Skip to main content

ஒவ்வொருக்குள்ளும் ஒரு நாவல் உள்ளது - ஆன்லைன் வகுப்புகள்




 

ஆர். அபிலாஷ் தமிழில் நன்கு அறியப்பட்ட ஒரு புனைவெழுத்தாளர். சாகித்ய அகாடெமி யுவ புரஸ்கார் மற்றும் பாஷா பரிஷத் உளிட்ட விருதுகளைப் பெற்றவர். 40க்கும் மேற்பட்ட நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் கட்டுரை நூல்களை எழுதியவர். இவர் ஒரு தொழில்முறை ஆங்கில பேராசிரியர் ஆவார். இவர் ஆங்கிலத்தில் நாவல் எழுத்துக்கலை வகுப்புகளை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பல்கலைக்கழக அளவில் நடத்தி வருகிறார். நாவல் எழுதும் கலை குறித்து ஒரு புத்தகத்தையும் எழுதி வருகிறார். இவரைப் பற்றி மேலும் அறிய: https://ta.wikipedia.org/wiki/ஆர்._அபிலாஷ்

ஆர். அபிலாஷ் ஒரு கல்வியாளர். அவர் நாவல் எழுதும் கலை வகுப்புகளை நடத்தி அனுபவம் பெற்றவர்.
அடிப்படையான தகுதி: தமிழில் ஒரு சில பத்திகளாலான ஒரு புனைவை எழுதி அனுப்ப வேண்டும். அது ஒரு கதை அல்லது அத்தியாயத்தின் பகுதியாக இருக்கலாம். அதை நீங்களே சுயமாக எழுதியிருக்க வேண்டும். குறைந்தது 250 வார்த்தைகளில் இருந்து அதிகம் எவ்வளவு சொற்கள் வேண்டுமெனிலும் இருக்கலாம். இதை அவர்கள் abilashchandran70@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த சமர்ப்பித்தலின் அடிப்படையில் பங்கேற்பாளர் இந்த பயிற்சி வகுப்புக்கு தேர்வு செய்யப்படுவார். தேர்வானவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்படும். (நீங்கள் தேர்வாகாத பட்சத்தில் உங்கள் கட்டணம் திரும்ப அனுப்பப்படும்.)
பயிற்சி வகுப்பில் பங்குபெறுவதற்கான அடிப்படை தேவைகள்:
மடிக்கணினி அல்லது மொபைல் போன்
இணையத் தொடர்பு
பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்கான அடிப்படையான மனத்தகுதி:
தொடர்ந்து எழுதி ஒரு எழுத்தாளனாக வெற்றிபெறும் விருப்புறுதி
நேரந்தவறாது வகுப்பில் கலந்துகொள்ளும் ஒழுக்கம்
தரப்படும் இடுபணிகளை நேரத்துக்கு முடித்து சமர்ப்பிக்கும் ஆர்வம்
பயிற்சி வகுப்பறை நெறிகள்:
நேரந்தவறாது இணைந்துகொள்ள வேண்டும்.
அமைதியான சூழல் வேண்டும்.
உங்கள் மைக்கை ம்யூட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பேச வேண்டுமெனில் கையுயர்த்தும் பொத்தானை அழுத்தி முறையாக அனுமதி பெற்றே கேள்விகளைக் கேட்கவோ கருத்துக்களை சொல்லவோ வேண்டும்.
சக-பங்கேற்பாளர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த தொந்தரவும் கொடுக்கலாகாது.
பயிற்சி வகுப்பின் குறிக்கோள்கள்:
1) நாவல் எனும் எழுத்து வடிவத்தின் அடிப்படையான விதிகளை கற்பித்தல்
2) நேர-மேலாண்மை, சுயமேம்பாட்டுத் திறன்களை பயிற்றுவித்து ஒரு ஆக்கவளமிக்க எழுத்தாளராக பங்கேற்பாளரை மாற்றுதல்
3) நாவல் எழுத்துப்படியை திருத்தி செறிவாக்குகிற திறனை போதித்தல்
4) திருத்தப்பட்ட நாவல் எழுத்துப்படியை பதிப்பாளர் ஒருவரிடம் சமர்ப்பித்து ஏற்றுக்கொள்ள செய்வதற்கான அடிப்படைகளை கற்பித்தல்; அதற்கான வழிமுறைகளை காண்பித்தல்.
பயிற்சி வகுப்பின் பயன்கள்:
இப்பயிற்சி வகுப்பின் முடிவில்:
1) நீங்கள் நாவல் எனும் புனைவு வடிவத்தின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்வீர்கள்.
2) தொடர்ந்து தினமும் எழுதி வருடத்திற்கு குறைந்தது ஒரு புத்தகத்தையாவது வெளியிடும் ஒழுக்கத்தையும் நேரமேலாண்மைத் திறனையும் வளர்த்துக் கொள்வீர்கள்.
3) உங்கள் நாவல் படைப்பை திருத்தவும் அதற்கான திட்டவரைவைக் கொண்டு பதிப்பாளரிடம் கதையை சொல்லி கவர்வது எப்படி என்றும் தெரிந்து கொள்வீர்கள்.
4) பயிற்சிப் பாட வகுப்புகளில் கலந்துகொண்டவர்கள் தமக்குத் தரப்பட்ட இடுபணிகளை முடிக்கும் பட்சத்தில் அவ்வருட முடிவுக்குள் அவர்கள் தமது நூலை வெளியிட்டு வாசகர்களிடம் கொண்டு சேர்க்கவும் செய்வார்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...