Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கெ.எல் ராகுலின் ருத்திர தாண்டவம்


ரஞ்சிக் கோப்பை காலிறுதிப் போட்டி

Mumbai - 120 & 377
Karnataka - 173 & 325/6 (T:325)
மும்பை மிக மிக அரிதாகத்தான் இறுதிப் போட்டிக்கு வராமல் போகும். 42 முறைகள் ரஞ்சிக் கோப்பையை அடித்துள்ள அணி. உலக கிரிக்கெட்டிக்ல் ஆஸ்திரேலியா எப்படியோ அப்படி ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் மும்பை இருக்கிறது. ரொம்ப ரொம்ப சுமாராக ஆடிய தொடர்களில் கூட அது எப்படியோ இறுதிப் போட்டியை அடைந்து அபாரமாக ஆடி வென்றுள்ளது. ஆனால் இம்முறை கர்நாடகாவிற்கு எதிராக மும்பை ரயில் தடம் புரண்டுவிட்டது. டி20 உலகக்கோப்பைப் போட்டிகளை விட பலமடங்கு பரபரப்பான சுவாரஸ்யமான போட்டியாக இது அமைந்தது. முதல் நாள் மும்பை 120க்கு ஆட்டமிழந்தபோது அவர்களது சோலி முடிந்தது என நினைத்தேன். ஆனால் மீண்டு வந்தார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் 377 அடித்தபோது அரை இறுதிக்குப் போகப் போகிறார்கள் என நினைத்தேன். ஆனால் ஆடுதளம் தட்டையாகிவிட மும்பையும் சோர்ந்து போனது. அவர்கள் விழித்துக்கொண்டு போராடியபோது ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்திருந்தது. கெ.எல் ராகுல் பிரமாதமாக ஆடி கர்நாடகாவை வெல்ல வைத்தார். ரவிச்சந்திரன் ஸ்மரனும் நன்றாக ஆடினார். அவர் இப்போதைக்கு 60க்கு மேல் சராசரி வைத்திருக்கிறார். ஸ்டைலான இடதுகை மட்டையாளர். திறமையாளர். ஒரே பலவீனம் ஆப் ஸ்டம்பில் விழுந்து வெளியே போகும் முழுநீளப் பந்தை கால் நகர்த்தாமல் ஆடுகிறார். அடுத்த சில பருவங்களில் பந்து வீச்சாளர்கள் இந்த பலவீனத்தை இலக்காக்குவார்கள். கெ.எல் ராகுல் இவ்வளவு கூலாக திடமாக இந்திய அணி நெருக்கடியில் இருக்கும்போது ஆடிப் பார்த்ததில்லை. சர்வதேசப் போட்டிகளிலும் அவரால் இதே போல நெருக்கடியைச் சமாளிக்க முடியுமெனில் சுலபமாக இந்தியாவின் நம்பர் 1 மட்டையாளர் ஆகிவிடுவார். ஆனால் அங்கு மட்டும் அவருக்கு கால் நடுங்கும். மரணக் கட்டை போட்டு அவுட் ஆகி விடுவார்.
செமையான போட்டி. ஹாட்ஸ்டாரில் ஹைலைட்ஸ் இருக்கும். பாருங்கள்.

