Skip to main content

நம் எழுத்தை எப்படி பாதுகாப்பது?

 

நாம் பதிவுகளில் எழுதும் கதையில் நமக்கு எந்தளவுக்கு சட்டரீதியான உரிமை உள்ளது என்பதில் சில சந்தேகங்கள் இருந்ததால் திரை எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்புள்ள ஒரு நண்பரிடம் விசாரித்து சில விசயங்களை அறிந்து கொண்டேன். எழுத்தாள நண்பர்களுக்கு பயனளிக்கும் என்பதாலே அதை இங்கு பகிர்கிறேன்.


  1. இதுவே மிக முக்கியமானது - நீங்கள் ஒரு சம்பவத்தை ஒரு கதையாக அல்லாமல் எங்கிருந்தோ யாரோ சொல்லிக் கேட்ட பாவனையுடன், தோற்றத்துடன் எழுதினால் அதைப் பின்னர் யார் எடுத்து கதையாகமாற்றினாலும்அதற்கு நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்று உரிமை கோர முடியாது.
  2. உங்கள் பதிவு ஒரு கதை போன்ற வடிவில் இருந்தாலும்இவர் இப்படி சொன்னார், அடுத்து அவர் வந்தார், போனார்என நிகழ் காலத்தில் எழுதினால், அதற்குள் விவரணைகள், துவக்கம், முடிவு ஆகிய கதைக்குரிய சங்கதிகள் இருந்தால் அதுகேட்டதை எழுதுதல்எனும் வகைமைக்குள் சேர்க்கப்படும். அதாவது ஒரு ஜூ.வி, தினத்தந்தி செய்தி அறிக்கை போல் கருதப்படும்.
  3. மாதவராஜின் பதிவில் உள்ள பிரச்சினை மேற்சொன்னது தான். அவரால் இதனாலே நீதிமன்றத்துக்கு போய் வெல்ல முடியாது. இதை அவரும் அறிந்திருப்பார் என நினைக்கிறேன். அவர் இதை சிறுகதை என வகைப்படுத்திஅன்று காலை அந்த ஊரில் மழை சிந்திக்கொண்டிருந்தது. அவர்கள் மூவரும் ஒரு சிறு திகைப்புடன் தமக்குப் பரிச்சமில்லாத புதிய மண்ணில் காலெடுத்து வைத்தனர். அப்போது அவர்களுக்கு தாம் விரைவில் எதிர்கொள்ளப் போகும்…” என்று எழுதியிருந்தால் இந்நேரம் நீதிமன்றத்தில் மனுபோட்டு ஒரு நல்ல உரிமைத்தொகையை வாங்கிவிட முடியும். கிரெடிட் கூட கிடைக்கும். நானோ நீங்களோ பேஸ்புக்கில் இதைப் போலபுனைவு போன்ற எத்தனையோ அபுனைவுகளைஎழுதியிருப்போம். அவற்றை யார் வேண்டுமெனிலும் எடுத்து சற்று கற்பனை கலந்தோ மொழியை மாற்றியோ பயன்படுத்தலாம். நாம் போய் காலரைப் பிடித்து கேட்க முடியாது. இதுவே சட்ட நெறிமுறை, நடைமுறை
  4. சரி ஏன் அபுனைவுகளுக்கும் உரிமை அளிக்கக் கூடாது என்று கேட்டால் அது வேறு பல சிக்கல்களை ஏற்படுத்தும் - செய்தி அறிக்கைகளை யாராவது தம் புனைவில் பயன்படுத்தினால் அதை எழுதிய எல்லா ரிப்போர்ட்டர்களும் நீதிமன்றத்துக்கு போவார்கள். பெருங்குழப்பம் விளையும்.
  5. ஒரு சம்பவத்தை கற்பனை கலந்து கதையாக்காமல், ரொம்ப மெனெக்கடாமல் சமாளிக்க மற்றொரு வழி உள்ளது - நீங்கள் எழுதும் பதிவில்பார்த்த ஒன்றாக’, ‘கேட்ட ஒன்றாகஅல்லாமல் நீங்களும் பங்கெடுத்த ஒன்றாக மாற்றிவிட வேண்டும். உங்கள் நண்பர் ஒருவருடைய டெபிட் கார்டின் சிவிவி எண்ணை யாரோ திருடி வழக்கு பற்றி நீங்கள் எழுதும் போதுநாங்கள் இருவரும் போலீஸ் நிலையம் சென்றிருந்தோம்என்று உங்களையும் ஒரு பாத்திரமாக சேர்த்து சில வரிகள் கூடுதலாக எழுதி விடுங்கள். இப்போது இதுசுயசரிதையாகமாறி விடும்.
