முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜகவின் ஊடக டூல் கிட் சொல்லும் சேதிகள்!


கடந்த ஆண்டு முதற்கொண்டு ஜீயின் அரசு தன்னைக் குறித்த பிரச்சாரத்தில் ஊடகங்கள் இன்னும் மும்முரமாக ஈடுபட வேண்டும் என நோக்கில் ஊடகவியலாளர்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பல கலந்துரையாடல்களை நடத்தி அதில் பேசப்பட்ட கருத்துக்களை தொகுத்து ஒரு 'டூல் கிட்' தயாரித்துள்ளது. (பார்க்க இணைப்பில் உள்ள படங்களை) இதில் எப்படி அரசுக்கு பத்திரிகையாளர்கள், நெறியாளர்கள், பேஸ்புக், டிவிட்டர் பிரபலங்களை ஊக்குவிக்க வேண்டும், அரசை விமர்சிப்பவர்களை காயடிக்க (neutralize) வேண்டும் (அதிஷா, செந்தில் போன்ற பல ஊடகவியலாளர்கள் அண்மையில் வேலை நீக்கம் செய்யப்பட்டது நினைவிருக்கும்), ஊடகங்கள் பொருளாதார நெருக்கடியில் இருப்பதை பயன்படுத்தி அரசு ஆதரவு ஊடகங்களுக்கு நிதியுதவி அளித்து வளைத்துப் போட வேண்டும், இப்போதைக்கு 75% ஊடகக்காரர்களை நம்மை ஆதரிக்கிறார்கள், மிச்ச 25%யும் வீழ்த்த வேண்டும், அரசை புரொமோட் செய்யும் பணியில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட வேண்டும், பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் கதையாடல்களை திணிக்க வேண்டும், the print மாதிரியான சில இணைய இதழ்களை குறிப்பிட்டு அவற்றை முடக்க வேண்டும் என்பது போன்ற பல 'அற்புதமான', 'முத்தான' பரிந்துரைகள் உள்ளன. இவற்றில் என் கவனத்தை உடனடியாகக் கவர்ந்தது எல்லா பிராந்திய மொழிகளிலும் உள்ள பாஜக ஆதரவு எழுத்தாளர்களைக் கண்டடைந்து அவர்களை ஊக்கப்படுத்தி ஆதரவளிக்க வேண்டும் எனும் பரிந்துரை.
 இந்த வேலையை ஜீயின் அரசு ஏற்கனவே எல்லா மாநிலங்களிலும் ஆரம்பித்து விட்டதன் தாக்கத்தை தமிழில் வெளிப்படையாகவே இப்போது காண்கிறோம். முன்பு முற்ப்போக்காக தெரிந்தவர்கள் தடாலடியாக இந்துத்துவ எழுத்தாளர்கள் ஆகி விட்டார்கள். ஆனால் இது ஒரு சித்தாந்த மாற்றம் அல்ல, அப்படி பொதுப்படையாகத் தோன்றினாலும். இவர்கள் அதிகார மோகிகள் மட்டுமே, அசல் சங்கிகள் அல்ல. ஒரு சின்ன அங்கீகாரம், விருது, தொடர்பு வலை ஆகியவற்றுக்காக ஒரு நாள் தூங்கி எழுந்ததும் சங்கி ஆகி விட்டவர்கள். நாளை அரசு மாறியதும் இவர்கள் மீண்டும் தம்மை முற்போக்காளர்களாக காட்டிக் கொள்வார்கள். இன்று மிகத்தீவிரமாக பாஜகவை ஆதரித்து காங்கரசை பழித்து எழுதும், பேசும், கதறும், உதறும் பல ஊடக முகங்களும் பச்சோந்திகள் தாம். ஒரு ஆர்.எஸ்.எஸ்காரனைக் கூட மன்னிக்கலாம், திருத்தலாம், ஆனால் இவர்கள் அவனை விட கொடூரமானவர்கள். நாளொரு மேனி, பொழுதொரு தோற்றம். யார் மீதும் அக்கறை இல்லை, எதன் மீதும் பற்றுதல் இல்லை. அதிகார வளையத்தில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தவிர.

அண்மையில் நான் ஊடகங்களிலும்,சமூகவலைதளங்களிலும் ஜீ ஆதரவாளர்களை சங்கி என அழைக்கும் பழக்கத்தை விட்டு விட்டேன். ஏனென்றால் அவர்கள் நாளை ஆட்சி மாறியதும் நம் தோளில் கையிட்டு "தோழர்" எனக் கொஞ்சுவார்கள். அந்த அரசிடம் போய் தெண்டனிட்டு "முந்தின பாஜக ஒரு பாசிசக் கட்சி" எனக் கூறுவார்கள். 

இன்னொரு விசயம் அண்மையில் ஜீ எடுத்த பல சர்வாதிகார நடவடிக்கைகள் மீது ஒரு அதிருப்தி, கோபம் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளதை அவரே உணர்ந்துள்ளார்கள். அதனால் தான் ஊடகங்களை மகுடியாகக் கொண்டு  மக்களை கூடுதலாக ஊதி மயக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். இது ஜீயின் அநீதிகளை, பிழைகளை விமர்சிப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் சேதி! 25% என்றாலும் அவர்கள் சொல்வதே மக்கள் மனசாட்சியின் குரல் என ஜீக்குத் தெரியும், அவர் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார் என்றாலும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...