முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகல்யா

 "நாங்கள் ஒரு முறை சாக்கடைக் குழாய்க்குள் மாட்டிக் கொண்ட நாய்க்குட்டி ஒன்றை காப்பாற்றுவதற்காய் சென்றிருந்தோம். அதன் கால் ஒடிந்திருந்ததால் உள்ளே இறங்கி எடுப்பதற்குள் ரொம்ப சிரமமாகி விட்டது. நாய்க்குட்டியை நாங்கள் வெளிக்கொணரும் நேரும் அலுவலக பெண்கள் சிலரும் ஸ்பாட்டில் இருந்தார்கள். அவர்கள் எங்களுடன் சேர்ந்து நாய்க்குட்டியை கையில் வைத்துக் கொண்டு செல்போனில் புகைப்படம் எடுத்தனர். சில நிமிடங்களில் நாய்க்குட்டியை அவர்கள் சேர்ந்து எவ்வாறு காப்பாற்றினார்கள் என உணர்ச்சிகரமான அறிக்கையை எழுதி பேஸ்புக்கில் பதிவேற்றி விட்டார்கள். இது போன்ற பதிவுகளுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகளுக்கும் அதன் வழியாக லட்சக்கணக்கான தொகை நிதியும் எங்களுக்கு கிடைப்பதுண்டு. குறிப்பாக நடுரோட்டில் திரியும் பசு ஒன்றை பிடித்து லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து அதைக் காப்பாற்றியதாய் எழுதினால் வெளிநாட்டில் வசிக்கிறவர்களிடம் இருந்து அதைப் பற்றி விசாரித்து நிறைய குறுஞ்செய்திகளும் ஸ்பான்சர்ஷ்பிப் ஏற்றுக் கொள்ளும் விருப்பங்களும் குவியும். இந்த பசுக்களின் உரிமையாளர்கள் பின்னர் எங்களிடம் வந்து விசாரிக்கும் போது அவற்றை திரும்ப அனுப்புவதற்கு எங்கள் நிறுவனத்தார்கள் ரொம்பவே பிகு பண்ணுவார்கள். நேரடியாக தனியார் லாயங்களில் இருந்து மோசமாய் பராமரிக்கப்படுவதாய் சொல்லி மீட்கப்படும் பசுக்களை சில ஆயிரங்களாவது கட்டணம் வசூலிக்காமல் எங்கள் சி.இ.ஒ சி.கெ மகேந்திர சிங் திரும்ப அளிப்பதும் இல்லை.

இந்த கூட்டத்தில் அகல்யா போன்று ரொம்ப நாணயமான மிருகவதை போராளிகளும் உண்டு. சதா நாய்களுக்கு உணவளிப்பது, அடிபட்ட நாய்களுக்கு மருந்தளித்து காப்பாற்றுவது என நேரடியான களப்போராளி அவள். பேரழகி.
எங்கள் சி.இ.ஒ மகேந்திர குமார் முப்பது வயதுக்கு உட்பட்ட இளைஞர். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. ஓய்வெடுக்க அடிக்கடி ஸ்விட்செர்லாந்த் போகும் அளவுக்கு வளமானவர். சில வருடங்களாய் அகல்யா அவருக்கு நெருக்கமாக இருந்தாள். ஒருநாள் அவள் அவருடன் இ.சி.ஆரில் உள்ள ஒரு பங்களாவில் இருக்கையில் அவரது மனைவியும் சில உறவினர்களுமாய் அங்கு வந்து தகராறு செய்தாள். அவளை காவல்நிலையத்திற்கு கொண்டு போனார்கள். அவளை மீட்பதற்காய் சென்ற தோழிகள் மூலமாய் செய்தி அலுவலகம் முழுக்க பரவியது. "

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...