Skip to main content

கிஷோர் கே சாமியும் ‘அறிவுஜீவிகளும்’



கிஷோர் கே சாமிக்காகவெல்லாம் அறிவுஜீவிகளில் சிலர் பேசுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் செய்கிற சில பிழைகள்:


1) ஆதிக்கவாதத்துக்கு எதிராக செயல்படும் போராளிகள், எழுத்தாளர்கள் மீது அரசும் வலதுசாரிகளும் தொடுக்கும் ஒடுக்குமுறையை கிஷோரின் கைதையும் பொதுமைப்படுத்துவது. இதை விட மோசமாக நீங்கள் மக்கள் போராளிகளை அவமதிக்க முடியாது. ஒரு மனித உயிர் என்பதைத் தாண்டி எந்த மரியாதையும் உரிமையும் கிஷோருக்குக் கிடையாது.


2) அவதூறு சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும் என ஜல்லியடிப்பது. அதாவது சுலபத்தில் வெளிவரும்படி வழக்கை ஜோடித்திட வேண்டுமாம். என்ன சட்டம் என்பது முக்கியமல்ல - கிஷோர் இதுவரை செய்துள்ள அத்தனை அநீதிகளுக்குமான - பெண்களை தொடர்ந்து அவமதிப்பது, சாதி மேலாதிக்கத்தை தூக்கிப்பிடிப்பது, தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படுவது, தனிப்பட்ட பாலியல் அவமதிப்புகளில் ஈடுபட்டு மிரட்டுவது என மிக நீண்ட பட்டியல் - மொத்தமான ஒரு சவுக்கடியாகவே இந்த கைதை பார்க்கிறோம். இத்தனை நாட்களாய் பாஜகவினர், அதிமுக அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளின் துணையுடன் அவன் ஜம்பமாக குற்றங்களை செய்தான். இப்போது அரவணைக்க ஆளில்லாததால் உள்ளே போகிறான். சசிகலாவை ஒரு கட்சித்தலைவியாக பார்ப்பது போலத்தான் கிஷோரை போராளியாக்கி அழகு பார்த்து அவனுடைய உரிமைக்காக பேசுவது. அரசியல்ரீதியாக இது தவறு.


3) அவதூறை இதுவரை திமுக செய்ததில்லையா, இவர் செய்யலையா, அவர் செய்யலையா என்பது ஒரு அபத்தம். அவதூறு என்பது பெயரளவிலானது தான் - ஆனால் அவனுடைய கைது அதற்கானது மட்டுமல்ல. அதனால் பேஸ்புக்கில் அமித் ஷாவை பகடி செய்தவனையும் கிஷோரையும் ஒப்பிட முடியாது. இறந்து போன தீப்பொறி ஆறுமுகத்தைக் காட்டி கேள்வி கேட்பதும் நியாயமல்ல. இப்போது உயிருடன் உள்ள திமுக பேச்சாளர்களில் யாராவது எதிர்க்கட்சியினரின், பத்திரிகையாளர்களின் பாலியல் வாழ்க்கை பற்றி அவதூறு பரப்புவது, சாதி துவேசத்துடன், மதவெறியுடன் தொடர்ந்து பேசுவது என செயல்பட்டால் சொல்லுங்கள். அவர்களையும் கைது செய்யக் கேட்போம். ஆனால் அதற்காக கிஷோரை ‘தியாகியாக’ முடியாது.


4) மாரிதாஸ் புள்ளிவிபரங்களுடன் பேசுகிறார் என்பதும் ஏற்கத்தக்கது அல்ல. அவர் முழுக்க முழுக்க மதவெறியைத் தூண்டும் விசயங்களையே பேசுகிறார். அல்லது சந்தேகத்துக்குரிய பாஜக வாட்சப் போலி செய்திகள உண்மை என்பதாக திரித்து பரப்புகிறார். பாஜகவினரும், அக்கூட்டணியை ஆதரிக்கும் அதிமுக ஆதரவளர்களும், பாஜகவை எதிர்க்கும் அதிமுகவினருமே மாரிதாஸின் இந்த பேச்சுகளை ரசிக்கிறார்கள். இந்துத்துவாவை பேசலாம், ஆனால் அதை தர்க்கரீதியாக தரவுகளுடன் பேச வேண்டும். அதை செய்யாத வரையில் மாரிதாஸின் வாயை மூடுவது அவசியம். அவருடைய யுடியூப் சேனலை தடை செய்ய வேண்டும். அதையும் மீறி அவர் பேசினால் அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப வேண்டும். 


5) மக்களுக்கு எதிராகப் பேசுவது, மக்களின் ஆதரவின் அடிப்படையில் அமைந்த ஆட்சியை கலைத்து விடுவோம் என மிரட்டுவது, மதவெறியை, பிரிவினையை தூண்டும் விதமாக பிரச்சாரம் செய்வது, சாதி ஆதிக்கத்தை முன்னெடுப்பது, பெண்களை பொதுவெளியில் அவதூறு செய்து மிரட்டுவது ஆகிய காரணங்களுக்காக ஒருவரை கைது செய்யக் கேட்டால் “திமுகவுக்கு எதிராகப் பேசியதால் கைது” என திரிப்பதே நடுநிலை குமார்களின் வேலையாக இருக்கிறது.  இந்த முறை கிஷோருக்கு எதிராக போடப்பட்ட வழக்கும், அதை செய்தி ஊடகங்கள்  முன்வைத்த விதமும் அவர்களுக்கு  வசதியாகப் போய் விட்டது. நாம் கவனிக்க வேண்டியது கிஷோர் கைதின் உண்மையான நோக்கம் திமுக எதிர்ப்பு அல்ல என்பது தான்  - அது அவனை இப்போது உள்ளே வைப்பதற்கான ஒரு சாக்கு மட்டுமே.

Comments

Ram said…
அபிலாஷ், தெரு கூட்டத்தில் அவதூறு (உண்மையானாலும்) கூறுவது அன்றோ அல்லது நாளையோ விளைவை குடுக்கும்.... அந்த பயம் இல்லாததால் வசதியாக இருளில் அமர்ந்து கொண்டு பிறர் மீது வெளிச்சம் பாய்ச்சுவது விவேகம் அல்ல....

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...