Skip to main content

இந்திய கிரிக்கெட் அணியின் சாபக்கேடு



இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நதீம் மிக மோசமாக பந்து வீசினார், அவரது தேர்வே தவறு என ஒரு பார்வை உள்ளது. எனக்கு இதனுடன் முழு உடன்பாடில்லை. 


1) நதீம் ஒரே நீளத்தில், திசையில் வீச முயலவில்லை. இரு வருடங்களுக்கு முன்பு ராஞ்சியில் அவர் அப்படியே வீசி பலரது பாராட்டுக்களைப் பெற்றார். இப்போது என்னவாயிற்று? நதீம் சிறப்பாக ஆடியிருந்தும் தன் இடத்தை இழந்தார். ஜடேஜா தொடர்ந்து ஆடியது, கோலியின் தேர்வில் தொடர்ச்சி இல்லாதது நதீமை இருட்டில் இருக்க வைத்தது. இப்போது இந்த வாய்ப்பும் அவருக்கு எதேச்சையாக அமைந்ததே. நியாயமாக அக்ஸர் ஆடியிருக்க வேண்டும். அல்லது அதை விட நியாயமாக நீண்ட காலமாக இரண்டாவது ஸ்பின்னரின் வாய்ப்புக்காக காத்திருக்கும் குல்தீப் ஆடியிருக்க வேண்டும். அக்ஸர் காயம்பட்ட நிலையிலாவது குல்தீப்பை தேர்வு செய்திருக்க வேண்டும் கோலி. ஆனால் அவர் தன் வழக்கப்படி குல்தீப்புக்குப் பதில் யாரை வேண்டுமானாலும் எடுப்பேன் என நினைத்து நதீமை திடீரென உள்ளே கொண்டு வந்தார். மனதளவில் நதீம் இதற்கு தயாராகவே இருந்திருக்க மாட்டார். மேலும், குல்தீப்புக்கு வர வேண்டிய வாய்ப்பு தனக்கு வந்தது, தன் அணித்தலைவரின் முதன்மைத் தேர்வு தானல்ல என்பது, விரைவில் ஜடேஜா தன் இடத்தை எடுத்துக் கொள்வார் என்பது அவரை முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் எனும் ஆவேசத்தில் வீச செய்து சொதப்ப வழிவகுத்தது என நினைக்கிறேன்.


2) நதீம் பொதுவாக நேராக middle and leg இல் இருந்து வீசி அங்கிருந்து பந்தை திருப்பக் கூடியவர். ஆனால் இந்த போட்டியில் அவர் நிறைய பந்துகளை வெளியே வீசினார். அதோடு பந்தை திருப்பும் ஆவேசத்தில் நிறைய குறைநீளப் பந்துகளைப் போட்டார். இதெல்லாம் அடி வாங்க அவர் மேலும் பதற்றமானார். கோலி எரிச்சலாவது வெளிப்படையாகத் தெரிந்தது. இதை விட மோசமான துவக்கத்தை இங்கிலாந்தின் லீச் பெற்றார். ஓவருக்கு பத்து ரன்கள் விதம் கொடுத்தார். ஒவ்வொரு ஓவரிலும் பண்ட் அவரை சிக்ஸர்களாக விளாசினார். ஆனால் ரூட் அவருக்கு தொடர்ந்து புன்னகையுடன் ஆறுதலளித்தார். அவருக்காக இரண்டு ரெவ்யூக்களை வீணடித்தார். பண்ட் வெளியேறின பின்னர் லீச்சின் பந்து வீச்சு மேம்பட்டது. விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் ஷர்மாவையும் வீழ்த்தியிருக்கிறார். இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடித்தது இதற்கு உதவியது என்றாலும் ரூட் தன் இளம் வீரர்களை கையாளும் விதத்தை பாராட்டியாக வேண்டும். அந்த பெரிய மனிசத்தன்மை தான் கோலிக்கு இல்லை. “மகாநதியில்” வரும் துலுக்காணம் கேரக்டரைப் போலவே அவர் களத்தடுப்பாளர்களை, இளம் வீச்சாளர்களை நடத்துகிறார். பேட்ஸ்மேன் அடிப்பார் என்பதை விட கோலி கத்துவார் என்பதே அவர்களை நடுங்க வைக்கிறது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கூட கோலி எனும் ரௌடி உருவாக்கும் நெருக்கடியினாலே பலமுறை கொலாப்ஸ் ஆகிறார்கள் என்பது என் பார்வை. ஆஸ்திரேலியாவில் அவர் போன பின்னர் எவ்வளவு கெத்தாக இளம் வீரர்கள் மட்டையாடினார்கள் பாருங்கள்.


