Skip to main content

கீட்டோ உணவுமுறை - சவால்கள்

 




கடந்த மூன்று நாட்களாக கீட்டோ உணவுமுறையைப் பின்பற்றுகிறேன். 2 வாரங்களில் இருந்து 4 வாரங்கள் வரை பின்பற்றி விட்டு பழையபடி portion controlக்கு செல்ல உத்தேசம். இதற்கு முன்பு நான் சுமார் ஒரு ஆண்டுக்கு ஒரு குத்துமதிப்பான பேலியோவைப் பின்பற்றியதுண்டு - அதாவது அதை பேலியோ என்று நிபுணர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அந்த காலத்தில் நான் பழம், சிக்கன், முட்டை, பால், கொஞ்சம் பாதாம் சாப்பிடுவேன். தானியங்கள், பருப்புகளை தவிர்ப்பேன். அந்த அரைகுறை பேலியோவிலேயே எனக்கு மூன்று கிலோவுக்கு மேல் எடை குறைந்தது. ஆனால் இந்த முறை துல்லியமாக, எந்த சமரசமும் இன்றி கீட்டோவைப் பின்பற்ற முடிவெடுத்தேன்


முதல் சவால் மாவுச்சத்து 20 கிராமுக்குக் குறைவாக ஒரு முழுநாள் உணவில் இருக்க வேண்டும் என்பது. இது மிக மிக சிரமம். மாவுச்சத்துள்ள தானியங்கள், பருப்புகள் எவையும் கூடாது. பால், பழம் கூடாது. சரி போகட்டும், நீங்கள் காய்கறி, பாதாம் போன்ற உணவுகளை சாப்பிடால் என நினைத்தாலும் மாவுச்சத்து கட்டுப்பாட்டைக் கடந்து கூரை மீதேறி ஓடி விடும். சிக்கன், மாட்டுக்கறி போன்றவற்றையும் வெங்காயம், தக்காளி சேர்த்து மசாலாவாக பண்ணி சாப்பிட்டாலும் மாவுச்சத்து கூடும். ஐந்து வேளை உணவில் ஒவ்வொரு வேளையும் 3-4 கிராமுக்குள் மாவுச்சத்தை கட்டுப்படுத்தினாலே நாள் முடிவில் 20 கிராமுக்குள் கொண்டு வர முடியும்


இதற்கு சிறந்த வழிகள் அடுத்த நாள் உணவை முன்கூட்டியே திட்டமிடுவது, கொழுப்புச் சத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளுவது (அது மட்டும் தான் மாவுச்சத்தை தவிர்க்க உதவுவது.). ஒரு நாளைக்கு நான் 1500 கலோரிகள் உண்கிறேன் என்றால் அதில் 125 கிராமுக்கு மேல் கொழுப்பும், 60-70 கிராமுக்குள் புரோட்டீனும் இருக்கலாம். புரோட்டீனை இன்னும் குறைத்து கொழுப்பை மேலும் அதிகப்படுத்தவும் செய்யலாம். நான் காலை உணவில் இருந்து மாலை நொறுக்குத் தீனி வரை அதிகமாக கொழுப்பைக் உட்கொண்டு அதுவரையிலான மாவுச்சத்து 10க்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். அப்போது தான் இரவுணவில் கொஞ்சம் அதிகமாக மாவுச்சத்து இருந்தாலும் கட்டுக்குள் இருக்கும். தரப்பட்ட 20 கிராம் மாவுச்சத்தைத் தாண்டி ஒரு கிராம் கூடுதலாக உட்கொண்டால் கூட கீட்டோஸில் எனும் உடம்பின் கொழுப்பு எரிக்கப்படும் நிலை வராது என்கிறார்கள்.


வழக்கமாக கீட்டோவில் கேஸ் பிரச்சனை வரும். சிலர் வயிற்று வலி காரணமாகவே விட்டு விடுவார்கள். மற்றொரு பிரச்சனை மலச்சிக்கல். அதிர்ஷ்டவசமாக எனக்கு இரண்டும் வரவில்லை. மலப்பிரச்சனையை கருத்திற் கொண்டு நான் Isabgol எனும் நார்ச்சத்து பொடியை எடுத்துக் கொண்டேன். அதனால் காலைக்கடனை சரளமாக கழிக்க முடிந்தது.


தாகமும் சிறுநீர் கழித்தலும் மற்றொரு தொந்தரவு. மூன்று நான்கு லிட்டர்கள் தண்ணீர் சாதாரண்மாகவே உள்ளே போகிறது. அடிக்கடி பாத்ரூம் போய் போய் அலுக்கிறது. ஆனால் உடம்பில் உள்ள கிளைகோஜென் எனும் மாவுச் சத்து இருப்புத்தொகை செலவிடப்படுகிறது, மாவுச்சத்து நீருடன் இணைந்து இருக்கிற வஸ்து என்பதால் மாவுச்சத்து எரிக்கப்பட நீரும் சிறுநீராக வெளியேறும் என இணையத்தில் படித்தேன். உடம்பில் சேமிக்கப்பட்ட மாவுச்சத்து காலியானதும் உடம்பு கொழுப்பை எரிக்கத் தொடங்கும் - அதாவது கீட்டோஸிஸ் நடக்கும். அதனால் இந்த நீரதிகாரம் ஒரு நல்ல அறிகுறியே.

 

 கீட்டோஸிஸ் தான் எடை குறைப்புக்கு பிரதான காரணி. வரும் ஞாயிறுடன் ஐந்தாவது நாள் நிறைவாகும். அன்று என் மூத்திரத்தில் கீட்டோன் டெஸ்ட் ஸ்ரிப்பை பயன்படுத்தி சோதிக்கையில் அதில் கீட்டோன்கள் இருப்பதாகத் தெரிந்தால் கீட்டோ உணவு முறை வெற்றி எனப் பொருள்


நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...