காந்தி எப்போதும் முதலாளித்துவத்தின் நலனைக் காக்கவே விரும்பினார். காந்தி இப்போது இருந்திருந்தால் நேரடியாக அதானியிடமும் அம்பானியிடமும் பேசி, ஏழைகள் நம் நாட்டின் கண்கள் என உருக்கமாய் அறிக்கை விட்டு, குற்றவுணர்வை சுரண்டி சில பல உதவிகளை செய்யக் கேட்டு "இப்போதைக்கு பொருளாதாரம் வளர்வதற்கு மக்கள் இந்த துன்பங்களை பொறுக்கணும், பெட்ரோல் விலையை குறைத்தாலோ வேலை நீக்கங்களை தடுத்தாலோ விவசாயிகளுக்கு நேரடியான நிதியுதவி செய்தாலோ சமூகத்தின் ஆன்மா கறைபட்டு விடும், ஏனென்றால் துன்பமும் ஏழ்மையுமே நம்மை உன்னதமானவர்கள் ஆக்கும்" என உரையாற்றி, கூடவே அம்பானி, அதானிகளையும் போற்றி நன்றி கூறி இருப்பார். அதாவது ரெண்டு பக்கமும் பெரிய பாதகம் வராத மாதிரி, முதலாளிகளுக்கு நட்டமோ மத்திய வர்க்கம், கீழ்த்தட்டினருக்கு மேம்பாடோ வராத மாதிரி ஒரு அரசியலைப் பண்ணுவார். இந்த status quo அரசியலைத் தான் காந்தியார் இந்தியாவின் ஆன்மாவை சுத்திகரிக்கும் பெரும்பணி எனக் கூறிக் கொண்டிருந்தார். இந்த கார்ட்டூனில் வரும் பகடி நியாயமானதே.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

Comments