இந்த போட்டியில் கூட நதீம் ரஹானே போன்ற ஒரு அணித்தலைவருக்கு கீழே இன்னும் நிதானமாக வீசி இருப்பார் எனத் தோன்றுகிறது. நான்காவது நாள் ஆட்டத்தில் ரூட் வந்தவுடன் short leg, mid wicket என கால் பக்கம் தடுப்பரணை அளிக்காமல் அவர் நதீமை வீச வைக்கிறார். off பக்கமாய் வைடாய் வீசு என அழுத்தம் கொடுக்கிறார். இது நதீமின் இயல்புக்கு விரோதமானது. டூட் கால்பக்கமாய் பவுண்டரிகள் அடித்து பிளந்து கட்டுகிறார். இப்போது கோலி மேலும் கடுப்பாகிறார். கேப்டன் கடுப்பாவதைக் கண்டு நதீம் இன்னும் மோசமாக வீசுகிறார். அஷ்வினுக்கான களத்தடுப்பு அமைப்பு கூட மோசமாக உள்ளது, இந்திய சூழலுக்கான கள அமைப்பை ஜோ ரூட் இன்னும் சிறப்பாக செய்கிறார் என வர்ணனையாளர்கள் திரும்பத் திரும்ப சொல்லுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக மட்டமான தலைவர் கோலியே எனத் தோன்றுகிறது. அவரது அதிர்ஷ்டம் மோசமான தேர்வுகள், கள அமைப்பையும் மீறி பல டெஸ்ட் போட்டிகளை அவருக்கு கீழ் வென்றிருக்கிறோம்.

3) கோலிக்கு தனிப்பட்ட வாழ்க்கை, கிரிக்கெட் வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை இம்மூன்றுக்கும் வித்தியாசம் காணத் தெரியாது. தனிப்பட்ட வாழ்வின் சிக்கல்களுக்காக, குரோதங்களுக்காக சூர்யகுமார் யாதவ், ரோஹித் ஷர்மா ஆகியோரை அவர் எப்படி பழிவாங்கினார் எனப் பார்த்தோம். இது வீரர்களுக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணுகிறது. இதுவரை இந்திய வெற்றி பெற்ற தொடர்களில் எப்போதுமே பயிற்சியாளர்களின் பங்களிப்பு பற்றி யாரும் பேசியதில்லை. ஆனால் இம்முறை ஆஸ்திரேலிய தொடர் முடிந்த பின் அந்த மகத்தான வெற்றியை ரவிசாஸ்திரி, பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், மட்டையாட பயிற்சியாளர் ரத்தோர் ஆகியோர் வெளிப்படையாக அணித்தலைவர் ரஹானேவுடன் பகிர்ந்து கொண்டனர். நிறைய பேட்டியளித்தார்கள். ஏன் இதை முன்பு பண்ணியதில்லை? ஏனென்றால் அப்போதெல்லாம் அவர்களுக்கு கோலியின் மீது பயம். வெற்றிகளுக்கு முழு பெருமையும் கோலிக்கே என அர்ச்சனை செய்து விட்டு பயிற்சியாளர்கள் அணி வழிவிட்டு விடுவார்கள். அப்படியான ஒரு சர்வாதிகாரி கோலி.

அணியின் தனிப்பட்ட விருந்துகளில் மனைவி அனுஷ்காவை பங்கேற்க வைப்பது, கிரிக்கெட் விவகாரங்களில் அவரை கருத்து தெரிவித்து சர்ச்சையை உண்டு பண்ண விடுவது, சிலர் சொல்லுவது படி பார்த்தால் கிரிக்கெட் தேர்வில் கூட அவரை தலையிட விடுவது என பல பிரச்சனைகள் இருக்கின்றன.

