Skip to main content

டி20 உலகக்கோப்பை: அநீதியான ஆட்டச்சூழலும் அதை எதிர்கொள்ளும் வழியும்



ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பையில் பனிப்பொழிவும்ஆடுதளங்களின்வினோதமான பண்பும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றனஇந்தியன் எக்ஸ்பிரஸ்ஹிந்துகுவிண்ட்டெக்கன்கிரானிக்கல் என பல நாளிதழ்களில்இணையதளங்களீல் இது குறித்த கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளனஇதுவரையிலான 14 ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் மட்டுமே முதலில் மட்டையாடிய அணி வென்றுள்ளதுஎன்பதே விமர்சகர்கள் சுட்டிக் காட்டும் பிரச்சனை (அதாவது 2 நவம்பர் வரை)இலங்கை-இங்கிலாந்து போட்டி நடைபெற்ற போது தமிழ்வர்ணனையில் அபினவ் முகுந்த் முதலில் மட்டையாடுகிற அணியும் இரண்டாவதாக மட்டையாடுகிற அணியும்எதிர்கொள்ளுகிற முற்றிலும் மாறுபட்ட சூழல்களைஅதனால் முதலில் பந்து வீசுகிற அணிக்கு கிடைக்கிறஅதிகமான அனுகூலங்களைப் பற்றி விவாதித்தார்ஆக இது இப்போது எல்லா தளங்களிலும் கவனம் பெற்றுவரும்ஆட்டத்தின் தரத்தை பெரிதும் பாதிக்கிற ஏற்றத்தாழ்வான நிலையாக இருக்கிறது.

 இது என்ன பெரிய பிரச்சனையா என்று சிலருக்குத் தோன்றலாம்ஆனால் மாலையில் நடக்கும் போட்டிகளைக்கண்டாலே சில மணிநேரங்களில் சூழல் அடியோடு மாறுவதன் தாக்கத்தை உணர முடியும்அமீரக ஆடுதளங்கள்பொதுவாகவே மெத்தனமாக உள்ளவைஇவற்றை வேகப்படுத்த அதிகமாக நீரைத் தெளிக்கிறார்கள் களஅமைப்பாளர்கள்அங்கு வெயிலின் உக்கிரம் மிக அதிகமாக இருப்பதால் நீரின் அளவும் ஆடுதளம் காயவிடப்படும் கால அளவும் துல்லியமாக இராவிடில் ஆடுதளத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு விடும்இப்போதுநடந்துள்ளதைப் போலகுறைவாக காய்ந்து விட்டாலோ ஆடுதளத்தின் மேற்பகுதி மட்டும் உலர்வாகவும்கீழடுக்குகள் லேசான ஈரத்துடன்சரியாக இறுகாமலும் இருக்கும்விளைவாக இத்தகைய ஆடுதளங்களில்பந்து நின்று வரும்பவுன்ஸ் ஒன்று குறைவாக இருக்கும்அல்லது மெதுவாக துள்ளி வரும் பவுன்சாக இருக்கும்இதனால் முதலில் மட்டையாடுகிற அணிக்கு பந்தை டைம் செய்வது சிரமமாக இருக்கிறதுஎதிரணி நேராகநல்ல நீளத்தில் தொடர்ந்து வீசினால் ரன்களே வராமல் மட்டையாட்ட அணிக்கு நெருக்கடி அதிகமாகிவிக்கெட்டுகள் தாமே விழும்அல்லது இந்தியா-பாகிஸ்தான்இந்தியா-நியுசிலாந்த் போட்டிகளில் நடந்ததுபோல முதலில் பந்து வீசும் அணிக்கு ஓரளவுக்கு தாமதமான ஸ்விங் (late swing) கிடைக்கும்ஒரு பக்கம் மட்டைக்கு வராத பந்துஇன்னொரு பக்கம் தாமதமான ஸ்விங்தடுத்தாடியே ஆக வேண்டும் எனும் அழுத்தம்மட்டையாளர்களுக்கு ஏற்படும்இதுவே இரண்டாவதாக மட்டையாட ஒரு அணி வரும் போதோஒளிவிளக்குகளின் வெளிச்சத்தினாலோ பனிப்பொழிவினாலோ ஆடுதளம் சட்டென வேகமெடுத்து விடுகிறதுஸ்விங்கும் மறைகிறதுமுழுக்க மட்டையாட்டத்துக்கு சாதகமாகிறதுவிளைவாக இரண்டாவதாக மட்டையாடும் அணியால் 140-150 போன்ற  இலக்குகளை விரட்டி செல்வது சுலபமாகிறது.


