Skip to main content

நோய்களின் ஊற்றுக்கண்


முன்பு நாம் காலையுணவாக ஊறப்போட்ட பழைய சோற்றையே தயிருடன் உண்டோம். என்னுடைய அப்பா தன் இளமைக்காலத்தில் டிபன் எதையும் சாப்பிட்டதில்லை, இட்லி, தோசை என்பவை தீபாவளியின் போது சுடுபவை என்று சொல்லியது நினைவுள்ளது. அதன் பிறகு ஸ்டைலான காலை உணவுகள் அப்படியே பொங்கல், பூரி என நகர்ந்து பிரெட், கெலாக்ஸ் என்று மேலும் மோசமாகி விட்டன. என்னுடைய மாணவர்களுக்கு பிடித்த காலை உணவு பன் சமோஸா அல்லது பப்ஸ். விளைவு என்னவென்றால் இன்றைய பதின்வயதினருக்கு விதவிதமாக நோய்கள் வருகின்றன. ஒரு தம்பியின் மூக்கில் ரத்தம் வருகிறது என்று கழிப்பறைக்கு ஓடினார். நான் அவரை அழைத்து விசாரித்தேன். அவர் தனக்கு நுரையீரலில் பிரச்சினை, அது ஏதோ ஒரு ஒவ்வாமையால் ஏற்பட்டது என்றார். ஓட்டலில் ஏதோ ஒரு உணவை உண்ட போது ஏற்பட்ட ஒவ்வாமை மூச்சுத்திணறலிலும் மூக்கில் ரத்தம் ஒழுகுவதிலும் கொண்டுவிட்டதாகவும், மாதத்திற்கு ஒருமுறை ஆஸ்பத்திரிக்கு சென்று நுரையீரலில் 10 ஊசிகள் போட்டுக் கொள்வதாகவும் சொன்னார். அதே போல பல்வேறு நோய்த்தொற்றுகளால் அவதிப்படுகிறவர்கள், ஒவ்வாமை காரணமாக தூங்க முடியாத அளவுக்கு நமைச்சல் ஏற்பட்டு அதற்காக ஏகப்பட்ட மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், 12 வயதிலேயே நீரிழிவு வந்தவர்கள், மன அழுத்தத்திற்கு சிகிச்சையில் இருப்பவர்கள் என ஏகப்பட்ட பதின்வயதினரை நான் தினமும் இந்த நகரத்தில் பார்க்கிறேன். எனக்கு பல சமயங்களில் நான் இருப்பது ஒரு திறந்தவெளி மருத்துவமனையோ எனத் தோன்றுமளவுக்கு இளைஞர்கள் நோய்களை சுமந்தலைகிறார்கள்.
ஆச்சரியமாக, நான் ஊரில் கல்லூரியில் படித்த போது என் சகமாணவர்களில் ஒருவர் கூட ஒருமுறை கூட மருத்துவமனை பக்கம் எட்டிப் போய் பார்த்ததில்லை. அன்று என் ஊரில் மருத்துவமனையே இல்லை. ஜுரம் வந்தால் தக்கலையில் உள்ள ஒரே ஒரு தனியார் கிளினிக்குக்கு போவார்கள். அங்கும் குறைவானவர்களே இருப்பார்கள். அவர்களுக்கும் அந்த டாக்டர் ஒரே ரோஸ் மருந்தையே கொடுப்பார். என் அப்பாவுக்கு கடைசி காலம் வரை ஜுரமோ சளியோ வந்து நான் பார்த்ததில்லை. இன்று ஊரிலும் நிலைமை மாறிவிட்டது. இத்தனைக்கும் அன்று என் வயது இளைஞர்கள் தம் ஆரோக்கியத்துக்கு என தனியாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்களுக்கு இப்படியான பன் சமோசாக்கள், பப்ஸ்கள் காலை உணவாக இல்லை. இரவானால் பிரைட் ரைஸ், பிரியாணி தின்ன கையில் பணமில்லை. முழுக்க முழுக்க வீட்டில் கிடைக்கும் சாப்பாடையே நம்பியிருந்தார்கள். என்று நாம் வெளியே சாப்பிட ஆரம்பித்தோமோ அன்றே நோய்களின் நடமாடும் கூடாரம் ஆகிவிட்டோம். யாராவது இந்த ஓட்டல்கள், துரித உணவுகள், கடைகளில் தொங்க விடப்படும் பாக்கெட் உணவுகளை ஒழிப்பதற்கு ஒரு இயக்கத்தை எடுத்து நடத்தினால் அது நம் மக்களின் ஆயுட காலத்தை 20 ஆண்டுகள் அதிகரிக்க உதவும். மது ஒழிப்பை விட நமக்கு உணவுக்கடைகள், துரித உணவுக் கடைகள், பாக்கெட் உணவு விற்பனையின் ஒழிப்பே தேவை. சாராய வியாபாரிகளை விட உணவு வியாபாரிகளே அதிக ஆபத்தானவர்கள், பெரிய கொலைகாரர்கள். ஏனென்றால் சிறுகுழந்தை முதல் வளர்ந்தவர்கள் வரை தவறாமல் இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு தம் ஆயுளைக் குறைத்து அதிக வியாதிகளால் துன்புறுகிறார்கள். மதுவருந்தி அவ்வாறு வாழ்க்கையை தொலைக்கிறவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவே. வியாபாரத்தை பெருக்குவதற்காக உலகம் முழுக்க அரசாங்கங்கள் மக்களின் ஆயுளை ஏலம் விட்டுக்கொண்டிருக்கின்றன. போதை மருந்து வியாபாரிகளை விட, அணு குண்டு, வெடிகுண்டு, துப்பாக்கி உற்பத்தியாளர்களை விட மனித சமூகத்தின் முதன்மை விரோதிகள் உணவு சந்தையாளர்களே.
ஏனென்றால் அவர்களே பரவலாக மக்களை பாதிக்கிறார்கள். அவர்களே விஷத்தை சிறுக சிறுக மக்களுக்கு ஊட்டுகிறார்கள். முழுக்க முழுக்க ஆரோக்கியத்துக்கு கேடான உணவுகளை தம் லாபத்துக்காக மக்களை சாப்பிட வைக்கிறார்கள். அவர்கள் வந்த பின்னரே மக்கள் அதிக நோய்களாலும் மனப்பிரச்சினைகளாலும் உடல் பருமனாலும் அவதிப்படுகிறார்கள். மாரடைப்பால் இளமையில் மரிப்பவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.
நாம் இந்த உணவு வியாபாரிகள் எனும் மரண வியாபாரிகளையே முதலில் எதிர்க்க வேண்டும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...