எங்கள் ஆங்கிலத்துறை நடத்தும் மெலாஞ்ச் ஒரு கருத்தரங்கிற்காக ஒரு பன்மொழித் தொகுப்பைக் கொண்டு வருகிறோம். புனைவு, கவிதை, தன்வரலாற்றுக் கட்டுரை என எல்லா வகையான படைப்புகளையும் அனுப்பலாம். தமிழ் உள்ளிட்ட எல்லா இந்திய மொழிகளிலும் எழுதலாம். ஒரே நிபந்தனை - அது ரயில், ரயில் பயணத்தைப் பற்றி நேரடியாகவோ குறியீடு உருவகமாகவோ குறிப்பிட வேண்டும். ரயிலின் தடதடப்பு ஒலி கேட்க வேண்டும். இயன்றால் உங்கள் படைப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை சேர்த்து அனுப்பலாம், இரண்டையும் அருகருகே பிரசுரிப்போம். இல்லாவிட்டாலும் பிரசுரிப்போம். இரண்டு மாதங்களில் நூல் வெளியிடப்படும். ஆர்வமுள்ள நண்பர்கள் melangecreativeanthology@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு படைப்புகளை அனுப்பவும்.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments