முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனிதக் கடவுள் எனும் இழிவு



மதமும் அரசியலில் மிக மோசமான கூட்டு. அரசியல் தலைவரை கடவுளாக்குவது இன்னும் ஆபத்தானது. இது கல்ட் வழிபாட்டை நோக்கி நகர்த்தக் கூடியது. இவர்கள் விஜய்யை அங்குதான் எடுத்துச் செல்கிறார்கள் என்று நான் எழுதினேன் நேற்று சட்டமன்றத்தில் நடந்துவிட்டது. கடவுளே என்று இவர்கள் அழைப்பதும் இவர் புன்னகையுடன் தலையசைப்பதும் பார்க்க அருவருப்பாக இருக்கிறது. இதற்கு இவர்கள் கடவுள் அறிய என்று கடவுளை நேரடியாகக் குறித்திருந்தாலும் இவ்வளவு கேவலமாக இருந்திருக்காது. இப்போது அரசியலை வழிபாடாக்கி விட்டர்கள். மனித வழிபாடு கூட அல்ல, மனிதக் கடவுள் வழிபாடு.
இம்மாதிரி மதவாத கல்ட் அரசியல் கிறிஸ்தவம், இந்து மதத்திற்கு அப்பாலானது. பொதுவாக எல்லா கல்ட் அமைப்புகளிலும் அப்படியே நடக்கும். ஒரு கடவுளை ஒழித்துவிட்டு மனிதரைக் கடவுளாக்குவார்கள். அதன்பிறகு அவர் எந்த விதிமுறையையும் சட்டத்தையும் மீற, மனித நேயத்தை ஒழிக்க, மனிதர்களை அடிமையாக்க ஒரு தனி உரிமை கிடைத்துவிடும். மக்களாட்சி அமைப்புக்கு அப்பால் தலைமையையும் ஆட்சியையும் இது கொண்டு போகத் தொடங்கி விட்டது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஆறு மாதம் பொறுப்போம், பத்து மாதம் கவனிப்போம் என்பதெல்லாம் கட்சிகளின் தலையெழுத்து. ஒரு தனிமனிதராக, எழுத்தாளராக என்னால் இதை வேடிக்கை பார்க்க இயலவில்லை. அவலமாக உள்ளது. இவர்களை மிகக் கடுமையாகக் கண்டிப்பது அவசியம். எதுவும் நடக்கும், எதையும் செய்யலாம், எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை, இதெல்லாம் தனிப்பட்ட முடிவுகள் என நினைத்ததால்தான் இங்கு நித்தியானந்தாவும் ஜக்கியும் தோன்றினார்கள். அவர்களுடைய அரசியல் வடிவமே மோடியும் இங்கு விஜய்யும்.
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இங்கு மதத்தைப் போதிக்கலாம், பரப்பலாம், பின்பற்றலாம். ஆனால் சட்டமன்றம், அரசு அலுவலகங்கள் முழுக்க மதத்திற்கு அப்பால் இருக்க வேண்டும். மேம்போக்காகக் கூட அங்கு வழிபாடுகளோ மனிதக் கடவுள்களோ இருக்கலாகாது. குற்றங்களையும் ஒடுக்குமுறைகளையும் நியாயப்படுத்த மிகச்சிறந்த வழி மனிதக் கடவுள்களை உருவாக்குவதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஜோக்கர்களை ஆதரிக்கத் தேவையில்லை

பொதுமக்கள் நினைப்பதையும் நம்புவதையும் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் நினைக்கவோ நம்பவோ ஏற்கவோ அவசியமில்லை. கடந்த சில வாரங்களாகவே இத்தகைய ஒரு தரப்பு வாதத்தை நான் பார்க்கிறேன் - எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் மக்களின் உணர்வுகளில் இருந்து விலகி நிற்கிறார்கள், அது ஒரு தவறு என்று. நிச்சயமாக இல்லை. அப்படி அவர்கள் நிற்பதே சரி என நினைக்கிறேன். மக்களின் போக்குகளைப் புரிந்துகொள்வது வேறு அதை விமர்சிக்காமல் ஏற்பது வேறு. பின்னது வெகுஜன வணிகப் படைப்பாளிகள், ஊடகவியலாளர்களின் குணம், இலக்கு. அவர்கள் வெகுஜனத்தைப் பயன்படுத்தி சம்பாதிப்பவரக்ள். எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் வெகுமக்கள் போக்கிற்கு எதிராகவோ விலகியோ நின்று சிந்திப்பவர்கள். தேர்தலை கணிப்பதோ தேர்தலை வழிநடத்துவதோ அவர்கள் பணியல்ல. தோற்கும் கட்சியைக் கூட அவர்கள் ஆதரிக்கலாம். அரைநூற்றாண்டுக்கு மேலாக இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாதபோது கூட இடதுசாரி ஆதரவாளர்களாக இருந்த எழுத்தாளர்கள் இல்லையா? கடுமையான அராஜகவாதிகளாகவும் படைப்பாளிகள் இங்கு இருந்திருக்கிறார்கள். அதுவே சரி. பொதுமக்களிடம் அனுபவத்தின் திரட்சியான ஞானம் இருக்கும். ஆனால் பகுத்தறிவோ கருத்துக்களை அ...