ஹர்ஷல் பட்டேலும் இப்போது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் உபரி வீரராக சேர்க்கப்பட்டுள்ளது நல்ல முடிவு. ஆனால் கே.கௌதம், கரன் ஷர்மா போன்ற ஐ.பி.எல்லிலே வாய்ப்பு கிடைக்காத வீரர்களை உபரியாக எடுத்துள்ள தேர்வாளர்களால் ஏன் சஹலுக்கு ஒரு வாய்ப்பளிக்க இயலவில்லை? தேர்வாளர்கள் மற்றும் கோலியின் ஈகோ அதற்கு இடம் அளிக்கவில்லையா? நியாயமாக காயமுற்றுள்ள ஹர்த்திக்கின் இடத்தில் சஹலை நேரடியாகவே அணிக்குள் கொண்டு வரலாம். அல்லது. குறைந்து உபரி வீரராகவாவது எடுத்து செல்லலாம். சஹல் இல்லாமல் ஆர்.சி.பி தகுதிச்சுற்று வரை வந்திருக்குமா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். இந்த மிக மோசமான முடிவை எண்ணி இவர்கள் உலகக்கோப்பையின் முடிவில் வருந்தும் நாள் வரும்!
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

Comments