Skip to main content

சீமானின் நாஜி சிந்தனை


புத்தகக் காட்சியை மிகக் கொடூரமாக ஒருங்கிணைப்பதில் நாஜி வதைமுகாம் நிர்வாகிகளைப் போலச் செயல்படும் பபாஸியின் மேடையில் நவீன நாஜியான சீமான் தோன்றிப் பேசி சர்ச்சையானது வெகு பொருத்தமானது. உதாரணமாக, சீமான் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரிடம் கேட்கிறார், "நீ யாரு சொல்லு, சொல்லு நீ தமிழனா? திராவிடன் தானே? உன்னை மாதிரி திராவிடர்கள்னு சொல்லிக்கிறவங்கதான் . ..". அவர் கேட்க உத்தேசித்தது " நீ என்னை ஆதரிக்கவில்லை என்றால் நீ தமிழனே அல்ல. நீ தெலுங்கனோ கன்னடனாவாக இருந்து திராவிடர் என்று முகமூடி அணிந்து ஏமாற்றி வாழ்கிறாய். என் கையில் நீ சிக்கினால் இம்மண்ணில் நீ வாழவே முடியாது." சம்மந்தப்பட்டவர் தான் தமிழனே என்றால் சில நூற்றாண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்து வந்தவர்களின் வழித்தோன்றல் நீ என்று கூறுவார். இந்த மொழி அப்படியே நாஜிக் கட்சியினருடையது. எதிரிடையே உருவாக்கி வெறுப்பை விதைத்து அபத்தமான லாஜிக்கைக் கொண்டு மக்களைக் கட்டம் கட்டி அழித்து அந்த வன்முறையில் அதிகாரத்தைப் பெறும் உத்தி. இது தமிழ் தேசியமும் அல்ல. சீமான் தமிழ் தேசியத்தின் பெயரை பயன்படுத்தி முன்வைப்பது ஒரு மோசடிக் கொள்கை. அதன் பெயர் மொழிசார்ந்த இனவெறிக் கொள்கை. தமிழ் நாஜிவாதம். அதற்கும் தமிழுக்கும் கூட எந்த சம்மந்தமும் இல்லை அவர் நூற்றுகணக்கில் பணம் வாங்குவது காவி குஜராத்திகளிடம் இருந்துதானே. அதை மறைக்கத்தான் அவர் தனக்கு முன்வந்த ஒரிஜனல் தமிழ் தேசியவாதிகளின் பெயர்களை அடிக்கடி உதிர்க்கிறார். அவர்களைத் தன் பாட்டன், பூட்டன், ஐயன், மாமா, சித்தப்பா என்றெல்லாம் பெயரொட்டுக் கொடுத்து அழைக்கிறார். அவருக்கு ஈழத்தமிழரிடையே நிதிவசூலிக்க அவசியம் இருப்பதால் பிரபாகரனைத் தன் தந்தையாகச் சித்தரிக்கிறார். இவையெல்லாம் முகமூடிகள். அவரது உண்மையான கொள்கை ஒரு பொய்யான, அபத்தமான விளக்கத்தின் அடிப்படையில் தமிழரை தம் சக தமிழர் குறித்து ஐயமும் வெறுப்பும் கொள்ள வைப்பது. பிளந்து சதா அச்சத்த்தை விதைத்து அதன் மீது நின்று அதிகாரத்தை வெல்வது. உ.தா, நீங்கள் நா.த.கட்சியை ஆதரிக்கும்பட்சத்திலும் நீங்கள் ஒருவேளை தமிழர் இல்லையோ எனும் குழப்பத்திலே இருக்க வேண்டிவரும். ஏனென்றால் சீமானின் வரையறை மாறிக்கொண்டே இருக்கும். திடீரென்று ஒருவரை அண்ணன் என்பார், அடுத்த கணமே துரோகி, இன விரோதி என்பார். முருகனையும் சிவனையும் வழிபடாதவர் தமிழரே அல்லர் என்பார். அடுத்து அந்த வரையறையையும் மாற்றுவார்.
மெல்ல மெல்ல சீமான் தன்னவர் என அடையாளம் காட்டுவோர் மட்டுமே தமிழர் என்றாகும். அப்போது அனேகமாக ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் தாம் தமிழர் அல்லவோ எனும் அச்சமும் பதற்றமும் குழப்பமும் வழிநடத்தும். ஆகையால் தொடர்ந்து யாரையாவது அ-தமிழர் எனக் கட்டமைக்கத் தலைப்படுவர். இது அடிப்படையில் கண்ணைக் கட்டிக்கொண்டு நிற்பவரை ஒருவர் மற்றவரைத் தொடும்பட்சத்ததில் அவரிடம் தொடப்பட்டவர் வந்துவிடும் கண்ணாமூச்சி விளையாட்டுதான். இத்தகைய சித்தாந்தம் சைக்கோத்தனமானது - இது மொத்த சமூகத்தையும் பைத்தியம் பிடிக்கச் செய்யும்.

