Skip to main content

கொரோனா: தேசம் தழுவிய பீதியும் நிஜமும்




அண்மையில் நடிகர் விவேக் காலமானதை ஒட்டி மன்சூர் அலிகான் அளித்த ஆவேசப் பேட்டியை பார்த்திருப்பீர்கள். தடுப்பூசிக்கும், கொரோனா நோய்த்தொற்று மீதான அச்சத்துக்கும் எதிராக அவர் வைத்த குற்றச்சாட்டுகள், சதித்திட்ட கற்பனைகள் தவறாக பலருக்கும் பட்டது. கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இருந்தாலும், அவர் சொன்னதில் சிறிது உண்மை உள்ளதாகவே எனக்குத் தோன்றியது. இது நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருவது தான் - இதுவரை கொரோனாவால் நேரடியாக மரணமுற்றவர்களில் இளைஞர்கள், 60 வயதுக்குக் குறைவானவர்கள் சொற்பமே. Worldometer இணையதளத்தில் இருந்து புள்ளிவிபரத்தை தருகிறேன்:


கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள்:  15, 061, 919. 

குணமானவர்கள்: 12, 953, 821

இறந்தவர்கள்: 1, 78, 793

அதாவது 80% பிழைத்து விடுகிறார்கள்.   

20% பேர் மட்டுமே மரணமடைகிறார்கள். 


இருந்தும் நாம் ஏன் கொரோனா வந்தால் அடுத்த நிமிடமே மக்கள் விழுந்து துடிதுடித்து இறந்து விடுவார்கள் என அஞ்சுகிறோம்? விபத்திலும், பல்வேறு நோய்களாலும் இதை விட அதிகமானோர் தினசரி இறக்கும் போது ஏன் கொரோனாவுக்கு மட்டும் இவ்வளவு அஞ்சுகிறோம்? 


1. அரசு இதற்கு தனி மதிப்பளிக்கிறது - உலகம் முழுக்க அரசுகள் இதை ஒரு தனி ஆபத்து மிக்க நோய்த்தொற்றாக பார்க்கிறது.

2. மக்கள் இடையே வேகமாக பரவுகிறது. காற்று வழி, தொடுகை வழி பரவும் என்பதால், மக்களால் பேசாமல், தொடாமல் இருக்க முடியாது என்பதால் பரவலைத் தடுப்பது மிக மிக சிரமமாக உள்ளது.

3. கொரோனா ஒரு யுத்தத்தை ஒத்திருக்கிறது - அது ஒரு நாட்டை வெளியில் இருந்து வந்து தாக்குகிறது, அரசு பின்வாங்குகிறது, அனைவரும் ஒரே சமயம் பாதிக்கப்படுகிறார்கள். ஆக யுத்த சமயத்தில் ஏற்படும் பாதுகாப்பின்மை, உயிர்பீதி மக்களுக்கு ஏற்படுகிறது. ஒரே வித்தியாசம் நவீன காலத்தில் யுத்தம் சில நாட்களில், வாரங்களில் முடிவதைப் பார்க்கிறோம். ஆனால் கொரோனா தாக்குதல் வருடக்கணக்காய் நீடிக்கிறது. அதனாலே சில மாதங்கள் கொரோனா இல்லாதது போன்று நிதானமாகிறோம் சில நேரங்களில் அது திடீரென வந்தது போன்றும் நாம் அஞ்சுகிறோம்.

4. கொரோனாவுக்கு என மருந்து ஒன்றில்லை. இதனாலே யாராலும் காப்பாற்றப்படாமல் விடப்படுவோம் எனும் அச்சம் தோன்றுகிறது.


ஆனால் இன்னொரு விசித்திரமும் உள்ளது - நாம் கொரோனாவை மறந்து அன்றாட வாழ்க்கைக்கு திரும்பும் போது அது நம்மை ‘பாதிப்பதில்லை’, பீதி குறைகிறது, எந்த தாக்கமும் இல்லை. அரசு ‘இரண்டாம் அலை’, ‘மூன்றாம் அலை’ என அறிவித்து ஊடகங்களில் செய்தியாகும் போது மக்கள் முகக்கவசம் அணிவது, பரஸ்பரம் அஞ்சுவது அதிகமாகிறது. 


