https://www.facebook.com/reel/1372212077667223
இதைத்தான் நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னேன் - சாய் தீபக்கைப் போன்ற சங்கி அறிவுஜீவிகளே மோடி அரசை விமர்சிக்கிறார்கள் என்றால் அவர் மீது அழுத்தம் போடும்படியான முடிவை பாஜக உட்கட்சி போட்டியாளர்கள் எடுக்கிறார்கள் எனப் பொருள். மோடியை அவரது இந்துத்துவத்துக்காக ஆதரிக்கும் மக்கள் திரள் கல்வி அமைச்சகத்தின் நிர்வாகக் கோளாறையும் கரப்பான்களை அந்நிய சக்திகள் தூண்டி விடுவதான நியாயங்களையும் ஏற்க மாட்டார்கள் என்கிறார். அதாவது மோடியை நேரடியாகத் தாக்காமல் லேசாக ஒரு குத்து விடுகிறார். இந்த கரப்பான் பூச்சி போராட்டமே இதனால்தான் இவர்களால் மறைமுகமாக அனுமதிக்கப்படுகிறதோ எனும் ஐயம் வருகிறது. தன்னிச்சையாக இது நடந்து இவர்கள் அதைப் பயன்படுத்துவதானால் தில்லியில் ஜந்தர் மந்தரில் இத்தனை நாட்கள் போராடியிருக்க மாட்டார்கள். எதிர்பாராதவிதமாக சில விபத்துகள் நடந்து உயிரிழப்பு ஏற்பட்டு மக்கள் போராடி மோடிக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கும். இதுவே தெளிவாகத் திட்டமிட்டு கடந்த சில மாதங்களில் உயிர்ப்பெற்றிருக்கிறது. கரப்பான்களைப் போன்ற இளைஞர்கள் எனும் நீதிபதியின் சொல்லாடலைப் பயன்படுத்தி பகடி அமைப்பாக உருவானவர்கள் அப்போது கவனம் பெற்ற தேர்வுத்தாள் முறைகேட்டை எடுத்துக் கொள்கிறார்கள். அதாவது அந்த முறைகேட்டு விவகாரமும் குறிப்பான ஒரு கருத்தியல் பிரச்சினையோ நீண்ட காலமாக கரப்பான்களைப் பாதித்த பிரச்சினை அல்ல. அதை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்குப் பதிலாக இளம்பெண்கள் பலாத்காரம் போன்ற ஒன்று கிடைத்திருந்தால் அதை எடுத்திருப்பார்கள். நேரடியாக மோடியைக் குற்றம் சாட்டக்கூடாது, அதேநேரம் அவர் மீது அழுத்தம் போட வேண்டும், நேரடியாக பாஜகவின் இந்துத்துவாவை, அடிப்படைக் கொள்கைகளைத் தாக்கலாகாது, ஆனால் நிர்வாகம் சார்ந்த ஒரு கோளாறை எடுத்துக் கொள்ளலாம் என்பதே அவர்களுக்கான கட்டளை என நினைக்கிறேன்.
கருத்துகள்