முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அசிங்கப்படும் இந்திய டிவி சேனல்கள்

 கரப்பான்களின் போராட்டங்களில் நான் ரசித்தது போராட்டக் களத்துக்கு மைக்குடன் வந்த பாஜகவுக்கு சதா ஒத்து ஊதும் சேனல்களின் வித்துவான்களைப் பயங்கரமாகக் கலாய்த்து, கேள்வி கேட்டு, தண்ணீர் பாட்டில்களைத் தூக்கி அடித்துத் துரத்திவிட்டதுதான். ஏனென்றால் இவர்கள் இப்போராட்டங்களை ஏதோ தேசத்துரோகம் எனும் கணக்கில் சித்தரித்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு இச்சேனல் வித்துவான்கள் அவமதிக்கப்படுவதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஒரு காலத்தில் மக்கள் முன்னால் ஹீரோவாக இருந்தவர்கள். அன்று மக்கள் தரும் கவனமே சேனல்களின் விளம்பர வருமானத்துக்கு வழிவகுத்தது. என்னப் பிரச்சினை இந்நிலை மெல்ல மெல்ல மாறி மக்களின் ஆதரவே அவசியமில்லை எனும் இடத்தை ஊடகங்கள் பெற்றுவிட்டன. அச்சிதழ்களுக்கு அரசு விளம்பரம் என்றால் சேனல்களுக்கு நேரடியாகக் கட்சிகள் கொடுக்கும் பணம். இவ்வாறு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மிகப்பெரும் சரிவைப் பார்த்து வருகிறோம். அதுவும் 2014இல் மோடி ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளிலேயே அவர் பல தொலைக்காட்சி நிறுவனங்களை வாங்கி அதன் வித்துவான்களைத் தன் பங்களா நாய்களாக மாற்றிக் கொண்டார். அவர்களும் பாவம் சம்பளத்துக்காக என்னென்னமோ குட்டிக்கரணங்களை தினமும் அடிக்கிறார்கள். இவர்கள் தமது பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் தினமும் தவறாமல் மோடியின் அடி முதல் முடி வரை ஜால்ரா அடிப்பதைப் பார்த்து மக்களுக்குக் கடுப்பாகி விட்டது. இந்தியாவின் எதார்த்த நிலைக்கும் டிவி சேனல்களில் காட்டப்படுவதற்கும் துளிகூட சம்மந்தம் இருக்காது. இதனால் மக்கள் இதையெல்லாம் பார்ப்பதே இல்லை. பார்க்க நேரும்போது கக்காவைப் பார்த்ததைப் போல முகம் சுளிக்கிறார்கள். டிவி ஊடகம் மொத்தமாகவே தன் மதிப்பை மட்டுமல்ல தேவையையும் இழந்து யாரும் விரும்பாத ஒரு மக்கள் எதிர்ப்புக் குழுவாகி விட்டது. ஆகையால் இப்போதைய இளைஞர் கிளர்ச்சிச் சூழலில் அவர்கள் சிக்கியபோது பொளந்து விட்டார்கள்.
ஆனால் பாருங்கள், நாளை விடிந்ததும் மேக் அப் போட்டுக் கொண்டு பாஜக அரசுக்கான புதுப்புது பிரச்சாரங்களை எடுத்து வந்து ஆவேசமாகப் பேசுவார்கள். சூடுசுரணை இல்லாத ஜென்மங்கள். இவர்களிடையே புத்திசாலி ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி தான். அவர் வெளியே தலையே காட்டவில்லை.
ஏதோ இந்தி, ஆங்கிலச் சேனல்கள் மட்டும்தான் இப்படி என்றில்லை. தமிழ் சேனல்கள் மக்களை ஏமாற்றிப் பிரச்சாரம் செய்வதில் பெரும் சாதனைகளைப் பண்ணியிருக்கின்றன. கரூரில் நடந்த விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கின்றன. குறிப்பாக புதிய தலைமுறையும் தந்தி டிவியும். ஒருநாள் இவர்களும் இதே போல பொதுமக்களிடம் அசிங்கப்படப் போகிறார்கள் என இப்போதே தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...