நேற்று இதைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கையில் பொதுவாக வக்கீல்களையோ நீதிமன்றத்தையோ பற்றி விமர்சித்து படமெடுப்பதில்லை, அதற்கு வக்கீல்கள் பற்றின பயமே காரணம் என்றார். இருக்கலாம். பொதுவாக நம் படங்களில் வக்கீல்கள் நீதியின் நாயகர்களாக வருகிறார்கள். ஆனால் வக்கீல் சந்துரு மட்டுமே உலகம் அல்ல. 99% வக்கீல்கள் பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள், வேலையை செய்வதில்லை. மிரட்டிப் பணம் பறிக்கும் ரௌடிகளைப் போல் நடந்து கொள்கிறார்கள். செய்யாத குற்றத்துக்கு மனிதர்களை வருடக்கணக்கில் அலைய விடுகிற, நோகடித்து கடனாளி ஆக்குகிற களமாக நீதிமன்றங்கள் உள்ளன. நம் தமிழ் சினிமாவில் பாருங்கள் - நீதிமன்றமே நீதியைப் பெற்றுத்தருகிற இடமாக இருக்கிறது. அப்படி ஒரு சில வழக்குகளில் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான வழக்குகளில் என்ன நடக்கிறது? எத்தனை பேர் அந்த நீதிமன்ற வாயில்களில் தம் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்? இப்படி பொய் பொய்யாக படமெடுக்கும் இயக்குநர்கள் இந்த உண்மைகளையும் பேசலாம் அல்லவா? குறைந்தது ஒரு வழக்கை நடத்த எவ்வளவு காலமாகும், எவ்வளவு செலவாகும் என்றாவது சொல்லலாம் அல்லவா? மாட்டார்கள்.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்