இந்தியாவில் ஒவ்வொரு அரசு ஊழியரும் ஏதாவது வேலையாக அரசு அலுவலகத்துக்கு வரும் மக்கள் கோல் அடித்து விடாமல் தடுத்து நிறுத்தும் கோல் கீப்பர் தான்.
இப்போது படித்துக் கொண்டிருக்கும் the braided river நூலில் வரும் அட்டகாசமான வரி.
என்னைப் பொறுத்தவரையில், உண்மையான கோல் கீப்பர்கள் அரசியல்வாதிகளே. அவர்கள் அரசுத்துறைக்கும் மக்களுக்கும் இடையில் வராவிடில், ஒரு public voting performance appraisal வழி ஒவ்வொரு அரசு ஊழியனும் சம்பளம் பெற்றால் மக்கள் அதிகாரம் பெறுவார்கள். ஒவ்வொரு அலுவலகமும் இருக்கும் பகுதியில் வாழும் மக்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை காவல் நிலையம், மாநகராட்சி அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், ரேஷன் கடை, டாஸ்மாக் கடை, அரசு ஆஸ்பத்திரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என ஒவ்வொரு அலுவலக ஊழியருக்கும் இணையம் வழி ரேட்டிங் கொடுக்கிற ஒரு நடைமுறை வர வேண்டும். மிகக்குறைவான ரேட்டிங் பெறுவோரின் மாத வருமானம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். அதை விடக் குறைவாக ரேட்டிங் பெறுவோர் வேலையில் இருந்து நீக்கப்பட வேண்டும். சம்பள உயர்வு / பதவி உயர்வும் இந்த ரேட்டிங்கின் அடிப்படையிலே வழங்கப்பட வேண்டும். இப்படியான நடைமுறையில் மேலதிகாரிகளிக்கும் அரசியலாதிகளுக்கும் அறிவுரைக்கும் அதிகாரம் மட்டுமே இருக்க வேண்டும், ஊதியத்தை, வேலையை உறுதிப்படுத்தும், கட்டுப்படுத்தும் அதிகாரம் அந்த பகுதி மக்களிடம் இருக்க வேண்டும். ஆனால் இப்போது நெரெதிரான ஒரு அமைப்பு உள்ளது. இது அதிகார வர்க்கத்தை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது.
- ஆர். அபிலாஷ்
Comments