இப்போது விவசாயிகள் போரட்டத்திற்கு எதிராக அணியினரை டிவீட் போட வைத்தார். இது தேவையில்லாத ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்து ஊடகங்களிடம் பேசும் போது “அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் விவசாயிகளின் போராட்டம் குறித்து தம் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன” என்றார். இதை அவர் ஏன் சொல்ல வேண்டும்? என்ன நோக்கத்தில் இந்த அரசியலை செய்கிறார்? சில வீரர்கள் அரசுக்கு விரோதமாக இருப்பதாக குறிப்புணர்த்தினாரா? ஒரு புகைச்சலை உண்டு பண்ணுகிறாரா? இது போக பிரதமரை அடிக்கடி தன் மனைவியுடன் சேர்ந்து சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு தன் அதிகாரத்தை காட்டி தேர்வாளர்கள் முதல் வாரிய நிர்வாகிகள் வரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.

  கோலி அனுஷ்காவிடம் மட்டுமே நியாயமாக கனிவாக இருக்கிறார். அல்லது அப்படிக் காட்டிக் கொள்கிறார். மனைவி ஆணையிட்டால் எந்த வீரரையும் வெளியேற்ற தயார். மனைவி கேட்டால் பாதி பயணத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி விடுவார். ஆனால் குழந்தையைப் பார்க்க ஊர் திரும்பும் இந்த உரிமை நடராஜனுக்கோ, தந்தையை இழந்த முகமது சிராஜுக்கோ இல்லை. இந்த ஏற்றத்தாழ்வு அணிக்குள் எப்படியான மனநிலையை ஏற்படுத்தும்? ஒரு முதிர்ச்சியான பொறுப்பான தலைவர் பிற இளம் வீரர்களுக்காக தன் வீடுதிரும்பலை ஒத்திப் போட்டு தியாகம் செய்திருப்பார். ஆனால் கோலிக்குத் தான் அந்த கண்ணியம் இல்லையே. தனது அதிகாரத்தை சட்டையில் பின் வைத்து குத்திக் கொண்டு திரிபவர் அல்லவா அவர்!

 கோலியின் இந்த நிலையற்ற மனப்பான்மை பதின்வயது பையன்களுக்கானது. 

அவர் செய்ய வேண்டியது வீட்டில் கண்டிப்பானவராக, கோபத்தை காட்டுகிறவராக, வெளியே கனிவாக பொறுமையாக இருப்பது. ஆனால் அவருக்கு அதை யாரும் சொல்லித் தரவில்லை போல. ரோஹித் ஷர்மா, அஷ்வின் போன்றோரின் மனைவியரும் தாம் டிவிட்டரில் இருக்கிறார்கள். அவர்கள் கிரிக்கெட் விவகாரங்களில் தலையிட்டு கவாஸ்கர் போன்றோரை அவமதிக்கிறார்களா? இல்லை. ஏனென்றால் வீட்டுக்கும் வேலைக்குமான எல்லையை அந்த வீரர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கோலி விசயத்தில் எல்லாமே தலைகீழ். 


இப்படியான ஒரு அணித்தலைவரின் கீழ் ஒரு இளம் சுழலர் எப்படி நிம்மதியாக வீச முடியும்? அடுத்த போட்டியில் குல்தீப் வீச வந்தாலும் அவரது நிலையும் இப்படித்தான் இருக்கும். கோலியின் அணியில் கோலியைத் தவிர வேறு யாருமே நிலையாக நிம்மதியாக ஆட முடியாது! 


இந்திய அணிக்குத் தேவை முதிர்ச்சியான நிதானமான, தன் அதிகாரத்தை பகிர்வதில் அச்சமில்லாத எளிமையான ஒரு தலைவர். தன் அந்தஸ்தை, அதிகாரத்தை தம்பட்டம் அடிக்காத அடக்கமான தலைவர். அப்போதே இளம் வீரர்கள் அந்த அணியில் ஜொலிப்பார்கள்.


இந்திய கிரிக்கெட் அணியின் சாபக்கேடு கோலி எனும் தலைவர்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...