  6. நீங்களும் ஒரு பிரபலமுமாக பங்குபெற்ற ஒரு அனுபவத்தை நீங்கள் எழுதினாலும் அதில் உங்களுக்கு உரிமை வந்துவிடும். அதே கதையை நீங்கள் அவரது வாழ்க்கைக் கதையாக எழுதினால் அதில் உங்களுக்கு உரிமை இல்லை.
  7. நீங்கள் ஒரு பிரபலத்தின் வாழ்க்கைக் கதையை புறவயமாக தொகுத்து எழுதும் போது அதில் வரும் சம்பவங்கள் நீங்கள் கேட்டோ வாசித்தோ பார்த்தோ அறிந்தவை எனும் வகையில் பொது நுகர்வுக்கு உரிய வரலாற்றுத் தகவல்கள் ஆகிடும். நான் புரூஸ் லீ பற்றி ஒரு வாழ்க்கை சரிதை எழுதியிருக்கிறேன் (“புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்”). அதை யாராவது எடுத்து கதையாக சற்று மாற்றி பயன்படுத்தினால் என்னால் உரிமை கோர முடியாது. ஆனால் புரூஸ் லீ பற்றின நாவலாக அதை நான் எழுதியிருந்தால் அதில் வரும் சம்பவங்களின் உரிமை முழுக்க எனக்கானது மட்டுமே. .தா., எஸ்.ராவின்மண்டியிடுங்கள் தந்தையேநூல்.
  8. சட்டப்படி பார்த்தால் இப்போது பேசப்படும் விசயம் கதைத்திருட்டு அல்ல, ஆனால் தார்மீக ரீதியாக தவறான செயல் என்று நான் விசாரித்த நண்பர் சொன்னார். எனக்கு தார்மீகம் கீர்மீகத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அப்படி ஒன்று இந்த உலகில் இல்லவே இல்லை. தவறு செய்வோர் கொங்கூற்றுக்கு இரையாவர் என்பதும் ஒரு கற்பனையும் நான் நம்பவில்லை. அதனால் நம் படைப்பை பாதுகாத்துக் கொள்வது நம் பொறுப்பு. சர்ச்சை, விவாதங்கள், கண்டனங்களால் ஒருவித சிறிய அழுத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனால் நடப்புலகில் பெரிய தாக்கம் இருக்காது. நம் வீட்டை நாம் பூட்டுப் போட்டு பாதுகாத்துக் கொள்வோம்
  9. திரைக்கதைக்கு என்று ஒரு உரிமை இல்லை. அதாவது நான் எழுதிய திரைக்கதையை ஒருவர் எடுத்து பயன்படுத்தினால் என்னால் போராட முடியாது. ஆனால் கதைக்கு (plot outline) உரிமை உண்டு. திரைக்கதையாளர்கள் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்வது, முன்னூக்கத் தொகை (இணையம் வழி / காசோலையாக) வாங்குவது பாதுகாப்பு. பணம் இருந்தால் திரைக்கதை எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினர் ஆவது இன்னும் பாதுகாப்பு.
  10. இங்கு வந்து யாரையும் கடிந்துரைத்து நேரத்தை வீணடிக்காதீர்கள். (எஸ்.ராவை தாக்குவது என் நோக்கமல்ல. இது கல்வி நோக்கத்துடன் எழுதப்பட்ட பதிவு மட்டுமே :) ) 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...