நேற்று இதைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கையில் பொதுவாக வக்கீல்களையோ நீதிமன்றத்தையோ பற்றி விமர்சித்து படமெடுப்பதில்லை, அதற்கு வக்கீல்கள் பற்றின பயமே காரணம் என்றார். இருக்கலாம். பொதுவாக நம் படங்களில் வக்கீல்கள் நீதியின் நாயகர்களாக வருகிறார்கள். ஆனால் வக்கீல் சந்துரு மட்டுமே உலகம் அல்ல. 99% வக்கீல்கள் பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள், வேலையை செய்வதில்லை. மிரட்டிப் பணம் பறிக்கும் ரௌடிகளைப் போல் நடந்து கொள்கிறார்கள். செய்யாத குற்றத்துக்கு மனிதர்களை வருடக்கணக்கில் அலைய விடுகிற, நோகடித்து கடனாளி ஆக்குகிற களமாக நீதிமன்றங்கள் உள்ளன. நம் தமிழ் சினிமாவில் பாருங்கள் - நீதிமன்றமே நீதியைப் பெற்றுத்தருகிற இடமாக இருக்கிறது. அப்படி ஒரு சில வழக்குகளில் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான வழக்குகளில் என்ன நடக்கிறது? எத்தனை பேர் அந்த நீதிமன்ற வாயில்களில் தம் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்? இப்படி பொய் பொய்யாக படமெடுக்கும் இயக்குநர்கள் இந்த உண்மைகளையும் பேசலாம் அல்லவா? குறைந்தது ஒரு வழக்கை நடத்த எவ்வளவு காலமாகும், எவ்வளவு செலவாகும் என்றாவது சொல்லலாம் அல்லவா? மாட்டார்கள்.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments