Skip to main content

கோலியின் பிரச்சனை என்ன?



விராத் கோலி பற்றிய கருத்துக்களில் என்னை மிகவும் கவர்ந்தது அஷ்வினுடையதே. அவர் கோலி கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாகவே நன்றாக மட்டையாடி வருவதாகக் கூறி இருக்கிறார். இது சரி தான். ஒரு மட்டையாளர் தன ஆட்டநிலையை இழக்கும் போது மூன்று விசயங்கள் நடக்கும்:

1) தொழில்நுட்ப பிரச்சனை ஒன்று அம்பலமாகி அதில் இருந்து வெளிவரத் தெரியாமல் தவிப்பார்கள். (காம்ப்ளி, லஷ்மண், திராவிட், ஸ்டீவ் வாஹில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் வரை )
2) உடற்தகுதியின்மை ஏற்படும். (கங்குலி, சச்சின்)
3) பந்து விழும் நீளத்தை கணிக்க முடியாமல் போகும் - சிலருக்கு பார்வைக் குறைபாட்டினாலும் வேறு சிலருக்கு தசைகளுக்கும் நரம்புகளுக்குமான தொடர்புறுத்தல் தாமதமாவதாலும் இது நேரும். (திராவிட் இரண்டுக்கும் உதாரணம்)

ஆனால் கோலிக்கு இந்த பிரச்சனைகள் இல்லை. அவருக்கு நான்காவது, ஐந்தாவது குச்சியில் விழும் முழுநீளப் பந்துகளை விரட்டிச் சென்று ஸ்லிப்பில் அவுட் ஆகும் வழக்கம் இருந்தது. அதையும் கட்டுப்படுத்த கற்றுக் கொண்டார். தேவையான போது சிறப்பாக கவர் டிரைவ் செய்வதும் உதவியது. கால்சுழலையும் ஆப் ஸ்பின்னையும் ஆடும் போது பந்தின் திசையை கணிப்பதில் ஒரு சிக்கல் இருந்தது. இதையும் பந்தை தடுத்தாடும் யுக்தியால் எதிர்கொண்டார். இருந்தும் அவர் தொடர்ந்து முதலாவது அல்லது இரண்டாவது ஸ்லிப்பில் அவுட் ஆகிறார். அல்லது பவுல்ட ஆகிறார். அவர் சதமாடித்து 77 இன்னிங்ஸ் மேலாகிறது. ஏன்?

டெஸ்டிலோ ஒருநாள் போட்டிகளிலோ டி20களிலோ கோலி அவுட் ஆவதில் ஒரு ஒழுங்குமுறை உள்ளது - ஒருநாள் / டி-20 போட்டிகள் என்றால் முதல் 10-15 நிமிடங்கள் நன்றாக ஆடுவார். வெளியே போகும் பந்து விசயத்தில் கவனமாக இருப்பார். நேராக பந்தை விரட்டுவார். பவுண்டரிகள், ஒற்றை, இரட்டை ஓட்டஙக்ள் சரளமாக வரும். அடுத்து புதிய பந்து வீச்சாளர் வருவார். கோலி இப்போது கவனம் இழந்து, நான்காவது குச்சியில் விழுந்து மேலும் வெளியே போகும் பந்தை உடம்புக்கு வெளியே பந்து விரட்டவோ திருப்பி விடவோ முயன்று கீப்பருக்கோ ஸ்லிப்பிலோ கேட்ச் கொடுப்பார். டெஸ்ட் போட்டி என்றால் மேற்சொன்ன முறையிலோ சுழற்பந்தை தவறாக அடிக்க முயன்றோ வெளியேறுவார். இதைப் பார்க்கும் போது பிரச்சனை கோலியின் மனத்தில் தான் இருக்கிறது, அவரது கவனம் முழுக்க ஆட்டத்தில் இல்லை எனத் தெரிகிறது.

