ஹர்ஷல் பட்டேலும் இப்போது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் உபரி வீரராக சேர்க்கப்பட்டுள்ளது நல்ல முடிவு. ஆனால் கே.கௌதம், கரன் ஷர்மா போன்ற ஐ.பி.எல்லிலே வாய்ப்பு கிடைக்காத வீரர்களை உபரியாக எடுத்துள்ள தேர்வாளர்களால் ஏன் சஹலுக்கு ஒரு வாய்ப்பளிக்க இயலவில்லை? தேர்வாளர்கள் மற்றும் கோலியின் ஈகோ அதற்கு இடம் அளிக்கவில்லையா? நியாயமாக காயமுற்றுள்ள ஹர்த்திக்கின் இடத்தில் சஹலை நேரடியாகவே அணிக்குள் கொண்டு வரலாம். அல்லது. குறைந்து உபரி வீரராகவாவது எடுத்து செல்லலாம். சஹல் இல்லாமல் ஆர்.சி.பி தகுதிச்சுற்று வரை வந்திருக்குமா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். இந்த மிக மோசமான முடிவை எண்ணி இவர்கள் உலகக்கோப்பையின் முடிவில் வருந்தும் நாள் வரும்!
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

Comments