"இந்த வாக்கியங்களை நீ வாசிக்கும்போது அது நிகழக்கூடும் ஜெனீ. ஆம். அப்போது நீயும் இந்த பிரதியும்தான் இருப்பீர்களே தவிர இந்த பூஜ்ய கணக்கில் இதை எழுதிக் கொண்டிருக்கும் நான் இருக்க மாட்டேன். மரணத்தின் மௌன வெளி என்னை உறிஞ்சிக்கொண்டு போய்விடும். கடந்த காலப் பேராழத்தில் மூழ்கிவிடுவேன். எனது வார்த்தைகள் பிரதியின் வார்த்தைகளாகிவிடும். எனது நான் அழிந்து பிரதியின் நான் ஸ்தூல உருப்பெற்றுவிடும்."
- "ஸீரோ டிகிரி", சாரு நிவேதிதா
Comments