Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கோலியின் பிரச்சனை என்ன?



விராத் கோலி பற்றிய கருத்துக்களில் என்னை மிகவும் கவர்ந்தது அஷ்வினுடையதே. அவர் கோலி கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாகவே நன்றாக மட்டையாடி வருவதாகக் கூறி இருக்கிறார். இது சரி தான். ஒரு மட்டையாளர் தன ஆட்டநிலையை இழக்கும் போது மூன்று விசயங்கள் நடக்கும்:

1) தொழில்நுட்ப பிரச்சனை ஒன்று அம்பலமாகி அதில் இருந்து வெளிவரத் தெரியாமல் தவிப்பார்கள். (காம்ப்ளி, லஷ்மண், திராவிட், ஸ்டீவ் வாஹில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் வரை )
2) உடற்தகுதியின்மை ஏற்படும். (கங்குலி, சச்சின்)
3) பந்து விழும் நீளத்தை கணிக்க முடியாமல் போகும் - சிலருக்கு பார்வைக் குறைபாட்டினாலும் வேறு சிலருக்கு தசைகளுக்கும் நரம்புகளுக்குமான தொடர்புறுத்தல் தாமதமாவதாலும் இது நேரும். (திராவிட் இரண்டுக்கும் உதாரணம்)

ஆனால் கோலிக்கு இந்த பிரச்சனைகள் இல்லை. அவருக்கு நான்காவது, ஐந்தாவது குச்சியில் விழும் முழுநீளப் பந்துகளை விரட்டிச் சென்று ஸ்லிப்பில் அவுட் ஆகும் வழக்கம் இருந்தது. அதையும் கட்டுப்படுத்த கற்றுக் கொண்டார். தேவையான போது சிறப்பாக கவர் டிரைவ் செய்வதும் உதவியது. கால்சுழலையும் ஆப் ஸ்பின்னையும் ஆடும் போது பந்தின் திசையை கணிப்பதில் ஒரு சிக்கல் இருந்தது. இதையும் பந்தை தடுத்தாடும் யுக்தியால் எதிர்கொண்டார். இருந்தும் அவர் தொடர்ந்து முதலாவது அல்லது இரண்டாவது ஸ்லிப்பில் அவுட் ஆகிறார். அல்லது பவுல்ட ஆகிறார். அவர் சதமாடித்து 77 இன்னிங்ஸ் மேலாகிறது. ஏன்?

டெஸ்டிலோ ஒருநாள் போட்டிகளிலோ டி20களிலோ கோலி அவுட் ஆவதில் ஒரு ஒழுங்குமுறை உள்ளது - ஒருநாள் / டி-20 போட்டிகள் என்றால் முதல் 10-15 நிமிடங்கள் நன்றாக ஆடுவார். வெளியே போகும் பந்து விசயத்தில் கவனமாக இருப்பார். நேராக பந்தை விரட்டுவார். பவுண்டரிகள், ஒற்றை, இரட்டை ஓட்டஙக்ள் சரளமாக வரும். அடுத்து புதிய பந்து வீச்சாளர் வருவார். கோலி இப்போது கவனம் இழந்து, நான்காவது குச்சியில் விழுந்து மேலும் வெளியே போகும் பந்தை உடம்புக்கு வெளியே பந்து விரட்டவோ திருப்பி விடவோ முயன்று கீப்பருக்கோ ஸ்லிப்பிலோ கேட்ச் கொடுப்பார். டெஸ்ட் போட்டி என்றால் மேற்சொன்ன முறையிலோ சுழற்பந்தை தவறாக அடிக்க முயன்றோ வெளியேறுவார். இதைப் பார்க்கும் போது பிரச்சனை கோலியின் மனத்தில் தான் இருக்கிறது, அவரது கவனம் முழுக்க ஆட்டத்தில் இல்லை எனத் தெரிகிறது.

