Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மேற்கு வங்க வன்முறை எனும் ரியாலிட்டி ஷோ




மேற்கு வங்க தேர்தலை ஏன் இவ்வளவு தீவிரமாக பாஜக எடுத்துக் கொண்டது என ஒரு கட்டுரையில் வினவும் முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஒரு சுவாரஸ்யமான பார்வையை அளிக்கிறார். அவருடைய கருத்துப்படி, இந்த சட்டமன்ற தேர்தலில் மமதா வென்றால் 2024 தேர்தலில் மோடிக்கு போட்டியாக அவர் உருக்கொள்வார் என மோடியும் ஷாவும் அஞ்சுகிறார்கள். அதனால் தான் “திதி ஓ தீதி” என பொதுமேடையில் பகடி செய்யும் அளவுக்கு நமது ஜி சென்றார். மேற்கு வங்கத் தேர்தலில் தோல்வி அடைந்த பாஜகவுக்கு அது கடும் ஏமாற்றமாகியது - ஒரு மாநிலத்தை இழந்து விட்டோம் என்றல்ல, தேசம் முழுக்க மமதா புகழப்படுவதை, பாஜகவை அவர் தனியாக நின்று முறியடித்ததாக பெயர் பெறுவதை பாஜகவால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் தான் மே.வங்கத்தில் நடந்த சில வன்முறை சம்பவங்களை பெரிதாக்கி, பாஜகவும் பல தாக்குதல்களை தொடுத்தது; இரு தரப்பிலும் கட்சிக்காரர்கள் கொல்லப்பட்டார்கள். 


இது நடந்து கொண்டிருக்கும் போது பாஜகவின் ஐ.டி கிளை, வாட்ஸாப் போராளிகள் மிகப்பெரிய அளவில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்: “மே.வங்கம் எரிகிறது, அங்கு ஜனாதிபதி ஆட்சி வேண்டும், ராணுவம் அனுப்பப்பட்டு வன்முறை செய்யும் திரிணாமூல் கட்சியினர் கொல்லப்பட வேண்டும்; அங்கு ஜீ தனது குஜராத் 2000 ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டும்” என்று பலவிதமாக சமூகவலைதளங்களில் கூப்பாடு இட்டனர். உயிருடன் இருப்பவர்களின் படங்களை பிரசுரித்து அவர்கள் திரிணாமூல் கட்சியினரால் கொல்லப்பட்டதாக, பொய்ப்பெயருடன் செய்திகளை பரப்பினர். அப்படி அடையாளம் காணப்பட்டவர்கள் தாம் உயிருடன் இருப்பதாக அம்பலப்படுத்தினர். கடந்த வருடம் ஒரு தனிப்பட்ட மோதலில் ஒரு பெண் தாக்கப்பட்ட காணொலியை எடுத்து திரிணாமூல் கட்சியினர் பாஜகவை சேர்ந்த பெண்ணொருவரை அடிப்பதாக திரித்து வெளியிட்டனர். இந்துக்களின் பெரும் திரள் மமதாவின் கட்சியினரால் கொலைக்களத்துக்கு அனுப்படுவோம் எனும் அச்சத்தில் உள்ளதாக எழுதினர். இத்துடன் நிற்காமல் மத்திய அரசு இது சம்மந்தமாக மமதாவுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பியது. ஆளுநர் எச்சரித்தார். பாஜகவின் நட்டா உடனே நிலைமையை பார்வையிட கிளம்பி சென்றார். பாஜக தோற்கடிக்கப்பட்டது, மமதாவை தேர்ந்தெடுத்த மக்கள் ஜியை நிராகரித்து விட்டார்கள் எனும் கதையாடலை மாற்றி எழுதத்தான் இந்த பராக்கிரம முயற்சிகள் அத்தனையும்.


ஆம், வன்முறை நடந்தது தான். அதில் திரிணாமூலின் பங்கும் உண்டு தான். ஆனால் பாஜக சித்தரிப்பது போல அம்மாநிலம் போர்க்களமாகவில்லை. பாதிக்கு மேல் பொய்ப்புரட்டுகள், போலி காணொளிகள், இல்லாதவர்களின் படங்களையும் கொண்டு தாம் இந்த போர்க்களத்தை பாஜக கட்டியெழுப்பியது. ஆனால் தில்லியில் இருந்து செய்யும் இந்த ஊடக அரசியலைக் கொண்டு மக்கள் மனத்தை வெல்ல முடியாது என ஏற்கனவே மே.வங்க மக்கள் நிரூபித்து விட்டார்கள். ஆனால் இம்முறை பாஜக மமதாவின் பிம்பத்தை குலைக்க முயன்றது வங்காளிகளிடம் அல்ல, மொத்த இந்தியர்களிடமுமே. இது நமக்கான ஆக்‌ஷன் படம். ‘ஜி தான் உங்களுடைய ஒரே சரணாகதி, வேறு மாற்றே இல்லை’ என அவர்கள் நம் தலையில் அடித்து சத்தியம் பண்ண விரும்புகிறார்கள். அதற்காக இல்லாதவர்கள் செத்துப் போனார்கள் என்றோ, தனிப்பட்ட பிரச்சனைகளில் அடிபட்ட பெண்கள் எல்லாம் தம் கட்சியினர் என்றோ பொய்ச்செய்தி பரப்பிட, வங்க மண்ணில் ரத்தம் சிந்தி, நெருப்பை பரப்பிட அவர்கள் தயங்க மாட்டார்கள். இந்த நாடே ஒரு பெரிய சினிமா ஸ்டுடியோ. பாகுபலி சினிமா செட். அங்கு நாளொரு படக்காட்சியை அரங்கேற்ற வேண்டும், அதுவே நிர்வாகம் என பாஜக நம்புகிறது. இந்திய வரலாற்றில் இப்படி ஒரு விசித்திரமான ரியாலிட்டி ஷோ கட்சி வேறு இருந்ததில்லை. எண்டமோள் புரொடெக்‌ஷன்ஸ் எல்லாம் உங்களிடம் பிச்சை எடுக்க வேண்டுமய்யா!


இவ்வளவும் நடந்து முடிய மமதா ஆட்சிக்கு வந்து ஒரு நாளே ஆகியிருந்தது.

Comments

Ram said…
அபிலாஷ், அப்டியே ஆழி செந்தில்நாதனின் யூடியூப் காணொலி நல்ல விளக்கம் அளித்திருக்கிறார்.... பஜக தோல்வி பற்றி....

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...