முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறு அணில் மீது பெரிய மலையை வைப்பது

dmk mp a rasa speech on unemployment in lok sabha

ஆ. ராசா ஊடகச் சந்திப்பில் விஜய்யைக் குறித்துப் பேசுவதைக் கேட்டேன். அதில் விஜய் மீது அவர் வைக்கும் ஒரு குற்றச்சாட்டு அபாண்டமானது - ஏன் பிரதமரிடம் மாநில நலனை வலியுறுத்தி விஜய் பேசவில்லை, ஏன் பதுங்குகிறார் என ஆ. ராசா கேட்கிறார். யோசித்துப் பாருங்கள் ஆ. ராசா, இதெல்லாம் சாத்தியமா?

முதலில், ஒன்றுமே இல்லாத இடத்தில் இருந்து எந்திரத்தை டியூன் செய்து வைத்து அவரை வெல்ல வைத்து முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்திருக்கிறார்கள். அவர்களை விஜய்யால் பகைக்க முடியுமா?
அடுத்து, அவர் மின்னனு வாக்கு எந்திரத்தின் 'உதவியை' இடைத்தேர்தலிலும் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் நம்பியிருக்கிறார். அவரால் பாஜகவை பகைக்க முடியுமா?
அடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்களில் ஒரு கும்பல் கூட்டணிக்குள் வந்ததும், வேறு சில எம்.எல்.ஏக்கள் பதவியைத் துறந்து தவெகவில் சேர்ந்ததும் பாஜகவின் கைக்குள் தவெகவின் குடுமி போய்விட்டது. மயிரிழையில் ஆட்சி தொங்குகிறது. அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவை பாஜக தலைமை எதிர்த்தால் விஜய் முழுக்க முன்னாள் திமுக கூட்டணிக் கட்சியினரை நம்பியிருக்க வேண்டியிருக்கும். அவர்கள் விலகினால் ஆட்சி கவிழும்.
அடுத்து, கரூர் வழக்கை சி.பி.ஐ விசாரித்தால் விஜய்யின் கதி என்னவாகும்?
அதிமுக, திமுகவைக் கூட பாஜக அமலாக்கத்துறை, சிபிஐ என்று பயமுறுத்தியிருக்கலாம். ஆனால் விஜய்யின் வெற்றியே பாஜகவால் உருவாக்கப்பட்டது, அவர் தொடர்ந்து அவர்களுடைய உதவியை நம்பியிருக்கிறார். திமுகவையும் அதிமுகவையும் போல அவர் முழுமையாகத் தன் ஆதரவாளர்களை மக்களை நம்பி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர்.
இது போதாதென்று பாஜக ஒரு பக்கம் ஊடகங்களை முடுக்கி விட்டும் இன்னொரு பக்கம் அண்ணாமலையை ஒரு புது கட்சி ஆரம்பிக்க வைத்தும் விஜய்யின் ஆட்சியை அடுத்து அடித்தாடப் போகிறது. அவர் இதைக் குறித்த நடுக்கத்தில் இருக்கிறார். அவர் அல்லுசில்லு என்று சாடியது அவர்களையே.
கடைசியாக, அவருக்கு அசலான எதிர்ப்பரசியலில் நம்பிக்கை இல்லை. சொல்லப் போனால் எந்த அரசியலும் அவருக்கு நம்பிக்கையில்லை. அவரது பேச்சைக் கேட்கிற யாருக்கும் இது புரியும் - தன் மீதுள்ள நம்பிக்கையில் மக்கள் வாக்களித்ததாகச் சொல்லுகிறாரே தவிர தன்னுடைய இதுவரையிலான செயல்பாடுகளை நம்பியோ தன் அரசியலுக்காகவோ வாக்களித்ததாக அவர் நம்பவில்லை.
தவெக ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஒரு கல்ட் அமைப்பு. ஜக்கியின் ஈஷா மையத்தை போன்ற ஒன்று. ஜக்கி வாசுதேவ் முதல்வர் ஆனால் என்னவெல்லாம் பண்ணுவாரோ அதுவே விஜய்யாலும் முடியும்.
ஒரு சிறு அணிலால் ஒரு குட்டிக் கல்லைத்தான் தூக்க முடியும். அதன் முதுகில் பெரிய மலையைத் தூக்கி வைக்கக் கூடாது. ஆ.ராசா அவர்களே நீங்கள் செய்வது ஒரு சாடிஸச் செயல். அவர் எங்குமே தன்னால் இயலும் என்று கோராததையெல்லாம் அவரைச் செய்யக் கேட்கிறீர்கள். அவர் சில வசனங்களைப் பேசி தன் ரசிகர்களைக் கவர்ந்து வாக்கு எந்திர உதவியுடன் ஆட்சிக்கு வந்தார். அதற்காக அவரிடம் அநியாயமான எதிர்பார்ப்புகளை வைக்கக் கூடாது. அவர் தான் தேர்தல் பரப்புரையில் செய்த பணிகளை இப்போதும் செவ்வனே செய்கிறார். எதைப் பார்த்து வாக்களித்தார்களோ அதைச் செய்கிறார். அதில் என்ன தப்பு? எனக்கு சத்தியமா புரியல!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...