Skip to main content

தினேஷ் கார்த்திக்கின் அவஸ்தை



நாம் பாசத்தில் ‘வெளிப்படையாக’ சொல்லுகிற சில விசயங்கள் அடுத்தவரை ஊசி போல சில நேரங்களில் குத்தி விடும். நேற்றைய கே.கே.ஆர் ஆட்டம் முடிந்ததும் தினேஷ் கார்த்திக்கை பேட்டி எடுத்தார். சீக்கா வழக்கம் போல மைக்கை எடுத்து “டேய் கார்த்திக் வாடா போடா டேய்” என்று ஆரம்பித்து விட்டு “நீ இத்தனைக் காலமும் உன் திறமையை வீணடித்து விட்டாய் என வருத்தம் உண்டு. ஏனென்றால் உனக்கு திறமை மிகவும் அதிகம்” என்று புலம்பினார். தினேஷ் கார்த்திக்கின் முகத்தில் எதையோ மிதித்தது போல ஒரு உணர்வு. ஏற்கனவே மோசமாக ஆடி அவுட் ஆன வருத்தமும் களைப்பும். அதில் இந்த ஆள் வேறு பழைய பல்லவியை எடுக்கிறாரே என வருத்தம் அவருக்கு. 


பந்துகளை கணித்து இஷ்டத்துக்கு அடிக்கிற திறமையை பொறுத்த மட்டில் தினேஷ் கார்த்திக் கோலியை விட மேலானவர், ரோஹித்துக்கு இணையானவர்.

 

அதே நேரம், திறமை நிறைவேறாமல் போன விசயத்தில் கார்த்திக் ஒரு தனி சாதனையாளர். 18 வயதிலேயே இந்திய அணிக்குள் வந்து இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக சிறப்பாக ஆடி ரன்கள் அடித்து பிறகு அவருடைய பொறுமையின்மை, சமநிலையின்மை, உணர்வுக்கட்டுப்பாடின்மை (சுருக்கமாக temperament இல்லாமை) காரணமாக ஒருநாள், டெஸ்ட் அணிகளில் இருந்து விலக்கப்பட்டார். இப்போது 18 வருடங்கள் கடந்தும் இந்த டி-20 உலகக்கோப்பையில் ஆவது தனக்கு இடம் கிடைக்குமா என ஏங்கினார். ஆனால் கிடைக்கவில்லை. கார்த்திக்கின் பிரச்சனை அவர் நன்றாக ஆடும் போது அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காது, அவரிடத்தில் அவரை விட நன்றாக ஆடும் ஒருவர் வந்து விடுவார் (தோனி) அல்லது அவருக்கு வயதாகி விட்டது என ஒரு இளைஞரை அவரிடத்தில் கொண்டு வந்து விடுவார்கள் என்பது. மற்றபடி அவருக்குள்ள திறமைக்கு அவர் ஒரு சிறந்த மத்திய வரிசை மட்டையாளராக ஒருநாள், டெஸ்ட், டி-20 போட்டிகளில் ஜொலித்திருக்கலாம். தோனி எனும் ராட்சசன் குறுக்கே வந்த பின்னரும் கூட தொடர்ந்து எண் 6இல் ஆவது ஆடி ஆட்டங்களை வென்றளித்திருக்க முடியும்.

 அவரால் துவக்க எண்ணில் இருந்து ஏழாவது எண் வரை நன்றாக ஆட முடியும். அவருக்கு என்றும் உடற்தகுதியில் பிரச்சனைகள் இருந்ததில்லை. அரசியல் பண்ணுவது, வம்பு தும்பு, ஒழுங்கீனம் எதுவும் இல்லை. சுமாரான கீப்பர் என்றாலும் நல்ல களத்தடுப்பாளர். ஆனால் விதியும், மதியும் அவருடைய வாழ்க்கையில் விளையாடி விட்டன.


கார்த்திக்கின் ஆட்ட வாழ்க்கையின் ஒரே சாதனை ஐ.பி.எல்லில் தொடர்ந்து ஒரு மதிப்புமிக்க மட்டையாளராக, finisherஆக இருப்பதே. ஶ்ரீகாந்தின் பாராட்டு எனும் புலம்பல் கார்த்திக்குக்கு தன் மொத்த 18 வருட கால தோல்விகளையும் டிரைலர் போட்டு காண்பித்திருக்கும். செருப்பெடுத்து சப்பென அறைந்தது போன்ற உணர்வு. முகத்தில் அந்த அதிர்ச்சியும் வருத்தமும் மறையாமல் “சார் நீங்க பத்து வருசமா இதையே தான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க” என கார்த்திக் பதிலளித்தார். அப்போதும் நம் ஶ்ரீகாந்துக்கு தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என விளங்க வில்லை. “உனக்கு ரொம்ப திறமை இருக்குடா. அதான் நான் பத்து வருசமா சொல்றேண்டா. நீ இந்த முறை ஐ.பி.எல் இறுதிப் போட்டியிலாவது அடிப்பியாடா? சொல்லுடா அடிப்பியாடா?” இதுவும் பாராட்டு போன்ற ஊசிக்குத்தல் தான் - அதாவது நீ எந்த முக்கிய ஐ.பி.எல் போட்டிகளிலும் ரன் அடித்ததில்லை, இம்முறையாவது அடிப்பாயா எனக் கேட்கிறார். அந்த புள்ள சாதித்தது இதில் ஒன்றில் தான், இதிலும் ஏன் இவ்வளவு விமர்சனம் வைக்க வேண்டும் மிஸ்டர் சீக்கா என எனக்குத் தோன்றியது.


அவர் இதற்குப் பதிலாக “கார்த்திக் நீ ரொம்ப திறமையானவன். எனக்கு உன் மீது நம்பிக்கை உண்டு. நீ இந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் ஒரு முக்கியமான இன்னிங்க்ஸ் ஆட வேண்டும். செய்வியா?” எனக் கேட்டிருக்கலாம். ஆனால் சீக்காவுக்கு தான் வாயில் வாஸ்து சரியில்லையே.


ஏனென்று தெரியவில்லை, எப்போதும் ஒரு விமர்சனத்தை முன்னொட்டாக வைத்து பாராட்டுவது வெறும் விமர்சனத்தை விட மக்களை அதிகமாக காயப்படுத்துகிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...