இந்தியாவுக்குள் மக்கள் நகர்ந்துகொண்டே இருப்பது பல நூற்றாண்டுகளின் இயல்பென்பதால் மூர்க்கமான இன வரையறைகள் எடுபடாது, அதன் பெயரிலான தேசியமும் அபத்தமாகும். சீமான் அதனால் தமிழரை இனமென்று அழைப்பதை கவனியுங்கள். மொழிக்குடும்பம் இருப்பதைப் போல மொழிசார் இனம் சாத்தியமில்லை என்பதே உண்மை. தமிழ் மொழியிலே 'சங்கம்' என்பதில் வரும் 'ஸ'வுக்கு எழுத்தில்லை என்பதை கவனியுங்கள். எப்படி வடமொழியின் ஓசை சங்கத்தமிழுக்கு வரமுடியும்? கஸப்பு என்போமா கச்சப்பு என்போமா? மோசம் என்போமா மோச்சம் என்போமா? இந்த ஸ பௌத்தர்கள் வழியாக பாலி, சமஸ்கிருதம் வழியாக இங்கு வந்தது. அவர்களுக்கும் நமது பழம் இலக்கியம், இலக்கண நூல்களுக்கும் அறுக்க முடியாத தொடர்பு உண்டல்லவா! இந்த மொழியே கலவை மொழிதானே. இதையெல்லாம் மறுத்து கறுப்பு-வெள்ளைச் சட்டகத்தில் வைதது தமிழ் சமூகத்தைப் பார்க்கவே தமிழரை ஒரு மொழிபேசும் சமூகமாக அல்லாமல் இனமாக இவர்கள் பார்க்கிறார்கள். ஏனென்றால் இனமென்று வரும்போது அங்கு ஆய்வுகளை யாரும் பண்ணி நிரூபிக்க முடியாது. மொழியென்றால் அதன் தோற்றக் கதையாடல் குறித்து பல கேள்விகளை எழுப்பலாம். அடுத்து இது தமிழராக இருந்தும் தமிழல்லாதவர் எனும் கற்பிதமான வரையறையை, மாயாவியை உருவாக்கி அச்சுறுத்த உதவுகிறது. சீமானின் மொழியில் இந்த மாயாவி திராவிடர். ஹிட்லரும் இப்படித்தான் யூதர்களை ஒரு மதத்தைப் பின்பற்றுவோராக அன்றி இனமாகவே வரையறுத்தார் என்பதை கவனிக்க வேண்டும். மதம் என்பது நெகிழ்வானது. யாரும் மதத்தைத் தழுவ முடியும். ஆனால் இனம் உறுதியானது. அதைக் கேள்விக்குள்ளாக்கவோ மாற்றவோ முடியாது. கன்னட மொழியை சில தலைமுறைகளுக்கு முன் தாய்மொழியாகக் கொண்டிருந்த ஒருவர் தமிழராகவே இங்கு இருக்க முடியும். ஆனால் அதை மறுக்க சீமான் வகையறாக்கள் அவர்கள் தமிழ் மொழியினர், தமிழ் இனத்தவர் அல்ல, இரண்டும் வேறுவேறு என்கிறார்கள். இந்த தமிழ் இனம் எனும் கருத்துருவை நீங்கள் அறிவியல் ரீதியாக விளக்கவோ நிறுவவோ முடியாது. அதை அதற்கு எதிரியாகக் கருதப்படும் கருத்துருவைக் கொண்டே நிறுவ முடியும். திராவிடர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் தெரியுமா, திராவிடர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா, யார் தெரியுமா எனப் பேசுவதன் வழியாக அப்படி பாதிக்கப்பட்டவர் தமிழர் என்று கவனத்தைத் திருப்ப முடியும். தமிழ் இனத்தவர் யாரெனக் கேட்டால் சங்க காலம், முருகன் என்று கதைவிடுவார்கள். அதன் மீதும் கேள்வியெழுப்பினால் திரும்பவும் திராவிடரை விமர்சிக்கத் தொடங்குவார்கள். எதிர்-பரப்புரை இல்லாமல் அவர்களால் தமிழ் இனத்தை நிறுவவே முடியாது. ஹிட்லரும் இப்படியே ஆரிய இனத்தை வரையறுத்தார். தன் வாழ்வின் முடிவுவரை அவரால் ஆரியவாதத்தை விஞ்ஞானபூர்வமாக நிறுவ முடியவில்லை. திராவிட இனத்தவர் தமிழ் விரோதிகள் என்பது யூதர்கள் ஆரிய விரோதிகள் என்பதைப் போன்றதே.

இதைப் போன்ற நாஜி சிந்தனையை ஒருவர் வெளிப்படுத்த நவீன சமூகத்தில் நாம் அனுமதிக்கக் கூடாது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...