எங்கள் ஆங்கிலத்துறை நடத்தும் மெலாஞ்ச் ஒரு கருத்தரங்கிற்காக ஒரு பன்மொழித் தொகுப்பைக் கொண்டு வருகிறோம். புனைவு, கவிதை, தன்வரலாற்றுக் கட்டுரை என எல்லா வகையான படைப்புகளையும் அனுப்பலாம். தமிழ் உள்ளிட்ட எல்லா இந்திய மொழிகளிலும் எழுதலாம். ஒரே நிபந்தனை - அது ரயில், ரயில் பயணத்தைப் பற்றி நேரடியாகவோ குறியீடு உருவகமாகவோ குறிப்பிட வேண்டும். ரயிலின் தடதடப்பு ஒலி கேட்க வேண்டும். இயன்றால் உங்கள் படைப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை சேர்த்து அனுப்பலாம், இரண்டையும் அருகருகே பிரசுரிப்போம். இல்லாவிட்டாலும் பிரசுரிப்போம். இரண்டு மாதங்களில் நூல் வெளியிடப்படும். ஆர்வமுள்ள நண்பர்கள் melangecreativeanthology@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு படைப்புகளை அனுப்பவும்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
Comments