கரப்பான் பூச்சிகள் போராடி பதவி நீக்கம் செய்த பிரதானுக்குப் பதில் கல்வி அமைச்சராகப் போகிறவர் பிரல்ஹாத் ஜோஷி. இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?
90களின் துவக்கத்தில் ஹுப்பாலி இத்கா மைதானத்தில் 'தேசியக் கொடி ஏற்றுகிறோம்' எனும் பெயரில் இஸ்லாமியர் அம்மைதானத்தை தம் பிராத்தனைகளை நடத்துவதைத் தடுக்க முயற்சி எடுத்தவர். இவர் முன்னின்று நடத்திய கலவரங்களில் ஆறு பேர்கள் கொல்லப்பட்டார்கள். நூறு பேர்களுக்கு மேல் காயம்பட்டார்கள். இதனால் அப்பகுதி கர்நாடகாவின் மினி அயோத்தியா என அழைக்கப்படுகிறது. அப்போது துவங்கி எதாவது ஒரு இஸ்லாமிய வழிபாட்டு விவகாரத்தை வைத்து பாஜக கர்நாடகத்தில் கலவரம் பண்ணி வருகிறார்கள்.
அண்மையில், இவர் கர்நாடகாவில் இஸ்லாமிய ஆண்கள் இந்துப் பெண்களை ஏமாற்றிக் கல்யாணம் பண்ணுவதாக, லவ் ஜிகாத் பண்ணுவதாகக் குற்றம் சாட்டினார்.
இவரது சகோதரர், சகோதரி உள்ளிட்டோர் ஒரு முன்னாள் எம்.எல்.ஏவிடம் தேர்தலில் போட்டியிட இடம் பெற்றுத் தருவதாகக் கூறி ரெண்டு கோடிக்கு மேல் வாங்கி ஏமாற்றிவிட்டனர். அவர் வழக்குத் தொடுத்ததும் ஜோஷி தனக்கும் தன் சகோதர சகோதரிக்கும் சம்மந்தம் இல்லை என்று நழுவி விட்டார்.
2019-2024 கட்டத்தில் இவர் ஒன்றிய நிலக்கரி அமைச்சராக இருந்தபோது தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்களை தாரை வார்த்ததுடன் பல சுற்றுச்சூழல் பாதிப்புள்ள சுரங்கங்களுக்கு அனுமதி அளித்தார் எனக் குற்றச்சாட்டு உள்ளது.
2023இல் இவர் எய்ம்ஸிலும் தேசிய மருத்துவக் குழுவிலும் முக்கியப் பொறுப்புகளைப் பெற்றுத் தருவதாக ரெண்டரைக் கோடி பணத்தை இருவரிடம் (இன்னொரு அமைச்சருக்கு வாங்கிக் கொடுத்து) வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது.
இவர் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சிகளின் விவாத நேரத்தை வெகுவாகக் குறைத்து மோடிக்கு எதிராக தொடர் விவாதங்கள் நடக்காமல் பார்த்துக் கொண்டார்.
ஜோஷியின் 'தனிச்சிறப்பு' என்னவென்றால் மாட்டிக்கொள்ளும் படியாகவே ஊழல் செய்வார். இவரது சகோதரி பணத்தை காசோலையாகப் பெற்றுக் கொண்டார். ரெண்டரை கோடி ஊழல் விசயத்தில் தன் அலுவலக ஊழியரின் கணக்கிலேயே பணம் வாங்கிக் கொண்டார்.
இப்படிப்பட்ட பிரல்ஹாத் ஜோஷியை கல்வியமைச்சராக்கத்தான் கரப்பான்கள் இவ்வளவு ஆயிரம் மாணவர்களை கைகால்களை உடைத்துக் கொண்டு, ரப்பர் பெல்லட்டுகளால் தாக்கப்பட்டு துன்பப்பட வைத்தார்களா? இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாமே? இவர் மாற்றங்களைக் கொண்டு வருவாரா என இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என கரப்பான் கட்சித் தலைமை எச்சரித்துள்ளது. அதற்கு ஏன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? அவரது கடந்த காலத்தைப் பார்த்தாலே போதுமே. செய்தியே படிக்காதவர்கள் போல.
பி.கு: நம்மில் இளைஞர்கள் புரட்சி எனும் வசீகரமான கனவால் ஆட்பட்டிருக்கலாம். கரப்பான்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டிவிட்டார்கள் என புன்னகைத்து காலாட்டிக் கொண்டு நாம் இன்றிரவு தூங்கி விடலாம். ஆனால் எதார்த்தம் நாற்றமெடுக்கக் கூடியது. தம் கனவு கலையக் கூடாது என்பதற்காக ஒரு மட்டமான அமைச்சரின் இடத்தில் பாஜக தலைமை இன்னொரு மோசடிக்காரரை, சிறுபான்மை வெறுப்பாளரை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமலே அடுத்த சில வாரங்களும் கனவில் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். வாழ்வில் நம்பிக்கை இருக்கலாம், ஆனால் அதிகாரத்தின் மீது இவ்வளவு நம்பிக்கை வைக்கக் கூடாது.
கருத்துகள்