“என்னாச்சு சார் இந்த தடவையும் இடத்தை கண்டுபிடிக்க முடியலியா?”
“இல்ல அதெல்லாம் ஒருமணிநேரத்துக்கு முன்னாடியே கரெக்டா கண்டுபிடிச்சு வந்திட்டேன். மின்விசிறிகள் சுழலுது. மேடையை நல்லா அலங்கரிச்சு வச்சிருக்காங்க. என் பெயர் பொறிச்ச, என் படத்தோட கூடிய ஒரு பிரம்மாண்டமான பேனர் வச்சிருக்காங்க. ஆனா இங்க மேடையிலயோ ஹாலிலயோ தான் யாரையும் காணோம். மேடையில நான் மட்டும் தனியா உட்கார்ந்திருக்கேன். நீங்க ப்ளீஸ் லைனில் இருங்க. தனியா பேச பயமா இருக்கு”
பிறகு அவர் போன் லைனில் இருக்க, இந்த தேசம் முன்னேற, அநீதி ஒழிய, வறுமையும் பசியும் அறியாமையும் நீங்க என்னவெல்லாம் வழிகள் என தன் சொற்பொழிவை ஆரம்பித்தார். அடுத்து பலத்த கரகோஷம் கேட்டது. நாங்கள் வியப்பாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
“சரி விடு, அதைப் பத்தியெல்லாம் யோசிக்காம இந்த முறையாவது அவர் பேச்சை கேட்போம்”, நண்பன் சொன்னான்.
Comments