காந்தி எப்போதும் முதலாளித்துவத்தின் நலனைக் காக்கவே விரும்பினார். காந்தி இப்போது இருந்திருந்தால் நேரடியாக அதானியிடமும் அம்பானியிடமும் பேசி, ஏழைகள் நம் நாட்டின் கண்கள் என உருக்கமாய் அறிக்கை விட்டு, குற்றவுணர்வை சுரண்டி சில பல உதவிகளை செய்யக் கேட்டு "இப்போதைக்கு பொருளாதாரம் வளர்வதற்கு மக்கள் இந்த துன்பங்களை பொறுக்கணும், பெட்ரோல் விலையை குறைத்தாலோ வேலை நீக்கங்களை தடுத்தாலோ விவசாயிகளுக்கு நேரடியான நிதியுதவி செய்தாலோ சமூகத்தின் ஆன்மா கறைபட்டு விடும், ஏனென்றால் துன்பமும் ஏழ்மையுமே நம்மை உன்னதமானவர்கள் ஆக்கும்" என உரையாற்றி, கூடவே அம்பானி, அதானிகளையும் போற்றி நன்றி கூறி இருப்பார். அதாவது ரெண்டு பக்கமும் பெரிய பாதகம் வராத மாதிரி, முதலாளிகளுக்கு நட்டமோ மத்திய வர்க்கம், கீழ்த்தட்டினருக்கு மேம்பாடோ வராத மாதிரி ஒரு அரசியலைப் பண்ணுவார். இந்த status quo அரசியலைத் தான் காந்தியார் இந்தியாவின் ஆன்மாவை சுத்திகரிக்கும் பெரும்பணி எனக் கூறிக் கொண்டிருந்தார். இந்த கார்ட்டூனில் வரும் பகடி நியாயமானதே.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கருத்துகள்