மாற்றுத் திறனாளிகளை பொதுச்சமூகம் அணுகும் தன்மையையும் அதை எதிர்கொள்பவரின் உளவியலையும் நேர்மையாக எழுதியிருக்கிறார் அபிலாஷ். வாசிப்பவரின் குற்ற உணர்வைத் தூண்டும் யத்தனங்களோ, கழிவிரக்கத்தை கோரி நிற்கும் திரிபுகளோ இல்லாமல் வரிக்கு வரி Empathise செய்ய முடிகிற ஓர் ஆக்கம். love you Man❤️ We are with you Abilash Chandran 🙌🏾
இந்த புத்தகத்தை நண்பர்களுக்கு சிபாரிசு செய்கிறேன். மேலும், நாளை 06/01/2023 இந்நூலின் வெளியீட்டு விழாவில் பேசுகிறேன்.
கவிக்கோ மன்றம்
எண். 6 இரண்டாவது மெயின் ரோடு,
சிஐடி காலணி, மைலாப்பூர்
சென்னை 4
மாலை 5.30 மணிக்கு.
Comments