Comments

Popular posts from this blog

அரசியல் சினிமாவில் இருந்து கட்சி சினிமா - புதிய போக்கு

சுதந்திரப் போராட்டத்தின்போது நாடகக் கலைஞர்கள் பிரச்சாரத்துக்குப் பயன்பட்டார்கள். அச்சூழலில் பிரச்சார நாடகங்களுக்கு மக்களிடையே மவுசிருக்கும் என்று தெரிந்தேதான் சில குழுக்கள் அத்தகைய நாடகங்கள் பக்கமாக நகர்ந்தார்கள். அதன்பிறகு திராவிட அரசியல் தேர்தல் களத்தில் வெல்ல நாடகங்களும் சினிமாவும் பெருமளவில் உதவின. அல்லது இந்நாடகங்களும் சினிமாக்களும் வெல்ல திராவிடக் கொள்கைகளின் புகழும் மக்கள் ஏற்பும் உதவின. இந்த பரஸ்பரச் சார்பு கவனிக்கத்தக்கது. இதுவே பின்னர் மாறப் போகிறது. (அதாவது இன்று மாறியுள்ளது) இதன் பிறகு நமது தேசிய (காங்கிரஸ்), துணைத்தேசிய (உள்ளூர் கட்சிகள்) அரசியல் களங்கள் பெரும்பளவில் நிலைப்பெற்ற தடத்திலே ஓடின. பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் பிரச்சாரத்தையே நம்பியிருந்தன. எழுபதுகளில் இந்திரா காந்திக்கு எதிரான ஜனதா தளத்தின் போராட்டங்களில் கூட சினிமாவும் நாடகமும் பெரிய பங்காற்றவில்லை, மாணவர் அமைப்புகளும் தொழிலாளர் அமைப்புகளுமே அப்போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினர் என நினைக்கிறேன். அடுத்து, உலகமயமாக்கல் வரும்போது இந்தியாவை ஒரு வளரும் தேசமாக முன்வைக்க சினிமா உதவியது என்றாலும் அது கட்சிப் பிரச...

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா

  சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா (CIBF) சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று என்பதை வெளியில் இருந்து பார்க்கையில் புரிந்துகொள்ள முடியாது. நானே அதை நிதி வீணடிப்பு என்றே ஆரம்பத்தில் கருதினேன். ஆனால் இந்த ஆண்டு அதில் கலந்து கொண்டபோது என் எண்ணம் மாறியது. குறிப்பாக அரசின் நடவடிக்கை மீது பதிப்பாளர்களுக்கு உள்ள மரியாதையினால் எழுத்தாளர்களுக்கு சில பயன்கள் கிடைக்கின்றன. ஒரு சின்ன விசயத்தைக் குறிப்பிடுகிறேன் - பதிப்பாளர்கள் முன்வைக்கும் நூல்கள் அரசின் நூற்பட்டியலில் வண்ணப்படங்களுடன் வழவழ தாளில் வெளியிடப்படுகின்றன. இந்த பட்டியல் நூலில் படைப்புகள் அந்தந்த எழுத்தாளர்களின் முகவர்களின் கீழ் பகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளார்கள். இந்த படைப்புகளை நூலில் பார்க்கும் அயல்மொழி, அயல்நாட்டுப் பதிப்பாளர்கள் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள். அவர்கள் அப்படைப்புகளை மொழிபெயர்க்க முன்வருகிறார்கள். நீங்கள் அவர்களிடம் உங்கள் புத்தகங்களைக் காட்டி விளக்கினாலும் அவர்களுக்கு உங்கள் படைப்பின் முக்கியத்துவம் விளங்காது. ஏனென்றால் அவர்கள் வேறு ஊரை, மொழியைச் சேர்ந்தவர்கள். தமிழ் இலக்கியத்தில் நடப்பன வெளியாட...

செம்மொழி விருது

  //குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்.முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டிய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்கு, ஆண்டுதோறும், 'செம்மொழி இலக்கிய விருது' என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும்.விருதுடன், தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். படைப்புகளின் இலக்கிய தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதிசெய்யும் விதமாக, புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். - முதல்வர் ஸ்டாலின்// நல்ல முன்னெடுப்பு. ஆனால் செம்மொழி அடையாளம் இதன் தேசிய, உலகளாவிய விரிவை அனுமதிக்காமல் குறுக்கி விடுகிறது. இந்திய அளவிலான இலக்கிய விருதென்றோ சர்வதேச விருதென்றோ முன்வைத்திருக்கலாம். இன்னும் பெரிய அளவில் தாக்கம் இருக்கும். சொல்லப்போனால் தேசிய விருதுடன் நின்று விடாமல் நாம் சர்வதேச விருதுகளை உருவாக்க வேண்டும். செம்மொழி போன்ற அரசியல் கட்டமைப்புகளை மீற வேண்டும். ஏனென்றால் எந்த சர்வதேச விருதுக்கும் இத்தன்மை இராது. நோப...