Skip to main content

பாஜகவின் ஊடக டூல் கிட் சொல்லும் சேதிகள்!


கடந்த ஆண்டு முதற்கொண்டு ஜீயின் அரசு தன்னைக் குறித்த பிரச்சாரத்தில் ஊடகங்கள் இன்னும் மும்முரமாக ஈடுபட வேண்டும் என நோக்கில் ஊடகவியலாளர்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பல கலந்துரையாடல்களை நடத்தி அதில் பேசப்பட்ட கருத்துக்களை தொகுத்து ஒரு 'டூல் கிட்' தயாரித்துள்ளது. (பார்க்க இணைப்பில் உள்ள படங்களை) இதில் எப்படி அரசுக்கு பத்திரிகையாளர்கள், நெறியாளர்கள், பேஸ்புக், டிவிட்டர் பிரபலங்களை ஊக்குவிக்க வேண்டும், அரசை விமர்சிப்பவர்களை காயடிக்க (neutralize) வேண்டும் (அதிஷா, செந்தில் போன்ற பல ஊடகவியலாளர்கள் அண்மையில் வேலை நீக்கம் செய்யப்பட்டது நினைவிருக்கும்), ஊடகங்கள் பொருளாதார நெருக்கடியில் இருப்பதை பயன்படுத்தி அரசு ஆதரவு ஊடகங்களுக்கு நிதியுதவி அளித்து வளைத்துப் போட வேண்டும், இப்போதைக்கு 75% ஊடகக்காரர்களை நம்மை ஆதரிக்கிறார்கள், மிச்ச 25%யும் வீழ்த்த வேண்டும், அரசை புரொமோட் செய்யும் பணியில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட வேண்டும், பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் கதையாடல்களை திணிக்க வேண்டும், the print மாதிரியான சில இணைய இதழ்களை குறிப்பிட்டு அவற்றை முடக்க வேண்டும் என்பது போன்ற பல 'அற்புதமான', 'முத்தான' பரிந்துரைகள் உள்ளன. இவற்றில் என் கவனத்தை உடனடியாகக் கவர்ந்தது எல்லா பிராந்திய மொழிகளிலும் உள்ள பாஜக ஆதரவு எழுத்தாளர்களைக் கண்டடைந்து அவர்களை ஊக்கப்படுத்தி ஆதரவளிக்க வேண்டும் எனும் பரிந்துரை.
 இந்த வேலையை ஜீயின் அரசு ஏற்கனவே எல்லா மாநிலங்களிலும் ஆரம்பித்து விட்டதன் தாக்கத்தை தமிழில் வெளிப்படையாகவே இப்போது காண்கிறோம். முன்பு முற்ப்போக்காக தெரிந்தவர்கள் தடாலடியாக இந்துத்துவ எழுத்தாளர்கள் ஆகி விட்டார்கள். ஆனால் இது ஒரு சித்தாந்த மாற்றம் அல்ல, அப்படி பொதுப்படையாகத் தோன்றினாலும். இவர்கள் அதிகார மோகிகள் மட்டுமே, அசல் சங்கிகள் அல்ல. ஒரு சின்ன அங்கீகாரம், விருது, தொடர்பு வலை ஆகியவற்றுக்காக ஒரு நாள் தூங்கி எழுந்ததும் சங்கி ஆகி விட்டவர்கள். நாளை அரசு மாறியதும் இவர்கள் மீண்டும் தம்மை முற்போக்காளர்களாக காட்டிக் கொள்வார்கள். இன்று மிகத்தீவிரமாக பாஜகவை ஆதரித்து காங்கரசை பழித்து எழுதும், பேசும், கதறும், உதறும் பல ஊடக முகங்களும் பச்சோந்திகள் தாம். ஒரு ஆர்.எஸ்.எஸ்காரனைக் கூட மன்னிக்கலாம், திருத்தலாம், ஆனால் இவர்கள் அவனை விட கொடூரமானவர்கள். நாளொரு மேனி, பொழுதொரு தோற்றம். யார் மீதும் அக்கறை இல்லை, எதன் மீதும் பற்றுதல் இல்லை. அதிகார வளையத்தில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தவிர.

அண்மையில் நான் ஊடகங்களிலும்,சமூகவலைதளங்களிலும் ஜீ ஆதரவாளர்களை சங்கி என அழைக்கும் பழக்கத்தை விட்டு விட்டேன். ஏனென்றால் அவர்கள் நாளை ஆட்சி மாறியதும் நம் தோளில் கையிட்டு "தோழர்" எனக் கொஞ்சுவார்கள். அந்த அரசிடம் போய் தெண்டனிட்டு "முந்தின பாஜக ஒரு பாசிசக் கட்சி" எனக் கூறுவார்கள். 

இன்னொரு விசயம் அண்மையில் ஜீ எடுத்த பல சர்வாதிகார நடவடிக்கைகள் மீது ஒரு அதிருப்தி, கோபம் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளதை அவரே உணர்ந்துள்ளார்கள். அதனால் தான் ஊடகங்களை மகுடியாகக் கொண்டு  மக்களை கூடுதலாக ஊதி மயக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். இது ஜீயின் அநீதிகளை, பிழைகளை விமர்சிப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் சேதி! 25% என்றாலும் அவர்கள் சொல்வதே மக்கள் மனசாட்சியின் குரல் என ஜீக்குத் தெரியும், அவர் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார் என்றாலும்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...