2017இல் இது துவங்குகிறது எனில் அப்போது ஒரு அணித்தலைவராக கோலிக்கு அணிக்குள்ளிருந்தும் வெளியே வாரிய நிர்வாகத்தினரிடம் இருந்து வந்த அழுத்தங்களினால் அவர் தன் ஆட்ட அக்கறையை இழந்து அதுவே பின்னர் ஒரு பழக்கமானதா? ஆட்டத்தின் அரசியலின் பால் அதிகமாக ஈடுபட்டதால் அடிப்படைகளில் ஆர்வம் இழந்து பின்னர் கிரிக்கெட் ஆடுவது அலுவலகம் போவதைப் போல ஒரு பழக்கம் மட்டும் ஆனதா? இக்கேள்விகளுக்கு கோலி மட்டுமே பதிலளிக்க இயலும்.

ஆட்டத்தின் போக்கில் முழுமையாக இருப்பது அவசியம். இதுவும் ஒரு பழக்கமே. கோலியின் மட்டையாட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகவே இப்படி ஒரு கவனச்சிதறல் வந்து அது ஒரு அமைவாக நிலைப்பெற்று விட்டது. இதை சரி செய்வதற்கு அவராக முயன்றே சரி செய்ய முடியும். மேலும், எதனால் அவர் தன் கவனத்தை ஆட்டத்தில் இருந்து வேறெங்கோ உலவ அனுமதிக்கிறார் என்றும் அவர் யோசித்து கண்டுபிடிக்க வேண்டும்.

முன்பு சச்சின் அணித்தலைவராக இருந்த அணியில் அசருதீன் இப்படி விதவிதமாக அவுட் ஆகிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரை அணியில் இருந்து நீக்கினார்கள். 98இல் திரும்ப வந்து வெகு சிறப்பாக ஆடினார். சச்சினும் தன் அணித்தலைமையில் இருந்து விலகிய பின்னர் அசரூதீனின் தலைமையின் கீழ் வெகு அற்புதமாக புதிய ஆற்றலுடன் ஆடிக் காட்டினார். ஆனால் தன் தலைமை கோலி அந்தளவுக்கு ஒரு நிதானதத்துடன் உறுதியுடன் கைவிட்டதாகக் கூற முடியாது.

அதனாலோ ஏனோ அவர் ஒரு வீரராகவும், தனிமனிதராகவும் ஒருமுகமாக இல்லை எனத் தோன்றுகிறது. ஆம் களத்தில் முழு ஈடுபாடு காட்டுகிறார், ஆனால் ஆட வரும் போது அந்த பழைய துடிப்பு, ஈடுபாடு இல்லை. அதனால் தான் ஓரு சில தொடர்களில் ஓய்வு பெற்று திரும்ப வந்தாலும் கோலியின் முகத்திலும் உடல்மொழியிலும் ஆட்டத்திலும் ‘ஆன்மா’ இல்லை. மருமகளிடம் கோபித்துக் கொண்டு பூஜை, டிவி சீரியல் என ஒதுங்கி விட்ட மாமியாரைப் போல் தென்படுகிறார்.

இப்போதைக்கு அவர் தன் மனக்குதிரை மீது அமர்ந்து அது எங்கோ போகிறது என்றே அக்கறையில்லாமல் காடுமேடென திரிந்து கொண்டிருக்கிறார். ஒரு ஆட்டத்தில் அரை சதம் அடித்தாலும் அடுத்த ஆட்டத்தில் மீண்டும் தறிகெட்டு ஓடுகிறது மனக்குதிரை. கோலியிடம் இன்னும் 4 ஆண்டுகள், 40 சதங்கள் மீதமுள்ளன. அற்பமான பிரச்சனைகளுக்காக அவர் தன் திறனை, அனுபவத்தை வீணடிக்கப் போகிறாரா இல்லை மனதைக் கட்டுப்படுத்தி அதன் மீது ஏறி அமர்ந்து பழையது போல சவாரி பண்ணுவாரா?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...