படைப்பாளிகளுக்கு தாம் எழுதும் நாவலைப் போன்ற பெரும் படைப்புகளுக்கு எதிர்வினைகள் வரும்போதே அடுத்தடுத்த படைப்புகளுக்குச் செல்ல ஆர்வமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். அவ்விதத்தில் அண்மையில் கணேஷ் எழுதியிருந்த குறிப்பும், மணிமாறனின் இந்த விமர்சனமும் எனக்கு முக்கியமானது.
"நிழல் பொம்மையின்" அரசியல், தத்துவ ஊடுபாவல்களை மணிமாறன் நன்றாக கவனப்படுத்தி விவாதித்துள்ளார். அவருக்கு என் அன்பும் நன்றியும்.
- ஆர். அபிலாஷ்
####
சென்னை புத்தகக்கண்காட்சி வந்து செல்ல வாய்க்கவில்லை. ஆனாலும் பிரியமான புத்தகங்கள் எனை நெருங்கத் தவறவில்லை.
வந்தவற்றை வாசிக்கத் துவங்கியிருக்கிறேன்...
அபிலாஷ் எழுதியிருக்கும் "நிழல் பொம்மை" உளவியல் தத்துவங்கள் குறித்து தர்க்கமும் விவாதமும் செய்யும் நாவல்..
அதிகாரம் குறித்த மிஷேல் பூக்கோவின் கோட்பாடுகளை புனைவாக்கித் தந்திருக்கிறார் எழுத்தாளர். நீட்சேயின் அதி மனிதனாகிடவே இங்கு யாவருக்கும் பெரும் விருப்பம். தத்துவங்களின் கலைவடிவமே நாவல் என நாவலை வாசிக்கும் போது எனக்குள் சொல்லிக்கொண்டிருந்தேன். மத நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருக்கும் பல்கவைக்கழகங்கள் குறித்த குறுக்கு வெட்டுத் தோற்றமே நாவலின் உடலாகியிருக்கிறது.
நாவலுக்குள் தன் கதையைச் சொல்லி நகர்த்திடும் அவன் ஒரு வசீகரன். கனித ஆசிரியனாக அவன் இருப்பதும். அவனுடைய மாணவர்களாகவும் தோழிகளாகவும் வருகிறவர்களுக்கும் அவனுக்கும் இடையிலான நாவலின் பகுதிகள் உடல் அரசியல் குறித்தும் காமம் குறித்துமான தர்க்கமாகவும் தொடர்கிறது.
நாவலின் பின்னினைப்புகளாக வருகின்ற மூன்று பகுதிகளும் அதுவரை வாசித்திருந்த நானூறு பக்கங்களையும் குறித்த அர்த்தத்தையும் அர்த்தமின்மையும் வாசக மனதினுள் ஏற்படுத்தவே செய்யும்.
விரிவாக எழுத வேண்டிய உளவியல் உடலரசியல் நாவல். எழுதனும்.
நாவலின் கடைசி வரிகள் இன்னும் எனக்குள் ஓடிக்கொண்டேயிருக்கிறது..
"எதைக்கண்டும் வியக்காதபோது இந்த உலகம் எல்லா சாதாரணங்களுடனும் அழகாகி விடுகிறது. "..
- மணிமாறன்

Comments