"ஒரு கதை தன்னையே சொல்லுகிறது. எல்லா கதைகளையும் போல அது முழுமையாக இருக்கலாம், முழுமையற்றும் இருக்கலாம். இந்த குறிப்பிட்ட கதைக்கு ஒரு எல்லையும், தோன்றியது போல வந்து போகிற பெண்களும் இருக்கிறார்கள். பெண்களும் எல்லையும் வந்து விட்டால் கதையால் தன்னையே எழுத முடியும். வெறுமனே பெண்கள் மட்டுமே கூட போதும். பெண்கள் தம்மளவில் கதைகளே, பெண்கள் முழுக்க காற்றில் மிதக்கிற, ஒவ்வொரு புல்லின் இதழுக்கும் ஏற்ப வளைகிற உணர்வுச் சலனங்களால், முணுமுணுப்புகளால் ஆனவர்கள்."
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

Comments