ஆம் ஆத்மியின் ஊழலைப் பற்றி தில்லிக்காரர்களான என் மாணவர்கள் முன்பே சொன்னார்கள். ஆகையால் அண்மையில் கேஜ்ரிவால் கைதானபோது நான் ஆச்சரியப்படவில்லை. மக்கள் வேறுவழியில்லாமல் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஊழலை ஒழிக்க முதல் வழி தனிச்சொத்தை ஒழிப்பதோ கட்டுப்படுத்துவதோ தான். சொத்தை, பணத்தை கட்டில்லாமல் சேர்த்துக்கொள்ள தனிமனிதர்களுக்கு வாய்ப்பிருந்தால் ஊழல் பெருகுவதை தடுக்க முடியாது. அப்படி ஒழிப்பதாக சொல்லி வாக்கு கேட்பவர்களே அதிக ஊழல் செய்யும் பெருச்சாளிகளாக மாறுவார்கள். தில்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் வீழ்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணம்!
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
Comments