#கண்காட்சியில்வாங்கலாம் -7
கல்விப்புலப்பார்வையையும் விமரிசன நோக்கையும் சம அளவில் கலந்து ஆர்.அபிலாஷின் கவனம்பட்டு எழுத்துகளாக மாறியதில் குறிப்பிட வேண்டியனவாக இருப்பனவற்றை உயிர்மை பதிப்பகம் நூல்களாக மாற்றித் தருகின்றது. பின்வரும் நூல்களைப் போனவருடம் புத்தகச் சந்தையில் மொத்தமாகப் வாங்கிப்படித்தேன்.
1.பெண்கள் இப்படித்தான் யோசிக்கிறார்களா?
2.கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்
3. ME TOO - சில விமர்சனங்கள்
4..BIG BOSS - துயரத்தை ஏன் கூவி விற்கிறீர்கள்
இந்த ஆண்டும் அங்கு கிடைக்கக்கூடும்
நடுத்தரவர்க்கம் சார்ந்த வெகுமக்களின் கவனத்தை ஈர்க்கும் கிரிக்கெட், சினிமா, தொலைக்காட்சிச் சிறப்பு நிகழ்ச்சிகள், தன்னெழுச்சியாக எழும்பிவரும் சமூக நிகழ்வுகள் போன்றவற்றைக் குறித்துக் கடந்த 10 ஆண்டுகளில் அவர் எழுதிய கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால் அவரது புனைவல்லா எழுத்துகளின் ஓர் சிறப்பு அடையாளம் உருவாகியிருப்பதை அறியலாம். தமிழின் பொது உளவியலுக்குள் செயல்படும் தனிமனிதக் கூறுகளைப் பேசியவர் என்பது அவரது அடையாளமாக ஆகும் என நினைக்கிறேன். இந்த ஆண்டும் இரண்டு நூல்களை உயிர்மை வெளியிட்டுள்ளது
1. ரஜினிகாந்த்
2. நான் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறேன்?




Comments