2017இல் இது துவங்குகிறது எனில் அப்போது ஒரு அணித்தலைவராக கோலிக்கு அணிக்குள்ளிருந்தும் வெளியே வாரிய நிர்வாகத்தினரிடம் இருந்து வந்த அழுத்தங்களினால் அவர் தன் ஆட்ட அக்கறையை இழந்து அதுவே பின்னர் ஒரு பழக்கமானதா? ஆட்டத்தின் அரசியலின் பால் அதிகமாக ஈடுபட்டதால் அடிப்படைகளில் ஆர்வம் இழந்து பின்னர் கிரிக்கெட் ஆடுவது அலுவலகம் போவதைப் போல ஒரு பழக்கம் மட்டும் ஆனதா? இக்கேள்விகளுக்கு கோலி மட்டுமே பதிலளிக்க இயலும்.

ஆட்டத்தின் போக்கில் முழுமையாக இருப்பது அவசியம். இதுவும் ஒரு பழக்கமே. கோலியின் மட்டையாட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகவே இப்படி ஒரு கவனச்சிதறல் வந்து அது ஒரு அமைவாக நிலைப்பெற்று விட்டது. இதை சரி செய்வதற்கு அவராக முயன்றே சரி செய்ய முடியும். மேலும், எதனால் அவர் தன் கவனத்தை ஆட்டத்தில் இருந்து வேறெங்கோ உலவ அனுமதிக்கிறார் என்றும் அவர் யோசித்து கண்டுபிடிக்க வேண்டும்.

முன்பு சச்சின் அணித்தலைவராக இருந்த அணியில் அசருதீன் இப்படி விதவிதமாக அவுட் ஆகிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரை அணியில் இருந்து நீக்கினார்கள். 98இல் திரும்ப வந்து வெகு சிறப்பாக ஆடினார். சச்சினும் தன் அணித்தலைமையில் இருந்து விலகிய பின்னர் அசரூதீனின் தலைமையின் கீழ் வெகு அற்புதமாக புதிய ஆற்றலுடன் ஆடிக் காட்டினார். ஆனால் தன் தலைமை கோலி அந்தளவுக்கு ஒரு நிதானதத்துடன் உறுதியுடன் கைவிட்டதாகக் கூற முடியாது.

அதனாலோ ஏனோ அவர் ஒரு வீரராகவும், தனிமனிதராகவும் ஒருமுகமாக இல்லை எனத் தோன்றுகிறது. ஆம் களத்தில் முழு ஈடுபாடு காட்டுகிறார், ஆனால் ஆட வரும் போது அந்த பழைய துடிப்பு, ஈடுபாடு இல்லை. அதனால் தான் ஓரு சில தொடர்களில் ஓய்வு பெற்று திரும்ப வந்தாலும் கோலியின் முகத்திலும் உடல்மொழியிலும் ஆட்டத்திலும் ‘ஆன்மா’ இல்லை. மருமகளிடம் கோபித்துக் கொண்டு பூஜை, டிவி சீரியல் என ஒதுங்கி விட்ட மாமியாரைப் போல் தென்படுகிறார்.

இப்போதைக்கு அவர் தன் மனக்குதிரை மீது அமர்ந்து அது எங்கோ போகிறது என்றே அக்கறையில்லாமல் காடுமேடென திரிந்து கொண்டிருக்கிறார். ஒரு ஆட்டத்தில் அரை சதம் அடித்தாலும் அடுத்த ஆட்டத்தில் மீண்டும் தறிகெட்டு ஓடுகிறது மனக்குதிரை. கோலியிடம் இன்னும் 4 ஆண்டுகள், 40 சதங்கள் மீதமுள்ளன. அற்பமான பிரச்சனைகளுக்காக அவர் தன் திறனை, அனுபவத்தை வீணடிக்கப் போகிறாரா இல்லை மனதைக் கட்டுப்படுத்தி அதன் மீது ஏறி அமர்ந்து பழையது போல சவாரி பண்ணுவாரா?

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...