். அப்போது அவ்வளவு எளிமையாக, இயல்பாக பேசுவார். இப்போதுள்ள பந்தா, திமிர்த்தனம், பாதுகாப்பின்மையின் பதற்றம், நெறியாளர்களை தனிப்பட்ட முறையில் டீல் பண்ணுவது எதுவும் இல்லை. ஜெயாவின் மரணத்துக்குப் பிறகு தமிழக பாஜக தலைவர்களின் உடல்மொழி அப்படியே மாறி விட்டது. தமிழகத்தை தாமே ஆள்வதாக நம்புகிறார்கள். ஆனால் மத்தியில் ஆட்சியில் இருந்த போதும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் இவ்வளவு அகந்தையாகப் பேசி நான் பார்த்ததில்லை. 


பாஜக மீது கடும் வெறுப்பில் பேட்டியளித்த ராமசுப்பிரமணியனை பேசி சரிகட்டி விட்டார்கள் போல. அவர் இப்போது பாஜக ஆதரவாளராக டைட்டில் போட்டுக் கொள்வதில்லை என்றாலும் நேரடியாக ஆதரவு தெரிவித்து பேசுகிறார். இவர்களின் கருத்துக்களுக்கு அவ்வளவு தான் மதிப்பு - அப்பப்போ குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும் வாங்கி வரேன் என உத்தரவாதம் தராவிட்டால் “எண்டே கட்சி திமுக, எண்டே சி.எம் ஸ்டாலின்” என உளற ஆரம்பித்து விடுவார்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...