Skip to main content

மாட்டு வண்டிக்குப் பதிலாக ரேஸ் கார்


தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் எடுத்துள்ள மாட்டு வண்டி அணியைக் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள்ளன. வேறு வழியில்லாமல் ரோஹித் ஷர்மாவும் அகார்க்கரும் ஊடக சந்திப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த அணியைப் பற்றி என் பார்வையை தனியாக எழுதுகிறேன்.
கீழே வருவது டி20 உலகக் கோப்பைக்கான என்னுடைய 15 வீரர்கள் கொண்ட அணி:
ருதுராஜ் கெய்க்வாட்
ஜெய்ஸ்வால்
சூர்யகுமார் யாதவ் (தலைவர்)
ஷிவம் தூபெ
ரிங்கு சிங் (பினிஷர்)
ஹர்த்திக் பாண்டியா (ஆல் ரவுண்டர்)
ஜிதேஷ் ஷர்மா (கீப்பர்)
ரவீந்திர ஜடேஜா (ஆல் ரவுண்டர்)
குல்தீப் யாதவ்
சந்தீப் ஷர்மா
அர்ஷ்தீப் சிங்
நடராஜன்
பும்ரா
ரவி பிஷ்னோய்
அபிஷேக் ஷர்மா
ரிசர்வ் வீரர்கள்
நிதீஷ் குமார் ரெட்டி (ஆல் ரவுண்டர்)
ஷஷாங்க் சிங் (பினிஷர்)
அஷுதோஷ் ஷர்மா (கீப்பர்)
சாய் கிஷோர்
திலக் வர்மா / பராக் (மத்திய வரிசை - எண் 4 வீரர்)
என்னுடைய அணியில் 180-220 ஸ்டிரைக் ரேட்டில் ஆடும் இளம் மட்டையாளர்களே துவக்க வீரர்கள். 3, 4 எண்களில் வலது, இடது கை அதிரடி வீரர்கள். அதன் பிறகு மூன்று பினிஷர்கள் வருகிறார்கள். ஒருவேளை சீக்கிரமே விக்கெட்கள் விழுந்தால் ஜடேஜாவை சூர்யாவுடன் ஆட எண் 4க்கு அனுப்பலாம். அதே போல 5 விக்கெட்டுகள் விழுந்தாலும் அவரால் அணியின் வீழ்ச்சியை கட்டுப்படுத்தி குறைவான ரன் ரேட்டில் சில ஓவர்கள் தாக்குப்பிடித்து பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியும். பந்து நின்று வராத பட்சத்தில் குல்தீப்பின் இடத்தில் ஒரு சந்தீப் ஷர்மா வருவார். எண் 7 வரை 20 ஓவர் போட்டிகளில் மட்டையாளர்கள் போதும் என்பது என் நம்பிக்கை. அதற்கு மேல் ஆல்ரவுண்டர்கள் வருவது அணியை பலவினப்படுத்துமே அன்றி வலுவாக்காது. அப்படியே ஒரு மெத்தனமான ஆடுதளத்தில் கூடுதலாக சுழலர் வேண்டுமெனில் அபிஷேக் ஷர்மாவை ரித்துராஜின் இடத்தில் எடுக்கலாம். பும்ரா, அர்ஷ்தீப், நடராஜன், ஹர்த்திக் பாண்டியா வேகவீச்சாளர்கள். ஹர்த்திக்கும் அர்ஷ்தீப்பும் பும்ராவும் துவக்க பந்துவீச்சாளர்கள். இடதுகை மட்டையாளர்கள் வரும் போது நடராஜன், அர்ஷ்தீப், பும்ரா ஆளுக்கு ஒரு ஓவர் வீசலாம். ஹர்த்திக்கும் வீசலாம். வலது கையாளர்களுக்கு ஜடேஜா. அபிஷேக்கை அணியில் வைத்திருப்பது ஒருவேளை ஹர்த்திக்குக்கு ஆட்டத்தின் நடுவே காயம்பட்டால் சமாளிக்க உதவும். (ஒருவேளை எதிரணியில் இடதுகை மட்டையாளர்களே அதிகம் எனில் ரியான் பராக்கையோ திலக்கையோ துபேவின் இடத்தில் எடுக்கலாம். துபேவின் பந்து வீச்சு பள்ளிக்குழந்தைகளுக்கு எதிராக மட்டுமே எடுபடும். இவர்கள் இருவரும் சுமாராக ஆப் ஸ்பின் போடுவார்கள்.)
அடுத்து ரிசர்வ் வீரர்கள். ஹர்த்திக்குக்கு காயம் பட்டால் தற்காலிகமாக அவரிடத்தில் நிதீஷை ஆட வைக்கலாம். அவருக்கு மட்டையாட்ட திறனும் ஓரளவுக்கு தடுப்பாட்டமாக பந்துவீசவும் வரும். அபாரமான களத்தடுப்பாளர். ஜிதேஷ் இதுவரை இந்திய டி20 அணியில் ஆட வைக்கப்பட்டதால் நான் அவருக்கு வாய்ப்பளிப்பதே சரியென நினைக்கிறேன். அவரும் ரிங்குவும் நன்றாக கூட்டணி வைப்பார்கள். ஆனால் ஜிதேஷால் சரிவர ஆட முடியாதபட்சத்தில் அஷுதோஷ் ஷர்மாவே என் தேர்வு. ஜடேஜாவுக்கு சிறிய காயம் உள்ளதென நினைக்கிறேன். அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டால் மாற்றாக அக்‌ஸரை எடுக்க முடியாதபடிக்கு அவரது பந்துவீச்சு மட்டம். அதனால் சாய் கிஷோரை எடுப்பேன். கிஷோரால் தன் பந்துவீச்சைக் கொண்டே ஒரு போட்டியை வென்றளிக்க முடியும்.
நடராஜனுக்கும் உடற்தகுதி எப்போதுமே சற்று ததிக்கிணத்தோம் தான். அவருக்கு மாற்று வீரரகாவே சந்தீப் ஷர்மாவைப் பார்க்கிறேன். அவரால் துவக்க ஓவர்களில் ஸ்விங் பண்ணவும் கடைசி ஓவர்களில் செமையாக மெதுபந்துகளை வீசி கட்டுப்படுத்தவும் முடியும்.
சூர்யாவை நான் அணித்தலைவராக பார்ப்பது அவரை கவனித்தவரை தலைமைப் பண்பு அவரிடம் நிச்சயமாக உள்ளது என்பதாலே. மேலும் அவரே இன்று உலக அளவில் சிறந்த டி20 மட்டையாளர்.
இந்த அணி தேர்வாகி இருந்தால் ஒரு கலக்கு கலக்கியிருக்கும். வென்றாக வேண்டும் எனும் நெருக்கடி இல்லாததால் ஜாலியாக ஆடி அரை இறுதியிலும் வெல்வார்கள். ஆனால் வயதானவர்களால் அது முடியாது. பழைய தோல்விகளை தவிர்ப்பதே வெற்றி என நினைப்பவர்கள் அவர்கள். சுயநலத்தின் பாதுகாப்பின்மையின் சிகரங்களாக ஆடி கடுப்பேற்றுவார்கள். அதனாலே வயதான வீரர்கள் இந்த அணியில் இல்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...