Skip to main content

நீரிழிவு ரிவர்ஸல் எனும் ஏமாற்று


ரிவர்ஸல் பேக் எனும் பிட்னஸ் நிறுவனத்தின் யுடியூப் விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். அதில் பல “மாடல்கள்” தோன்றி எனக்கு நீரிழிவு நோய் போய் விட்டது (I am free of diabetes now) எனப் பேசுகிறார்கள். இதே போன்று வேறு பல விளம்பரங்களையும், காணொலிகளையும் கண்டிருக்கிறேன். இதையெல்லாம் நம்பாதீர்கள்: 

1) நீரிழிவை கட்டுப்படுத்தத் தான் முடியுமே ஒழிய, நிரந்தரமாக குணப்படுத்துவது சாத்தியமில்லை. 


2) கணையத்தை மாற்று அறுவை செய்து கொண்டால் ஒருவேளை தீர்வு கிடைக்கலாம். ஆனால் அது மிகவும் செலவு பிடித்தது, அதற்கான ரிஸ்கும் உண்டு.


3) குடலின் நீளத்தைக் குறைத்து, வயிற்றை சுருக்கித் தைக்கும் bariatric சிகிச்சை பண்ணிக் கொண்டோருக்கு எதிர்பாரா விதமாக நீரிழிவு குணமாவது உண்டு.


4) இந்த தீவிரமான அரிதான சாத்தியங்களை ஒழித்துப் பார்த்தால் நீரிழிவை ரிவர்ஸ் செய்கிறேன் பேர்வழிகள் சொல்வது சுத்தப் பொய். 


5) நீங்கள் டைப் 1 நீரிழிவாளர் என்றால், ஒருநாளை நூறு யூனிட்டுகளுக்கு மேல் இன்சுலின் எடுப்பவர் என்றால் அதை 10-20 என குறைக்கலாம். எப்படி? உண்ணாநோன்பின் வழி - One meal a day என்கிறார்களே அந்த வழியில் நாளொன்றுக்கு ஒரே ஒரு வேளை குறைவான கலோரிகள் சாப்பிட்டால் இன்சுலினையும் குறைவாக எடுத்துக் கொண்டு நீரிழிவின் மோசமான விளைவுகளை தவிர்க்கலாம். (பசி, சோர்வு, தொடர்ந்து சிறுநீர் கழிப்பது துவங்கி கண்பார்வை, கை, கால்களை இழப்பது வரை) இதுவொன்றும் புதிதல்ல, 1920 களிலேயே மருத்துவர்கள் இதை வெற்றிகரமாக முயன்று பார்த்திருக்கிறார்கள். நிறைய பேரால் பசியைத் தாங்க முடியாது என நினைத்து இதை பொதுவெளியில் மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை.


6) அடுத்து, மூன்று வேளை சேலட், கொழுப்பை மட்டும் சாப்பிட்டு இன்சுலின் அளவை 60-70% குறைக்கலாம் என நினைக்கிறேன் (பேலியோ டயட்).


7) எடை குறைப்புக்கும் இன்சுலின் சென்சிட்டிவிட்டிக்கும் தொடர்புண்டு (அதாவது எடை குறைந்தால் இன்சுலினையும் குறைக்கலாம்) என ஆய்வுகள் சொல்லுகின்றன. ஆனால் இந்த வித்தியாசம் மிகச் சொற்பமானதே. அடிப்படையில் உள்ளே போகும் உணவின் அளவும், வகைமையுமே ரத்த சர்க்கரையின் சூத்திரதாரி.


8. இதே தர்க்கப்படி, ஒருவரது உடலுழைப்பு, உடற்பயிற்சியின் அளவுக்கும், அவருடைய கட்டுடலுக்கும் அவருடைய ரத்த சர்க்கரைக்கும் தொடர்பில்லை. நான் மாணவனாக இருக்கும் போது தாம்பரத்தில் ஒரு ஜிம்முக்கு சென்றேன். அதை நடத்தி வந்த 40 வயது மாஸ்டர் புரூஸ்லீயைப் போல கட்டான தசைகளுடன் இருப்பார். அவர் 16 வயதில் இருந்தே நீரிழிவுடன் போராடி வந்தார்.


9) டைப் 2 நீரிழிவாளர்கள் ஒருவேளை இந்த டயட் முறைகளில் மாத்திரைகளை நிறுத்த முடியலாம். ஆனால் அதுவும் தற்காலிகமே. நமது உடல் பல மாயங்களை செய்யக் கூடியது. உடலில் வேறேதாவது பிரச்சனை ஏற்பட்டு அதனால் சர்க்கரை அளவு ஏறி இறங்கலாம். ஆனால் டைப் 2வை பொறுத்தமட்டில் மருந்தின்றி வாழ்வது சாத்தியமே. அதே நேரம் இதை “ரிவர்ஸல்” எனச் சொல்லி ஏமாற்றுவது நியாயமல்ல. ஒருவேளை ஒரே ஒரு தேநீர் சாப்பிட்டாலே இந்த “ரிவர்ஸல்” சோலி முடிந்து விடும். 


10) ரிவர்ஸலை நம்புவதைப் போன்றே மருந்தால் மட்டுமே நீரிழைக் கட்டுப்படுத்தலாம் என நினைப்பதும் மோசமான விளைவுகளைத் தரும். உடல் எடை கூடிக் கொண்டே போகும். ஒருவித லேசான மயக்க நிலை தொடரும். மாத்திரைகளில் இருந்து இன்சுலினுக்கு “முன்னேறி” 20-30 யூனிட்டுகளில் இருந்து 150-180 யூனிட்டுகள் வரை எடுக்கும் நிலை வரலாம். இது பெட்ரோல் லீக் ஆகும் வண்டியில் மேலும் மேலும் பெட்ரோல் நிறைப்பதற்கு சமமான வியர்த்தமான வேலை என்று சொல்வார்கள். அதற்குப் பதில் குறைவான பெட்ரோலில் வண்டியை ஓட்டப் பழகுவதும், மாற்று எரிசக்தியை நாடுவதும் அதிக பலனளிக்கும், நீடித்த பலனளிக்கும் வழிமுறைகள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...