ஆடுதளங்கள் இப்படி “விண்ணைத் தாண்டி வருகிறேன்” திரிஷா போல கணிக்க முடியாதபடி ஆகிப் போனதன்ஒரு காரணம் ஆடுதள அமைப்பாளர்கள் இவை ரொம்ப வெயிலில் காய்ந்து வெடித்துப் போய் சுழலுக்குசாதகமாகி விடக் கூடாது என அச்சப்படுவதேஆனால் அவ்வாறு சுழலும் ஆடுதளங்களை அவர்கள்அமைத்திருந்தால் கூட இதை விட சுவாரஸ்யமான ஆட்டங்கள் நிகழ்ந்திருக்கும் என்று சொல்லியாக வேண்டும்அதாவது இரவு 9:30 மணிக்கு பனிப்பொழிவு துவங்கினாலும் இளகின தன்மையில் உள்ளவெடிப்புகள்அதிகமாக கொண்ட ஒரு ஆடுதளத்தில் சுழலர்களால் முதல் பத்து ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளையாவதுவீழ்த்தி ஆட்டத்தை சமநிலையில் வைக்க முடியும்கடைசி பத்து ஓவர்களில் மட்டையாட்ட அணியால்மீள்வருகை நிகழ்த்தும்படியாக பனிப்பொழிவு அதிகமானால் ஆட்டம் இன்னும் சுவாரஸ்மாகும்ஆனால் பந்துசுழலக் கூடாதே எனும் ஆடுதள தயாரிப்பாளர்களின் பரிதவிப்பும்அச்சமும் இந்த ஆட்டங்களை டாஸைவெல்லும் அணிக்கு சாதகமாகஒருதலைபட்சமாக மாற்றி விட்டன.


இதை சொல்லுகிற அதே நேரம்என்னதான ஆட்டச்சூழல் முதலில் பந்து வீசுகிற அணிக்கு சாதகமாகஇருந்தாலும் ஆடுகிற அணிகளின் திறமைகவனம்திட்டமிடல் ஆகியவையும் வெற்றியை தீர்மானிக்கிறசங்கதிகளாக இருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்நவம்பர் ஒன்றாம் தேதி நடந்த இலங்கை-இங்கிலாந்து போட்டி இதற்கு ஒரு சிறந்த உதாரணம்இப்போட்டியில் இங்கிலாந்து டாஸை இழந்து முதலில்மட்டையாடியதுமுதல் ஆறு ஓவர்களில் ரன்களை சரளமாக அடிக்க அது திணறியதுமூன்றுவிக்கெட்டுகளையும் பறிகொடுத்ததுஆனால் அதன் பிறகு துவக்க மட்டையாளர் ஜோஸ் பட்லரும்அணித்தலைவர் மோர்கனுமாக ஒரு நிதானமான கூட்டணியை உருவாக்கி 13 ஓவர்கள் ஆடினர். 112 ஓட்டங்களை அவர்களுடைய கூட்டணி சேர்த்ததுபட்லர் சரியான நேரத்தில் அடித்தாடத் துவங்கி 130க்கு முடியவேண்டிய இன்னிங்ஸை 163 வரை கொண்டு சென்றார்அவர் 67 பந்துகளில் அடித்த 101 உலக கிரிக்கெட்டில்டி20 போட்டிகளில் ஆடப்பட்ட தலைசிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று.

