முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஜய் ஏன் இனி சினிமாவில் நடிக்கக் கூடாது?


 

ஒரு விசயம் எனக்குப் புரியவில்லை: தவெக அரசே ஒரு 'நேரலை விஜய் சினிமாதானே'. இதில் இவர் ஏன் தனியாக "ஜனநாயகன்" என ஒரு படத்தை எடுத்து வெளியிட வேண்டும்?

மாணவர் போராட்டத்தைத் திசை திருப்ப வேண்டுமெனில் விஜய் சும்மா மேடையில் தோன்றி அரைமணி நேரம் பேசினால் போதுமே! ஒரு சில பாடல்களையும் சண்டைக் காட்சிகளையும் அரங்கேற்றினால் இதே போராடும் இளைஞர்களே அதைக் கண்டு மனம் மகிழ்வர். இதற்காகத்தானே ஒரு கூட்டம் அவருக்கு வாக்களித்து முதல்வராக்கி இருக்கிறது. விஜய்க்கு ஆளவும் தெரியாது, ஒரு மண்ணும் தெரியாது என்று மக்களுக்குத் தெரியாதா? தெரியும். அவர்களுக்கு ஆட்சி, நிர்வாகம், அரசியல், கொள்கையெல்லாம் அலுத்துவிட்டது. ஒரு முழுமையான பொழுதுபோக்காளரை ஆட்சியில் அமர வைத்தால் நேரம் நன்றாகப் போகும் எனக் கருதினார்கள். அதுவே இப்போது நிகழவும் செய்கிறது. இப்போது 'ஜனநாயகன்' எல்லாம் காலாவதியாகி விட்டது.
என்னுடைய பரிந்துரை விஜய் தன்னுடைய மேடைப் பேச்சையும் பொதுவெளித் தோற்றங்களையும் டிக்கெட் போட்டு விற்றுவிட வேண்டும். இது ஒன்றும் புதிதல்ல. எம்.ஜி.ஆர் தான் முதல்வரான பிறகுகூட இதைச் செய்திருக்கிறார் என்று சபாநாயகர் பிரபாகர் தன் நேர்முகத்தில் சொல்லியிருக்கிறார். விஜய் தன் மேடை நிகழ்வுகளை மட்டுமன்றி அனைத்து அரசியல் செயல்பாடுகளையும் விற்றுவிட்டால் போதும். அக்காட்சிகளை ஒளிபரப்பும் உரிமையையும் ஒ.டி.டியில் விற்றுவிடலாம். வருடத்திற்கு ஒரு மாதம் மட்டும் பிக்பாஸ் போல 'விஜய் பாஸ்' எனும் 24 மணிநேர நேரலையை ஒளிபரப்பி அதற்கும் பணம் வாங்கலாம். தங்கள் தளபதியை இரவு பகலாய் பார்த்துப் பரவசத்தில் மக்கள் அடுத்த தேர்தல்களிலும் வாக்களிப்பார்கள். அவர்களுக்கு அலுக்கும் வரை இதைச் செய்யலாம். அதைக் கிளுகிளுப்பாக்கவும் என்னிடம் ஐடியாக்கள் உள்ளன. அதைப் பின்னர் பார்க்கலாம்.
விஜய்யின் அமைச்சர்கள் படத்துக்காகப் போஸ்டர் ஒட்டுவதை, வெளியிடுவதை, பார்த்து கண்ணீர் விடுவதை ஏன் விமர்சிக்கிறார்கள் எனப் புரியவில்லை. அவர்கள் இத்தனை நாளாக ரீல்ஸ் போட்டு மகிழ்ந்ததெல்லாம் இந்நடவடிக்கைகளின் மறைமுக வடிவம்தானே. தேர்தல் பிரச்சாரம், வெற்றி, ஆட்சி எல்லாமே சினிமாவின் நீட்சி எனப் புரிந்து கொண்ட அவர்களை நாம் பழிக்கலாமா? கூடாது.
கடைசியாக, அதென்ன 'ஜனநாயகன்'. ஜனநாயகத்தை ஒழித்துக் கட்ட வந்தவரே விஜய் தானே. 'சர்வாதிகாரி' என்பதே தகுதியான தலைப்பு. அதில் 'என்னையா சர்வாதிகாரின்னு சொல்றீங்க. ஆமாடா அப்படித்தாண்டா செய்வேன். உன்னால ஒரு டேஷும் பண்ண முடியாதுடா' எனும் வசனத்தையும் வைக்கலாம். மக்கள் புல்லரித்துப் போவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...