Skip to main content

அதிமுகவின் சுழல்வட்டப்பாதை

 




நேற்று பழைய அதிமுக வரலாற்றைப் பற்றி ஒரு நண்பருடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தேன், குறிப்பாக எம்.ஜி.ஆர் மறைவை ஒட்டி நிகழ்ந்தவை. ஒரு ஆச்சரியம் இன்று பாஜக அதிமுகவுக்கு செய்து கொண்டிருப்பதை எண்பதுகளிலேயே காங்கிரஸ் இதே அதிமுகவுக்கு செய்திருக்கிறது என்பது:


 எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கையில் ஜெயா காங்கிரஸ் தலைமையுடனான ஒரு புரிந்துணர்வுடன் செயல்படுகிறார் என ஜானதி கோஷ்டி நினைத்தது, அவர்கள் இதை ஓரளவுக்கு எம்.ஜி.ஆரையும் நம்ப வைத்தார்கள் என நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் அமெரிக்காவுக்கு சிகிச்சை பெற்று திரும்பி, பின் தொடர்ந்து சிகிச்சையில் இருக்க நேர்ந்தது. அப்போது அவர் ஜானகி மீது அதிகம் நம்பிக்கை கொள்ள நேர்கிறது. இந்த சந்தர்பத்தில் அவர் காலமாக ஜானகி தரப்பு கட்சித் தலைமையையும் அதிகாரத்தையும் கைப்பற்றுகிறது. ஆனால் ஜெயலலிதா நம்பிக்கையுடன் இதற்கு எதிராக போராடுகிறார். யார் கொடுத்த நம்பிக்கை? மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தலைமை அளித்த நம்பிக்கை தான். ஆனால் காங்கிரசார் அப்போது ஜானகி வலுவாக அதிமுகவை தன் வசம் கொண்டு வருவார் என எதிர்பார்க்காததால், ஜெயா தனக்கே ஆட்சிக்கட்டில் அளிக்கப்படும் என எதிர்பார்த்தது போல உடனடியாக நடக்கவில்லை. இழுபறி. ஜெயலலிதா தன் ஆதரவு எம்.எல்.ஏக்களை இந்தூரில் ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கிறார். ஜானகி தரப்பு எம்.எல்.ஏக்களை சென்னையில் ஐந்து நட்சத்திர விடுதியில் அதிக வசதிகளுடன் சிறை வைக்கிறது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தலைமை ஜானகி ஆட்சி அமைக்க சம்மதம் நல்க ஆளுநர் ஏற்கிறார். 1988 ஜனவரி முதல் வாரம் ஜானகி முதல்வர் ஆகிறார். 24 நாட்களே நீடிக்கிறார். சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வன்முறை சம்பவங்கள், குழப்படிகள் நிகழ, சபாநாயகர் ஜானகி தரப்புக்கு சாதகமாக தீர்ப்பளிக்க, மத்திய அரசு ஆடையைக் கலைக்கிறது. அதுவரை ஜானகி தரப்பு ஆட்சிக்கட்டிலில் இருக்கட்டும் என அனுமதித்த காங்கிரஸ் தலைமை ஒரு யுடர்ன் எடுக்கிறது. அதன் பின்னர் நடந்த தேர்தலில் ஜெயா தரப்பு அதிமுக அதிக இடங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக ஜானகி பூஜ்யமாகி மொத்த கட்சிப் பொறுப்பு, அதிகாரத்தையும் ஜெயாவிடம் கொடுத்தது, அதற்கடுத்து திமுக ஆட்சி கலைக்கப்பட்டது, தேர்தலின் போது ராஜீவ் காந்தி படுகொலையினால் விளைந்த திமுக எதிர்ப்பலையை பயன்படுத்தி காங்கிரஸ்-அதிமுக கூட்டணி வென்றது, ஜெயா முதல்வரானது் அனைவரும் அறிந்த வரலாறு. 

