அசலான பாசிசம் அரசமைப்பில் அல்ல தனியாரிலே பரவலாக உள்ளது என்று நான் கூறுவது இதனாலே. இலக்கை அடையாத ஊழியர்களை மிரட்டியும் அச்சுறுத்தியும் பணிய வைப்பதைப் போல அவர்களை சுயமாகத் தண்டித்து அதை நடிக்க வைப்பது இன்னொரு நவீன பாணி. அவர்கள் தமது சுயமரியாதையை இழந்தபின்னர் எவ்வளவு வேண்டுமெனினும் சுரண்டலாம் என்பதே இந்த உபாயத்தின் நோக்கம். எனது "நிழல் பொம்மை" நாவலிலும் இப்பிரச்சினையை வேறுவிதமாக - மீசையின் அளவைப் பரிசோதிக்கும் நடைமுறையாகச் சித்தரித்துப் - பேசியிருக்கிறேன். பாசிசத்தை முதலீட்டியம் ஆதரிப்பதாலே அது மத்தியில் ஆளுகிறது!
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

Comments