முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுஜாதா யார்?

எனக்கு சுஜாதாவின் அவதானிப்பு, புத்திசாலித்தனம், மொழி விளையாட்டு, ஆச்சரியப்படுத்தும் போக்கு, துண்டுத்துண்டான பாணி மீது மிகுந்த வியப்பும் மரியாதையும் உண்டு. 

ஆனால் வெகுஜன எழுத்தாளர்களிலேயே அவர் ஒரு பொன்சாய் என நினைக்கிறேன் - சுஜாதாவின் பார்வை என்ன? உலகம் பற்றி, இருப்பு பற்றி, வாழ்க்கை பற்றி, தமிழ் சமூகம், தமிழ் பண்பாடு, இந்திய சிந்தனைப் போக்குகள் பற்றி? அவரது புனைவுகளில் வெளிப்படும் வாழ்க்கைச் சிக்கல்கள், பார்வைகள் எவை? இந்த கேள்விகளுக்கு எந்த சுஜாதா வாசகராலும் பதிலளிக்க முடியாது. ஆனால் வெகுஜன எழுத்தாளராக இருந்தாலும் பாலகுமாரன் வாசகர்களால் இக்கேள்விகளில் ஒன்று ரெண்டுக்காவது பதில் சொல்ல முடியும்.

 சுஜாதா கட்டிப் போடப்பட்ட ஒரு நாய்க்குட்டியாக தன்னை மாற்றிக் கொண்டாரோ என இப்போது தோன்றுகிறது. எதிலும் பட்டுக்கொள்ளாமல், ஒட்டிக்கொள்ளாமல்,  உணர்ச்சிவசப்படாமல் வெளிச்சமூட்டப்பட்ட தொட்டிக்குள் வளைய வளைய வந்து நம்மை சிலாகிக்க வைக்கும் ஒரு மீனைப் போல. பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிய விலைமதிப்பான சோபாவில் நாம் பட்டும்படாமல் உட்கார்வதைப் போல பல விசயங்களை லேசாகத் தொட்டுவிட்டு ஓடி வந்து விடுவதைப் போல அவர் பிரச்சினைகளை டீல் பண்ணுகிறாரோ எனத் தோன்றுகிறது. 
 அவரது கட்டுரைகளைப் படித்து முடிக்கும் போது இன்னும் ஆரம்பிக்கலையே, தண்ணீரை மொண்டு இன்னும் தலையில் ஊத்தலையே பாஸ் எனத் தோன்றும். அவரது சிறுகதைகளைப் படிக்கையில் சரக்கை இப்போதானே கோப்பையில் ஊற்றியிருக்கிறோம், அதற்குள் ஸ்மெல் பண்ணிட்டு சாய்ந்திட்டாரே, ஒரு இரவு முழுக்க இருக்கிறதே இன்னும் எனத் தோன்றும். நாவல்களைப் படிக்கையில் கதை இன்னும் ஆரம்பிக்கலையே, ஏன் வி.தா.வருவாயா ஜெஸ்ஸியைப் போல டேடி கோவிச்சுப்பார், உனக்கும் எனக்கும் செட்டாகாது கார்த்திக், நாம பிரிஞ்சிரலாம் என அதற்குள் வாசகனிடம் சொல்கிறாரே என்று தோன்றும்.  

கோகுல் பிரசாத்தின் மொழியில் சொல்வதானால், அழகான உடல் அமைப்பு கொண்ட பெண் ஒரு படம் முழுக்க சேலையில் வளைய வளைய வருவதைப் போல் அல்லாமல் அவர் இன்னும் கொஞ்சம் துணிச்சலாக, நிறைய ரிஸ்க் எடுத்து இந்த ஆட்டத்தை ஆடியிருக்கலாம், தன் இதயத்தை எழுத்துக்குள் இன்னும் பெரிதாக திறந்து வைத்திருக்கலாம். தான் ரசித்த உலக இலக்கியத்தை ஒட்டி ஒரே ஒரு படைப்பையாவது தந்திருக்கலாம். சுஜாதா யார் எனும் கேள்விக்கு தன் அத்தனை முட்டாள்தனங்களையும் முரண்பாடுகளையும் வெளிபடுத்தி பதில் தந்திருக்கலாம். அந்த புத்திசாலித்தனத்தை கழற்றி லாண்டிரி பின்னில் போட்டிருக்கலாம்.

ஆனாலும் எனக்கு சுஜாதாவைப் பிடிக்கும்!ஒரு வாசகனாக அவரது நினைவுகள் இனிமையாக எனக்குள் என்றும் நிறைந்திருக்கும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...