Skip to main content

உள்ளே வெளியே



இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி ரொம்ப சுவாரஸ்யமாகப் போகிறது. ஆடச் சிரமமான ஆடுதளம். பந்து ஸீம் ஆகிறது (தையலில் பட்டு ஆட்டமாய் அசைகிறது), ஸ்விங் ஆகிறது (குளிர் சீதோஷ்ணம், மழை மேகமூட்டத்தால் காற்றிலே அலைகிறது). முதலில் மட்டையாடிய இந்தியா 224 எடுத்தால் அடுத்து ஆடிய இங்கிலாந்து 247. அடுத்து ஆடிய இந்தியா 75க்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. அடுத்து இந்தியா எவ்வளவு ஓட்டங்கள் எடுப்பார்கள், ஆட்டம் நான்காவது நாளுக்குப் போகுமா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் இந்த ஆடுதளத்தில் பந்தை முன்னங்காலில் விரட்டுவதோ புல் அடிப்பதோ சுலபமல்ல. பின்னங்காலுக்குப் போய் விரட்டுவதும் ரிஸ்க்தான். சில பந்துகள் அரை அடிக்கு உள்ளே வருகிறது. குறிப்பாக வலதுகை மட்டையாளர்களுக்கு. சில பந்துகள் இப்போதே தரைமட்டமாக பல்லியைப் போல ஊர்ந்து வருவதைப் பார்த்தால் மூன்றாவது நாள் ஆட்டமும் கடினமாக இருக்கும், நான்காவது நாளுக்கு ஆட்டம் சென்றால் படுபயங்கரமாக இருக்கும் எனத் தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் விக்கெட் விழலாம் என்பதால் தடுத்தாடி ரன் சேர்ப்பதும் சுலபமில்லை. ஓவருக்கு ஒரு பவுண்டரியாவது அடிக்காவிடில் அழுத்தம் அதிகரித்து விக்கெட் போகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட ஸ்டைலிலும் (விரட்டுவது, வெட்டுவது) மட்டையாளரால் ஆட முடியாது. ஆனால் மைதானத்தின் புல்வெளிப் பரப்பானது வேகமாக உள்ளது. ஆடுதளத்தில் வேகமும் உள்ளது. அதனால் பவுண்டரி அடிப்பது சற்று சுலபம். இதனால்தான் கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் நேர்மறையாக ஆடினாலே அரைசதம் கூட அடிக்க முடியும் என மட்டையாளர்கள் நினைக்கிறார்கள். சினிமாவில் புற்றுநோய் முற்றிய நிலையில் காதலர்கள் இருவரும் கல்யாணம் பண்ணிக்கொண்டே சாகலாம் என நினைப்பார்களே மட்டையாளர்களும் அப்படியே கொஞ்சம் ரிஸ்க் எடுத்து வேகமா ரன் அடிச்சே அவுட்டாகலாம் எனும் முடிவுக்கு வருகிறார்கள். இங்கிலாந்து இரண்டாவதாக மட்டையாடியபோது கிராலியும், டக்கெட்டும் பத்து ஓவர்களில் 90க்கு மேல் அடித்தார்கள். அது இல்லாவிடில் அவர்கள் 140க்கு ஆல் அவுட் ஆகியிருப்பார்கள். 100 ரன்கள் லீட் கொடுத்திருப்பார்கள். அந்த அதிரடி துவக்கமே அவர்களைக் காப்பாற்றியது. இந்தியா அடுத்து ஆட வரும்போது ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்ட உத்தியும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் இந்தியாவுக்கு கைகொடுத்தது. அல்லாவிடில் 30க்கு 3 விக்கெட்டுகள் கொடுத்திருப்பார்கள்.

இங்குதான் இங்கிலாந்தும் இந்தியாவும் செய்த ஆடுகள அமைப்புத் தவறுகளைச் சுட்ட வேண்டும் - இந்த ஆடுதளத்தில் துவக்கத்தில் இருந்தே உள்ளே-வெளியே ஆடுகள அமைப்பே சரியானது. மட்டையாளர் பவுண்டரி அடித்து தன் மீது அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் பந்துவீச்சாளர் பதற்றத்தில் நீளத்தைக் குறைத்தால் விக்கெட் விழாது. இன்று ஜெய்ஸ்வாலுக்கு இந்தளவுக்கு பவுண்டரிகளைக் கொடுக்காவிடில் இந்தியா பின்னடைவு பெற்றிருக்கும். அதேபோல இங்கிலாந்து துவக்க வீரர்களை களத்தை உள்ளே அமைத்து அதிகமாகத் தாக்க முயன்றதாலே வேகமான துவக்கம் அவர்களுக்குக் கிடைத்தது. இரண்டு அணித்தலைவர்களும் தவறிழைத்து விட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் போப்புக்குப் பதில் ஸ்டோக்ஸ் தலைவராக இங்கிலாந்துக்கு இருந்திருந்தால் நான்கு களத்தடுப்பாளர்களையாவது நான்காவது ஓவர் முதலே வெளியே நிற்க வைத்திருப்பார். பவுண்டரிகளை ரத்து செய்திருப்பார். ஜெஸ்வாலின் ஸ்கோர் ஆட்டநாள் முடிவில் 20ஆக இருந்திருக்கும். போப் நாளைக்கு சுதாரித்து ஆடுகளத்தை நிச்சயமாக மாற்றுவார், அத்துடன் விக்கெட்டுகள் சரியும் என நினைக்கிறேன்.
ஒருவேளை இந்தியாவால் 260-300 இலக்கை நிர்ணயிக்க முடிந்தால் உள்ளே-வெளியே ஆடுகளத்தை கில் அமைத்து ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். நான்கு ஸ்லிப்புகளும் கல்லியும் / டீப் பைன் லெக்கும் போதும். நான்கு பேர்களையாவது வெளியே நிற்க வைக்க வேண்டும். ஒற்றை ரட்டை ரன்களைக் கொடுக்கலாம் தப்பில்லை. மட்டையாளர்கள் பத்து ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தால் விக்கெட்டுகள் நிச்சயமாக விழும். ஆனால் இந்தியா 200க்குள் ஆல் அவுட் ஆனால் வெல்வதற்கு சிரமப்படும். 260-280 தாண்டினாலே வெற்றியின் கதவுகள் திறக்கும். ஆடுதளம் அந்தளவுக்கு நாளை மாறாது என எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...