முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முட்டாள் தேர்வாளர்கள்!




ஹர்ஷல் பட்டேலும் இப்போது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் உபரி வீரராக சேர்க்கப்பட்டுள்ளது நல்ல முடிவு. ஆனால் கே.கௌதம், கரன் ஷர்மா போன்ற ஐ.பி.எல்லிலே வாய்ப்பு கிடைக்காத வீரர்களை உபரியாக எடுத்துள்ள தேர்வாளர்களால் ஏன் சஹலுக்கு ஒரு வாய்ப்பளிக்க இயலவில்லை? தேர்வாளர்கள் மற்றும் கோலியின் ஈகோ அதற்கு இடம் அளிக்கவில்லையா? நியாயமாக காயமுற்றுள்ள ஹர்த்திக்கின் இடத்தில் சஹலை நேரடியாகவே அணிக்குள் கொண்டு வரலாம். அல்லது. குறைந்து உபரி வீரராகவாவது எடுத்து செல்லலாம். சஹல் இல்லாமல் ஆர்.சி.பி தகுதிச்சுற்று வரை வந்திருக்குமா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். இந்த மிக மோசமான முடிவை எண்ணி இவர்கள் உலகக்கோப்பையின் முடிவில் வருந்தும் நாள் வரும்!

கருத்துகள்