இதுவரை ஒ.என்.வி விருதைப் பெற்றவர்களின் பட்டியலைப் பார்த்தாலே வைரமுத்துவின் தேர்வு எவ்வளவு அபத்தம் எனப் புரியும். எம்.டிக்கும் வைரமுத்துவுக்கும் ஏணி வைத்தால் எட்டுமா? சுகதகுமாரியின் கவிதைக்கும் வைரமுத்துவின் கற்பனாவாத வானம்பாடி எழுத்துக்கும் என்ன ஒப்பீடு?சுகதகுமாரியின் கவிதைகளில் தாள லயம் உண்டு. அவர் மரம், சிறகுகள் போன்ற உருவகங்களை பயன்படுத்துவார். ஆனால் அவருடைய கவிதைகள் நுட்பமானவை, சற்று சிக்கலானவை. தாகூரின் கவிதைகளுடன் ஒப்பிடத்தக்கவை. வைரமுத்துவை பக்கத்திலேயே வைக்க முடியாது.
மேலும், எம்.டி, சுகதகுமாரி இறுதி வரை இலக்கியமே உலகம் என்றிருந்தவர்கள். வைரமுத்து இலக்கியத்தில் இருந்து விடைபெற்று பல வருடங்கள் ஆகின்றன. அவரை நாம் அவரது மகத்தான திரைப்பாடல்களுக்காக கொண்டாடுகிறோம். முத்துக்குமார் விசயத்தில் நடந்தது போல திரைப்பாடலை இலக்கியமாக நாம் குழப்பிக் கொள்ளலாகாது. இதைத் தான் சாருவும் வலியிறுத்துகிறார்...
வைரமுத்துவை விட, இந்த விருதைப் பெற தகுதியான கவிஞர்கள் நூறு பேராவது தமிழில் இருக்கிறார்கள்!
Comments