முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைகுப்புற வீழ்ச்சி

 

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்திற்குச் சென்று டி20, ஒருநாள் தொடர்களை ஆடிய இந்திய அணி மூன்று தொடர்களை அடுத்தடுத்து இழந்திருக்கிறது. ஒரே ஒரு போட்டியை மட்டுமே வென்றுள்ளார்கள். இந்தளவுக்கு மோசமான சவுக்கடியை இதற்கு முன் தோனியின் தலைமையிலான சில அயல்நாட்டு டெஸ்ட் தொடர்களிலேயே இந்திய அணி பெற்றது. ஒருநாள், டி20 போட்டிகளில் எப்படியாவது சமாளித்து விடுவோம். இப்போது எல்லா வடிவங்களிலும் விழி பிதுங்கி நிற்கிறோம். டி20 உலகக்கோப்பையை அண்மையில் வென்ற அணி, ஒருநாள் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியை அடைந்து தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணி இப்படி ஓட ஓட விரட்டப்படுவதைக் காண அவமானமாக இருந்தது. இத்தோல்விகளுக்கு இரண்டே காரணங்கள்:
1) வியூகங்கள், அணித்தேர்வு, தலைமையில் தயாரிப்பின்மை
2) மோசமான உடற்தகுதி
முதல் பிரச்சினை அகார்க்கரும் சரி, கம்பீரும் சரி இத்தொடர்களை முக்கியமாகக் கருதி தயாராகவில்லை. கொஞ்சம் லகுவாக எடுத்துக் கொண்டு ஏதோ பரிசோதனை செய்வதாக நியாயம் கூறி மட்டமான முடிவுகளை எடுத்தார்கள். நேரடியாக ஷ்ரேயாஸை டி20 அணியில் தலைவராக்கியது, சூர்யகுமாரை ஏதோ ஆடு திருடுவது போல இரவோடு இரவாக அணியில் இருந்து தூக்கியது, ஐ.பி.எல் முடிந்ததுமே அப்கானிஸ்தானுடன் தொடர்கள், இலங்கையில் ஒரு ஏ அணியை அனுப்பி போட்டித் தொடரில் ஆட வைத்தது, இன்னொரு பக்கம் அயர்லாந்து போட்டித்தொடர், அடுத்து உடனே இங்கிலாந்து தொடர் மோசமான திட்டமிடலின் விளைவு. ஐ.பி.எல்லுக்குப் பின்பு இந்திய அணி இப்படி அடுத்தடுத்து அயல்நாடுகளுக்குப் போய் உடற்தகுதியிலும் ஒற்றுமையிலும் சொதப்பி அடிவாங்குவதைப் பலமுறை பார்த்துவிட்டோம். கொஞ்சமாவது விவரம் இருந்தால் அப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்துப் பயணங்களை ஒத்திப் போட்டுவிட்டு இங்கிலாந்து தொடரை மட்டும் கவனம் செலுத்தி இருப்பார்கள். வீரர்களை முன்பே இங்கிலாந்து அனுப்பி இரண்டு வாரங்கள் பயிற்சி கொடுத்திருப்பார்கள். ஷ்ரேயாஸை மெல்ல மெல்ல அணிக்குள் நிலைப்படுத்திவிட்டு தலைமையைக் கொடுத்திருப்பார்கள். உடற்தகுதி முழுமையாக இல்லாதோரை மொத்த அணிக்குள் தேர்வு செய்திருக்க மாட்டார்கள். ரோஹித்தை நீக்கப் போவதாக செய்தியைக் கசிய விட்டிருக்க மாட்டார்கள். இப்போது அணித்தலைவர், பயிற்சியாளர், தேர்வாளர்கள், வாரிய அதிகாரிகள், ரோஹித் எல்லாருக்கும் அசிங்கமாகி விட்டது.
இத்தொடர்களை வெல்ல வேண்டும் எனும் நோக்கம் இந்திய அணிக்கு உண்மையிலே இருந்ததா அல்லது ஏதோ ஆடி தத்தம் இடத்தைப் பாதுகாக்க வேண்டும் என நினைத்தார்களா? கம்பீர் பரிசோதனை எனும் பெயரில் சஞ்சு சாம்ஸனைக் கையாண்ட விதன், குல்தீப்புக்கு வாய்ப்பளிக்காதது என பல நிர்வாகக் கோளாறுகள். இங்கிலாந்து அணியைப் பாருங்கள். ஒரு டெஸ்ட் தொடர் முடிந்ததும் வெள்ளைப் பந்துக்கு என்று இன்னொரு அணியைக் களமிறக்குகிறார்கள். அவர்களில் சிலர் ஐ.பி.எல் ஆடியிருந்தாலும் அவர்களது உடற்தகுதி நம்முடையதை விட மேலானதாக இருந்தது. ஆர்ச்சர் எல்லா போட்டிகளிலும் தளராமல் வீசினார். 145 கிலோமீட்டர் வேகத்தை அவர் குறைக்கவில்லை. ரஷீத் விக்கெட் எடுக்காவிடினும் அவர்கள் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்தனர். பட்லரும் அப்படித்தான் - கம்பீர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் என்றோ பட்லரைத் தூக்கியிருந்திருப்பார். ஆனால் அவர்தான் அண்மையில் நடந்த போட்டிகளில் தொடர்களின் போக்கையே மாற்றும் இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார். என்னதான் புகார்கள் சொல்லப்பட்டாலும் மெக்கெல்லம் தன் வீரர்களை அரவணைத்துக் கொண்டு செல்வதில் பாராட்டத்தக்கவர். கம்பீரை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு பாஜகவின் தமிழ்நாட்டுப் பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். அவருக்கு ஏற்ற பொறுப்பு அதுதான். ரவி சாஸ்திரியெல்லாம் தெய்வ லெவல் என கம்பீர் நினைக்க வைத்துவிட்டார். அகார்க்கருக்கும் ஓய்வு தேவை. அவரது அணித்தேர்வு ரொம்ப மட்டமாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...