கொரோனா அச்சம் செயற்கையாக உண்டு பண்ணப்படுவது என நான் நம்புவது இதனால் தான் - கொரோனா வந்து நம் அண்டை வீடுகளிலோ நண்பர்கள் மத்தியிலோ யாரும் கொத்துக்கொத்தாய் சாவதை நாம் காணவில்லை. ஜுரம், உடல் வலி என சிலர் அவஸ்தைப்படுகிறார்கள், சிலர் கடுமையான மூச்சுத்திணறலால் அவஸ்தைப்பட்டு மீண்டு வருகிறார்கள். நான் பார்த்தவர்களில் 90% மீண்டு விடுகிறார்கள். இது பெரும்பாலான தொற்று நோய்களுக்கு உரித்தானது தான். ஆம் உத்தர பிரதேசத்தில் கோவிட் மரணங்கள் 2.5 மடங்கு அதிகமாகி உள்ளன. ஆனால் அங்கே மக்கள் அதிக அளவில் சாவது நோயினால் அல்ல, போதுமான சிகிச்சை அளிக்கப்படாததாலே. ஜுரம் வந்தவர்களை ஆஸ்பத்திரிகளில் இருந்து திருப்பி அனுப்புகிறார்கள், ஆம்புலன்ஸை அழைத்தால் வருவதில்லை, எந்த மருத்துவ உதவியும் இல்லாமல் ஆயிரக்கணானோர் சாலையில் செத்து மடிகிறார்கள். சரியான கட்டமைப்பு வசதிகள் உண்டெனில் இந்த மரணங்களை பெருமளவு குறைத்திருக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.

 மன்சூர் அலிகான் இந்த கொரோனா காலங்காலமாக இங்கு இருந்து வந்தது தான் என வெள்ளந்தியாக சொன்ன போது குறித்தது இதைத் தான். இது ஒரு சாதாரண ஜுரம் அல்ல, அதே சமயம் இது ஒரு அசாதாரணமான நோய்த்தொற்றும் அல்ல. இதை நம்மால் சமாளிக்க முடியும், ஆரோக்கியமானவர்களில் பெரும்பாலானவர்கள் மீள முடியும். ஆம் பல்லாயிரம் பேர் தினம் தினம் தொற்றுக்குள்ளாவார்கள், ஆனால் சில வாரங்களில் சிறிய, பெரிய பாதிப்புகளுடன் மீண்டும் விடுவார்கள். அவர்கள் பாட்டுக்கு தம் வேலையை பார்த்துக் கொண்டு செல்ல முடியும்.


நான் இந்த கொரோனா நோய்த்தொற்று துவங்கிய போது இந்நோயை விட நாம் அதிகம் அஞ்ச வேண்டியது பொருளாதார இழப்புகளைத் தான் எனச் சொன்னேன். அதுவே நடந்தது: கொரோனா நோய்த்தொற்று மிக மோசமாக தாக்கியது நமது வாழ்நிலையை, வணிகத்தை, வேலைப் பாதுகாப்பைத் தான். இதை உணர்ந்தே இந்த இரண்டாம் அலையின் போது நள்ளிரவில் பிரதமர் தோன்றி முழு லாக் டவுனை அறிவிக்காமல் இருக்கிறார். அவருக்கே புத்தி வந்து விட்டது.

 15 கோடி பேர் குழுமுகிற கும்ப மேளா, தேர்தல் பரப்புரை கூட்டங்களை நாம் தவிர்த்திருக்க வேண்டும். மற்றபடி ஓரளவுக்கு உஷாராக நாம் அன்றாட வேலைகளில் ஈடுபடுவதால் பெரிய ஆபத்துக்கள் விளையப் போவதில்லை. தேவையில்லாத ஒரு பீதி நம்மை உருக்குலைத்து வருகிறது. இப்போது அரசு கொரோனாவைக் கையாள்வதைப் போன்றே ஆரம்பத்திலே செய்திருந்தால், பல மாத லாக்டவுனை தவிர்த்திருந்தால், பல லட்சம் பேர் வேலையிழந்து தெருவுக்கு வந்ததை தவிர்த்திருக்கலாம். சிறுவியாபாரிகள் பிச்சைக்காரர்கள் ஆனதைத் தவிர்த்திருக்கலாம். பீதியைக் கிளப்பும் மருத்துவர்களுக்கு செவிசாய்ப்பதை குறைத்திருத்திருந்தால் நிலைமை இன்னும் சீராக இருந்திருக்கும். 

தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க இன்னும் சில வருடங்கள் ஆகும், அப்போது மற்றொரு நோய்த்தொற்று தோன்றினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.


இந்த நாடு கொரோனா தொற்றால் அல்ல பீதியாலே அதிகம் சீரழிந்தது என்பதே உண்மை. இதைத் தான் மன்சூரும் தன் வெள்ளந்தியான பேச்சுவழக்கில் சொல்ல வந்தார்.

Comments

Vijayashankar said…
Death rate is 1.1% only. But even that is worst than the 1.9% Death rate among smokers!

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...