Skip to main content

ஒவ்வொருக்குள்ளும் ஒரு நாவல் உள்ளது - ஆன்லைன் வகுப்புகள்




 

ஆர். அபிலாஷ் தமிழில் நன்கு அறியப்பட்ட ஒரு புனைவெழுத்தாளர். சாகித்ய அகாடெமி யுவ புரஸ்கார் மற்றும் பாஷா பரிஷத் உளிட்ட விருதுகளைப் பெற்றவர். 40க்கும் மேற்பட்ட நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் கட்டுரை நூல்களை எழுதியவர். இவர் ஒரு தொழில்முறை ஆங்கில பேராசிரியர் ஆவார். இவர் ஆங்கிலத்தில் நாவல் எழுத்துக்கலை வகுப்புகளை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பல்கலைக்கழக அளவில் நடத்தி வருகிறார். நாவல் எழுதும் கலை குறித்து ஒரு புத்தகத்தையும் எழுதி வருகிறார். இவரைப் பற்றி மேலும் அறிய: https://ta.wikipedia.org/wiki/ஆர்._அபிலாஷ்

ஆர். அபிலாஷ் ஒரு கல்வியாளர். அவர் நாவல் எழுதும் கலை வகுப்புகளை நடத்தி அனுபவம் பெற்றவர்.
அடிப்படையான தகுதி: தமிழில் ஒரு சில பத்திகளாலான ஒரு புனைவை எழுதி அனுப்ப வேண்டும். அது ஒரு கதை அல்லது அத்தியாயத்தின் பகுதியாக இருக்கலாம். அதை நீங்களே சுயமாக எழுதியிருக்க வேண்டும். குறைந்தது 250 வார்த்தைகளில் இருந்து அதிகம் எவ்வளவு சொற்கள் வேண்டுமெனிலும் இருக்கலாம். இதை அவர்கள் abilashchandran70@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த சமர்ப்பித்தலின் அடிப்படையில் பங்கேற்பாளர் இந்த பயிற்சி வகுப்புக்கு தேர்வு செய்யப்படுவார். தேர்வானவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்படும். (நீங்கள் தேர்வாகாத பட்சத்தில் உங்கள் கட்டணம் திரும்ப அனுப்பப்படும்.)
பயிற்சி வகுப்பில் பங்குபெறுவதற்கான அடிப்படை தேவைகள்:
மடிக்கணினி அல்லது மொபைல் போன்
இணையத் தொடர்பு
பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்கான அடிப்படையான மனத்தகுதி:
தொடர்ந்து எழுதி ஒரு எழுத்தாளனாக வெற்றிபெறும் விருப்புறுதி
நேரந்தவறாது வகுப்பில் கலந்துகொள்ளும் ஒழுக்கம்
தரப்படும் இடுபணிகளை நேரத்துக்கு முடித்து சமர்ப்பிக்கும் ஆர்வம்
பயிற்சி வகுப்பறை நெறிகள்:
நேரந்தவறாது இணைந்துகொள்ள வேண்டும்.
அமைதியான சூழல் வேண்டும்.
உங்கள் மைக்கை ம்யூட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பேச வேண்டுமெனில் கையுயர்த்தும் பொத்தானை அழுத்தி முறையாக அனுமதி பெற்றே கேள்விகளைக் கேட்கவோ கருத்துக்களை சொல்லவோ வேண்டும்.
சக-பங்கேற்பாளர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த தொந்தரவும் கொடுக்கலாகாது.
பயிற்சி வகுப்பின் குறிக்கோள்கள்:
1) நாவல் எனும் எழுத்து வடிவத்தின் அடிப்படையான விதிகளை கற்பித்தல்
2) நேர-மேலாண்மை, சுயமேம்பாட்டுத் திறன்களை பயிற்றுவித்து ஒரு ஆக்கவளமிக்க எழுத்தாளராக பங்கேற்பாளரை மாற்றுதல்
3) நாவல் எழுத்துப்படியை திருத்தி செறிவாக்குகிற திறனை போதித்தல்
4) திருத்தப்பட்ட நாவல் எழுத்துப்படியை பதிப்பாளர் ஒருவரிடம் சமர்ப்பித்து ஏற்றுக்கொள்ள செய்வதற்கான அடிப்படைகளை கற்பித்தல்; அதற்கான வழிமுறைகளை காண்பித்தல்.
பயிற்சி வகுப்பின் பயன்கள்:
இப்பயிற்சி வகுப்பின் முடிவில்:
1) நீங்கள் நாவல் எனும் புனைவு வடிவத்தின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்வீர்கள்.
2) தொடர்ந்து தினமும் எழுதி வருடத்திற்கு குறைந்தது ஒரு புத்தகத்தையாவது வெளியிடும் ஒழுக்கத்தையும் நேரமேலாண்மைத் திறனையும் வளர்த்துக் கொள்வீர்கள்.
3) உங்கள் நாவல் படைப்பை திருத்தவும் அதற்கான திட்டவரைவைக் கொண்டு பதிப்பாளரிடம் கதையை சொல்லி கவர்வது எப்படி என்றும் தெரிந்து கொள்வீர்கள்.
4) பயிற்சிப் பாட வகுப்புகளில் கலந்துகொண்டவர்கள் தமக்குத் தரப்பட்ட இடுபணிகளை முடிக்கும் பட்சத்தில் அவ்வருட முடிவுக்குள் அவர்கள் தமது நூலை வெளியிட்டு வாசகர்களிடம் கொண்டு சேர்க்கவும் செய்வார்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...