முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு சிறிய வித்தியாசமும், பெரிய விளைவும்: டி வில்லியர்ஸின் கதை



இன்றைய ஆர்.சி.பி vs சன் ரைசர்ஸ் ஆட்டம் இவ்வருட ஐ.பி.எல்லின் அட்டகாசமான த்ரில்லர்களில் ஒன்று. இறுதி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டும். புவனேஷ்வர் பந்துவீச்சு. முதல் பந்தை கார்டன் அடிக்கத் தவறுகிறார். அடுத்த பந்தில் ஒற்றை ஓட்டம். மூன்றாவது பந்துக்கு ஏ.பி டி வில்லியர்ஸ் ஸ்டிரைக்குக்கு வருகிறார். ஒரு புல் டாஸ் பந்தை சரியாக அடிக்க தவறுகிறார். அடுத்த பந்தை சிக்ஸர் அடிக்கிறார். இப்போது 2 பந்துகளில் 6 எடுக்க வேண்டும். அடுத்த பந்து முட்டி உயர புல் டாஸ். அதை சரியாக அடிக்கத் தவறுகிறார். கடைசி பந்தும் புல் டாஸ். அதை ஒருவாறாக டீப் எக்ஸ்டிரா கவர் பகுதிக்கு அடிக்கிறார். அங்குள்ள களத்தடுப்பாளர் அதைத் தடுத்திட ஒரு ஓட்டம் கிடைக்கிறது. 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி தோற்கிறது. 


மிக சிரமமான பந்துகளை எல்லாம் 350 கோணத்தில் சிக்ஸர்களை விளாசிப் பழக்கமுள்ள டி வில்லியர்ஸா மூன்று புல் டாஸ்களை மிஸ் பண்ணுகிறார்? இதைப் பார்க்கும் சிலர் அவரது ஆட்டநிலை மோசமாக உள்ளதே இதற்குக் காரணம் என நினைக்கிறார்கள். வேறு சிலரோ கடைசி ஓவரின் நெருக்கடியை அவரால் சமாளிக்க முடியவில்லை என்கிறார்கள். எனக்கு ஆட்டத்தின் முடிவில் பேசிய போது கோலி small margins என இரண்டு மூன்று முறைகள் குறிப்பிட்டது முக்கியம் எனப் பட்டது.


 டி வில்லியர்ஸ் நல்ல ஆட்டநிலையில் இருக்கும் போது கடைசி நேரத்தில் மைக்ரோ நொடி வித்தியாசத்தில் தான் பேட்டை பிடித்திருக்கும் விதத்தை சற்றே மாற்றிப் பிடித்து  தன் ஷாட்டையும் மாற்றி ஆடுவதைக் கண்டிருக்கிறோம். அதுதான் அவருடைய ஆட்டத்தின் மேஜிக்கே. ஆனால் இப்போது ஆட்டநிலை சரியாக இல்லை. முதுகுக்காயம் வேறு. அதனால் எந்த இடத்தில் உத்தேசிக்கிறாரோ அங்கே மட்டுமே மட்டையை விளாசி பந்தை செலுத்துகிறார். சரியாக தொடர்பு கிடைக்காவிடில் அந்த ஷாட் வேறெந்த மேஜிக்குக்கும் உள்ளவதில்லை. உ.தா., அந்த 5வது பந்து முழுநீளமாக வரும் என டிவில்லியர்ஸ் எதிர்பார்த்திருக்கலாம். உயர புல் டாஸ் எதிர்பாராமல் வர அவரால் அந்த இறுதி நுண் நொடி மாற்றத்தை ஷாட்டுக்குள் கொண்டு வரவில்லை - பழைய டி வில்லியர்ஸ் அதே பந்தை சட்டென பின்னங்காலுக்குப் போய் டென்னிஸ் சர்வ் போல புவனேஸ்வர் தலைக்கு மேல் விளாசி இருப்பார். இப்போது அவரால் அது முடிவதில்லை. அந்த கடைசிப் பந்து அதைப் பற்றித் தன் நாம் முக்கியமாகப் பேச வேண்டும்.


 அந்த ஷாட்டை அடித்த போது டி வில்லியர்ஸ் ஒருவேளை மட்டையை சற்றே திறந்த நிலையில் பிடித்திருந்தால் பந்து டீப் எக்ஸ்டிரா கவருக்கு இடப்பக்கமாக சென்று பவுண்டரிக்கு சென்றிருக்கும். ஆனால் மட்டை அப்படி இறுதிக் கட்டத்தில் திறக்கவில்லை. ஒரு சின்ன நுட்பம் தான், அது மிஸ் ஆகிவிட்டது. அத்துடன் டை செய்யும் வாய்ப்பும் பறிபோனது. ஒருவேளை அந்த பவுண்டரி சென்று சூப்பர் ஓவருக்கு ஆட்டம் சென்றிருந்தால் இன்னும் செமையாக ஆர்ப்பாட்டமாக இருந்திருக்கும். 


மறுவாய்ப்புகள் இல்லாத குரூரமான ஆட்டம் இது!


புவனேஸ்வர் டி வில்லியர்ஸுக்கு எதிராக வைடாக முழுநீளத்தில் வீசியது ஒரு நல்ல உத்தி. ஏனென்றால் டி வில்லியர்ஸின் நிலையமைதியின் அனுகூலம் லெக் ஸ்டம்பில் நின்று off and middleஇல் விழும் பந்துகளை எல்லா திசைகளிலும் அடிப்பதே. 6வது ஸ்டம்பில் வீசினால் அவரது சமநிலை பாதிக்கப்படும். Round the wicket வந்து middle and legஇல் மெதுவான பந்துகள், யார்க்கரும் வீசலாம். ஆனால் டி வில்லியர்ஸ் திரும்பி நின்று switch hit அடித்தால்? அதனால் புவனேஸ்வரின் உத்தி பாதுகாப்பானது. என்ன இவ்வளவு புல் டாஸ்கள் வீசியும் தப்பித்து விட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...