 இதைச் சொல்லுகிற அதே நேரம் இந்த போட்டியில் இலங்கை பந்து வீசும் போதே ஆச்சரியமாக முதல் 10 ஓவர்களுக்குப் பிறகு சிறிது பனிப்பொழிவு தலைகாட்டத் தொடங்கியது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்அத்தோடு இலங்கையின் வேகவீச்சாளர்களுக்கு கட்டுப்பாடோ நிதானமோ இல்லாமல் போக அவர்களுடையகுழப்பத்தையும் தடுமாற்றத்தையும் பட்லர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்இங்கிலாந்து பந்து வீச வந்தபோதும் பனிப்பொழிவு இருந்ததுஆனால் அவர்கள் சரியான நீளத்தில் திசையில் தொடர்ந்து வீசி பனிப்பொழிவுஅதன் உச்சத்தை எட்டும் இரவு பத்தரை மணிக்குள் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டனர்அதன் பிறகுஇலங்கையின் அணித்தலைவர் ஷனகாவும்ஆல்ரவுண்டர் ஹசரங்காவும் ஒரு சமயோஜிதமான கூட்டணியைஅமைத்த போது  இலக்கு அவர்களுக்கு எட்டும் தொலைவிலே இருந்ததுபந்தும் வேகமாக மட்டைக்கு வரசிக்ஸர் அடிப்பது சுலபமாக இருந்ததுஇவர்களைப் போல இலங்கையின் முதல் நான்கு மட்டையாளர்களும்ஆடியிருந்தால் இப்போட்டியை இலங்கை சுலபத்தில் வென்றிருக்க முடியும்ஆனால் வெல்ல வேண்டியநிலையில் இருந்து 137க்கு ஆல் அவுட் ஆகியது இலங்கை.


ஆக இலங்கை-இங்கிலாந்து போட்டி ஒன்றைக் காட்டுகிறது - என்னதான் ஆட்டச்சூழல் இரண்டாவதாகமட்டையாடுகிற அணிக்கு சாதகமாக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முதல் மூன்றுஎண்களுக்குள் ஆடும் மட்டையாளர்கள் புத்திசாலித்தனமாக நிதானமாக நீடித்தாட வேண்டும்குறைந்தது ஒருஅரை சதமாவது அடித்து ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும்சில நேரம் தேர்வுகளின் போது கண்காணிக்கவரும் ஆசிரியர்கள் காப்பி அடிக்க விட்டு விடுவார்கள்மாணவர்கள் பிட்டுகளை வெளியே எடுப்பார்கள்ஆனால்எந்த கேள்விக்கு எந்த விடை என்று தெரியாமல் திணறுவார்கள்விளைவாக என்னதான் வாய்ப்பளித்தாலும்அதை பயன்படுத்தி தேர்வடையவோ நல்ல மதிப்பெண் பெற முடியாமல் போய் விடும்சாதகமான சூழலிலும்சொதப்பிய இலங்கையின் ஆட்டம் இதையே எனக்கு நினைவுபடுத்தியதுஅதே நேரம்இங்கிலாந்தின்அணுகுறையில் இருந்து இந்தியாவைப் போன்ற மற்ற அணிகள் கற்றுக் கொள்ள ஒரு முக்கிய பாடம் உள்ளது.


என்னதான் டாஸை இழந்தாலும் முடிந்தளவுக்கு போராடினால்நிதானமாக சமயோஜிதமாக ஆடி 150க்கு மேல்ஒரு இலக்கை அமைத்தால் அடுத்து பந்து வீசும் போது பனிப்பொழிவு இருந்தாலும்சரியான நீளத்தில்திசையில் தொடர்ந்து வீசி நெருக்கடியை ஏற்படுத்த முடியும்எதிரணி தவறுகள் செய்யும் பட்சத்தில்விக்கெட்டுகளும் கொத்தாக விழும்சிறப்பான களத்தடுப்பும் அவசியம்டாஸை இழந்ததும் தலையில்கைவைத்து உட்கார வேண்டியதில்லை

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...