Skip to main content

மேற்கு வங்க வன்முறை எனும் ரியாலிட்டி ஷோ




மேற்கு வங்க தேர்தலை ஏன் இவ்வளவு தீவிரமாக பாஜக எடுத்துக் கொண்டது என ஒரு கட்டுரையில் வினவும் முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஒரு சுவாரஸ்யமான பார்வையை அளிக்கிறார். அவருடைய கருத்துப்படி, இந்த சட்டமன்ற தேர்தலில் மமதா வென்றால் 2024 தேர்தலில் மோடிக்கு போட்டியாக அவர் உருக்கொள்வார் என மோடியும் ஷாவும் அஞ்சுகிறார்கள். அதனால் தான் “திதி ஓ தீதி” என பொதுமேடையில் பகடி செய்யும் அளவுக்கு நமது ஜி சென்றார். மேற்கு வங்கத் தேர்தலில் தோல்வி அடைந்த பாஜகவுக்கு அது கடும் ஏமாற்றமாகியது - ஒரு மாநிலத்தை இழந்து விட்டோம் என்றல்ல, தேசம் முழுக்க மமதா புகழப்படுவதை, பாஜகவை அவர் தனியாக நின்று முறியடித்ததாக பெயர் பெறுவதை பாஜகவால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் தான் மே.வங்கத்தில் நடந்த சில வன்முறை சம்பவங்களை பெரிதாக்கி, பாஜகவும் பல தாக்குதல்களை தொடுத்தது; இரு தரப்பிலும் கட்சிக்காரர்கள் கொல்லப்பட்டார்கள். 


இது நடந்து கொண்டிருக்கும் போது பாஜகவின் ஐ.டி கிளை, வாட்ஸாப் போராளிகள் மிகப்பெரிய அளவில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்: “மே.வங்கம் எரிகிறது, அங்கு ஜனாதிபதி ஆட்சி வேண்டும், ராணுவம் அனுப்பப்பட்டு வன்முறை செய்யும் திரிணாமூல் கட்சியினர் கொல்லப்பட வேண்டும்; அங்கு ஜீ தனது குஜராத் 2000 ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டும்” என்று பலவிதமாக சமூகவலைதளங்களில் கூப்பாடு இட்டனர். உயிருடன் இருப்பவர்களின் படங்களை பிரசுரித்து அவர்கள் திரிணாமூல் கட்சியினரால் கொல்லப்பட்டதாக, பொய்ப்பெயருடன் செய்திகளை பரப்பினர். அப்படி அடையாளம் காணப்பட்டவர்கள் தாம் உயிருடன் இருப்பதாக அம்பலப்படுத்தினர். கடந்த வருடம் ஒரு தனிப்பட்ட மோதலில் ஒரு பெண் தாக்கப்பட்ட காணொலியை எடுத்து திரிணாமூல் கட்சியினர் பாஜகவை சேர்ந்த பெண்ணொருவரை அடிப்பதாக திரித்து வெளியிட்டனர். இந்துக்களின் பெரும் திரள் மமதாவின் கட்சியினரால் கொலைக்களத்துக்கு அனுப்படுவோம் எனும் அச்சத்தில் உள்ளதாக எழுதினர். இத்துடன் நிற்காமல் மத்திய அரசு இது சம்மந்தமாக மமதாவுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பியது. ஆளுநர் எச்சரித்தார். பாஜகவின் நட்டா உடனே நிலைமையை பார்வையிட கிளம்பி சென்றார். பாஜக தோற்கடிக்கப்பட்டது, மமதாவை தேர்ந்தெடுத்த மக்கள் ஜியை நிராகரித்து விட்டார்கள் எனும் கதையாடலை மாற்றி எழுதத்தான் இந்த பராக்கிரம முயற்சிகள் அத்தனையும்.


ஆம், வன்முறை நடந்தது தான். அதில் திரிணாமூலின் பங்கும் உண்டு தான். ஆனால் பாஜக சித்தரிப்பது போல அம்மாநிலம் போர்க்களமாகவில்லை. பாதிக்கு மேல் பொய்ப்புரட்டுகள், போலி காணொளிகள், இல்லாதவர்களின் படங்களையும் கொண்டு தாம் இந்த போர்க்களத்தை பாஜக கட்டியெழுப்பியது. ஆனால் தில்லியில் இருந்து செய்யும் இந்த ஊடக அரசியலைக் கொண்டு மக்கள் மனத்தை வெல்ல முடியாது என ஏற்கனவே மே.வங்க மக்கள் நிரூபித்து விட்டார்கள். ஆனால் இம்முறை பாஜக மமதாவின் பிம்பத்தை குலைக்க முயன்றது வங்காளிகளிடம் அல்ல, மொத்த இந்தியர்களிடமுமே. இது நமக்கான ஆக்‌ஷன் படம். ‘ஜி தான் உங்களுடைய ஒரே சரணாகதி, வேறு மாற்றே இல்லை’ என அவர்கள் நம் தலையில் அடித்து சத்தியம் பண்ண விரும்புகிறார்கள். அதற்காக இல்லாதவர்கள் செத்துப் போனார்கள் என்றோ, தனிப்பட்ட பிரச்சனைகளில் அடிபட்ட பெண்கள் எல்லாம் தம் கட்சியினர் என்றோ பொய்ச்செய்தி பரப்பிட, வங்க மண்ணில் ரத்தம் சிந்தி, நெருப்பை பரப்பிட அவர்கள் தயங்க மாட்டார்கள். இந்த நாடே ஒரு பெரிய சினிமா ஸ்டுடியோ. பாகுபலி சினிமா செட். அங்கு நாளொரு படக்காட்சியை அரங்கேற்ற வேண்டும், அதுவே நிர்வாகம் என பாஜக நம்புகிறது. இந்திய வரலாற்றில் இப்படி ஒரு விசித்திரமான ரியாலிட்டி ஷோ கட்சி வேறு இருந்ததில்லை. எண்டமோள் புரொடெக்‌ஷன்ஸ் எல்லாம் உங்களிடம் பிச்சை எடுக்க வேண்டுமய்யா!


இவ்வளவும் நடந்து முடிய மமதா ஆட்சிக்கு வந்து ஒரு நாளே ஆகியிருந்தது.

Comments

Ram said…
அபிலாஷ், அப்டியே ஆழி செந்தில்நாதனின் யூடியூப் காணொலி நல்ல விளக்கம் அளித்திருக்கிறார்.... பஜக தோல்வி பற்றி....

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...