நேற்று இதைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கையில் பொதுவாக வக்கீல்களையோ நீதிமன்றத்தையோ பற்றி விமர்சித்து படமெடுப்பதில்லை, அதற்கு வக்கீல்கள் பற்றின பயமே காரணம் என்றார். இருக்கலாம். பொதுவாக நம் படங்களில் வக்கீல்கள் நீதியின் நாயகர்களாக வருகிறார்கள். ஆனால் வக்கீல் சந்துரு மட்டுமே உலகம் அல்ல. 99% வக்கீல்கள் பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள், வேலையை செய்வதில்லை. மிரட்டிப் பணம் பறிக்கும் ரௌடிகளைப் போல் நடந்து கொள்கிறார்கள். செய்யாத குற்றத்துக்கு மனிதர்களை வருடக்கணக்கில் அலைய விடுகிற, நோகடித்து கடனாளி ஆக்குகிற களமாக நீதிமன்றங்கள் உள்ளன. நம் தமிழ் சினிமாவில் பாருங்கள் - நீதிமன்றமே நீதியைப் பெற்றுத்தருகிற இடமாக இருக்கிறது. அப்படி ஒரு சில வழக்குகளில் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான வழக்குகளில் என்ன நடக்கிறது? எத்தனை பேர் அந்த நீதிமன்ற வாயில்களில் தம் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்? இப்படி பொய் பொய்யாக படமெடுக்கும் இயக்குநர்கள் இந்த உண்மைகளையும் பேசலாம் அல்லவா? குறைந்தது ஒரு வழக்கை நடத்த எவ்வளவு காலமாகும், எவ்வளவு செலவாகும் என்றாவது சொல்லலாம் அல்லவா? மாட்டார்கள்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
Comments