அதிமுகவின் ஒரு பிரச்சனை அது ஒற்றை தலைமையை நம்பி இருந்த கட்சி, கட்சித் தலைவர் காலமானால் தலைமைக்கு வருவதற்கு அவருக்கு தகுந்த குடும்ப வாரிசோ வலுவான குடும்ப பின்னணியோ இருந்ததில்லை என்பது. அது மட்டுமல்ல எப்போதுமே - திமுகவுடன் ஒப்பிடுகையில் - அதிமுகவின் தலைவர்களுக்கு ஆயுள் குறைவு. தலைமையின் உடல்நிலை மோசமானதுமே மத்தியில் உள்ள தலைமை அதிமுகவை கைப்பற்றுவதற்கான காய்நகர்த்தல்களை ஆரம்பித்து விடுகிறது. ஒரே சமயம் இரண்டு மூன்று தலைமைகளை அதிமுகவில் உருவாக்கி அதை உடைத்து முழுக்க தம் வசம் கொண்டு வந்து தம் கைப்பாவையாக வைத்து ஆட வைக்கிறார்கள். அன்று ஜானகி-ஜெயா தலைமை இருமை என்றால் இன்று ஜெயாவின் மறைவுக்குப் பின் ஒ.பி.எஸ்-எடப்பாடி இருமை. இருவரையும் பரஸ்பரம் கோள் மூட்டி மோத விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள், தேவைப்படும் போது அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து மற்றவரை சமாதானப் போகத் தூண்டுகிறார்கள். பிறகு அதிகாரத்தில் இருப்பவர்கள் தமக்கு முழுக்க அடங்க வில்லை என்றால் எதிர்தரப்புக்கு தூபம் போட்டு அவர்களை வலுப்படுத்தி மோத விடுவார்கள். நெருக்கடியில் அதிகாரத் தரப்பு நடுவண் அரசின் காலில் விழும் போது சசிகலாவைப் போல ஒரு மூன்றாவது தரப்பை கூட கொண்டு வந்து ஆட்டத்தை சிக்கலாக்கி குட்டையை குழப்புவார்கள். அதுமட்டுமல்ல, எப்படி சசி தான் ஜெயாவைக் கொன்றார் என புரளி கிளம்பியதோ அன்றும் அப்படியே அன்றும் எம்.ஜி.ஆரைக் கொன்றது ஜெயா என பேச்சு இருந்தது. அது மட்டுமல்ல, 1984இல் எம்.ஜி.ஆருக்கு ஸ்டுரோக் வந்து விட தளர்ந்து போகிறார். அப்போது ஜெயா (மத்திய அரசின் உதவியுடன்) ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயன்றதாகவும் ஒரு பேச்சு உண்டு. ஜெயாவின் இறுதிக் கட்டத்தில் அவர் மோசமான உடல்நிலையில் இருந்ததால் சசியே பின்னணியில் நின்று தமிழகத்தை நிழல் ஆட்சி செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பேச்சையெல்லாம் அப்போது கிளப்பி விட்டது மத்தியில் இருந்த சூத்திரதாரிகளோ எனத் தோன்றுகிறது. இப்போதும் தான்.

 

இந்த வரலாற்றின் ஒரு சிறிய பகுதியாக அன்று இருந்ததனால் தான் சசிகலா ஜெயாவின் மரணத்துடன் எம்.எல்.ஏக்களை தன் வசம் கொண்டு வருதல், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை, ஜெயாவின் பிம்பத்தின் நீட்சியாக தன்னை வடிவமைத்தல், அடுத்த முதல்வராக காட்டிக் கொள்ளுதல் என காட்சிகளை அரங்கேற்றினார். ஆனால் காங்கிரஸ் அன்று கட்சியை உடைத்து பலவீனப்படுத்தியதைப் போல அல்லது அதை விட மோசமாக தன் கால அதிமுகவுக்கு நிகழும் என சசி எதிர்பார்க்கவில்லை; அல்லது அவருடைய மனக்கணக்குகளை மீறி வரலாறு சென்று விட்டது. மேலும் ஜெயா அளவுக்கு அவருடைய தோழிக்கு மக்கள் ஆதரவோ புகழோ மதிநுட்பமோ இல்லை.


எண்பதுகளில் இந்த திரைமறைவு அரசியலின் சூத்திரதாரியாக இருந்த ராஜீவ் அடுத்து வந்த தேர்தலின் போது கொல்லப்பட்டதும், அதன் பலனை பயன்படுத்தி ஜெயா முதல்வர் ஆனதும் யாரும் அன்று எதிர்பார்த்திராத டிவிஸ்ட். அப்படி ஒரு அதிர்ஷ்டம் இம்முறை அதிமுக தலைமைக்கு அமையவில்லை. அதே போல இன்று பாஜக அதிமுகவை முழுக்க தம் வசப்படுத்தி, திமுகவை இல்லாமல் செய்து விரைவில் அந்த வெற்றிடத்தில் ஆட்சியை அமைககலாம் என வெளிப்படையாக கனவு காணும் அளவுக்கு கொடூரமாக அன்றைய காங்கிரஸ் இருக்கவில்லை; அல்லது அவர்களுக்கு இவர்களுடைய திராணியோ வெட்கமானமற்ற முரட்டுத்தனமோ இல்லை.


ஒரே சுழல்வட்டப்பாதை தான் - அதில் அதிமுக திரும்பத் திரும்ப மாட்டிக் கொள்கிறது! விடிவே இல்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...