என் நண்பர் ஒருவரின் சகோதரி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் வேலை செய்கிறார். அண்மையில் அங்கு கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்கள், செவிலியர் பலருக்கும் கொரோனா வந்துள்ளது. வேலைக்கு பிரச்சனை வரக் கூடாது எனும் பயத்தில் இதை வெளியே சொல்லாமல் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இத்தகவலை நண்பர் சொன்ன போது நான் அதிர்ந்து போனேன். இதைப் போல தடுப்பூசிக்கு பிறகு ஏற்பட்ட எத்தனை எத்தனை சுகாதாரப் பணியாளர்களின் கேஸ்களை இந்த அரசு பொதுவெளிக்கு வராமல் மறைக்கிறதோ?
கோவேக்ஸின் விசயத்தில் பரிசோதனை நிலையிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. அவசரகதியில் வெளியிட்டார்கள் என பல குற்றச்சாட்டுகள். இப்போது இது வேறு.
என் அம்மாவிடம் தடுப்பூசிப் போட்டுக் கொள்ள சொல்லி இருந்தேன். இப்போது அவரை அழைத்து வேண்டாம் என சொல்லப் போகிறேன். எதனால் தொற்று ஏற்படுகிறது என உறுதியாகும் வரை தடுப்பூசியை தவிர்ப்பதே நல்லது என நண்பரும் என்னிடம் சொன்னார்.
மருந்து நிறுவனங்களும் அரசும் கைகோர்த்து அதை ஒரு வணிக நகர்வாக கருதுவதன் ஆபத்தாகவே இதைப் பார்க்கிறேன். பிரதமரே கோவேக்ஸினுக்கு மாடலாக நடிப்பது (முன்பு paytmக்கு இதை செய்தார்), அதை வெளிப்படையாகவே ஆதரித்து பேசுவது ஒரு நாட்டின் இறையாண்மைக்கே உலைவைப்பதாகிறது. அது மட்டுமல்ல, paytmஐப் போன்றே பாரத் பயோடெக்கும் ஆளும் மத்திய அரசின் முதலீட்டைப் பெற்ற பினாமி நிறுவனமோ என ஐயம் ஏற்படுகிறது.
பின்குறிப்பு: இதற்கு செய்தி ஆதாரம் எங்கே எனக் கேட்காதீர்கள். வாய்வழித் தகவல்களின் அடிப்படையிலே எழுதுகிறேன். செய்திகள் கடுமையாக அரசால் தணிக்கை செய்யப்பட்டு கட்டுப்படுத்தப்படும் போது நமக்கு வேறு வழி இருப்பதில்லை. பூக்கோ சொன்னதைப் போல எதிர்-அதிகாரம் அதிகாரபூர்வமற்ற கதையாடல்களாலே வழியே முன்னெடுக்கப்படுகிறது. வேறு வழியில்லை.
Comments