முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமைச்சர் கீர்த்தனாவின் முன்னெண்ணமும் திமிரும்


 

அமைச்சர் கீர்த்தனாவின் காணொளி ஒன்றைக் கண்டேன். அவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன் காமிரா டீமுடன் ஆய்வுக்குப் போய் ஒரு வகுப்பறைக்குள் நுழைகிறார். மாணவிகளைக் காட்டுவது, கீர்த்தனாவிடம் மிட் ஷாட், குளோஸ் அப், லாங் ஷாட் என காமிரா பாய்ந்து பாய்ந்து படம் பிடிக்கிறது. கீர்த்தனாவிடம் ஏற்கனவே ஒரு திரைக்கதை இருந்தது தெரிகிறது - அவர் ஒரு மாணவியை அழைத்து அவரிடம் உள்ள பாடநூலில் இருந்து ஒரு ஆங்கில வார்த்தைக்குப் பொருள் கேட்கிறார். மொத்த மாணவர்களும் பதிலளிக்கிறார்கள். ஓக்கே என்று இன்னொரு சொல்லை எடுக்கிறார். சற்று நேரம் அமைதி நிலவுகிறது. பார்த்தீங்களா என்றவாறு கீர்த்தனா ஆங்கில ஆசிரியைப் பார்க்கிறார். முதல் வரிசைப் பெண் குழந்தை எழுந்து அதற்கு ஒருவாறு பதில் சொல்கிறார். இப்போது கீர்த்தனா தன் திரைக்கதையில் இருந்து விலக விரும்பாமல் "இப்படி புத்தகத்தில் உள்ளதை மட்டும் படிச்சு பதில் சொன்னா போதாது. ஸ்போக்க இங்கிஷ் தெரியுமா?" என்கிரார். அப்பெண் குழந்தை தயங்குகிறது. அதான் சொல்றேன் எனும் கணக்கில் பேசிவிட்டு கீர்த்தனா அடுத்து அக்குழந்தையிடம் "வாட் இஸ் யுவர் பாதர்" என்று கேட்கிறார். குழந்தை விழிக்கிறது. உடனே கீர்த்தனா மீண்டும் "பார்த்தீங்களா? ஸ்போக்கன் இங்கிலிஷ் தெரியல" என்கிறார். ஆசிரியை வந்து "தைரியமா பேசும்மா" என்று அக்குழந்தையை ஊக்கப்படுத்தி விட்டு "வாட் இஸ் யுவர் பாதர்ஸ் புரொபஷன்?" என்று கேட்கிறார். அக்குழந்தை உடனே சொல்கிறார். அவருக்கு ஒரு தன்னம்பிக்கை வந்து எந்தக் கேள்விக்கும் தயார் எனும் கணக்கில் நிற்கிறார். உடனே கீர்த்தனா குறுக்கிட்டு "இதெல்லாம் சரிங்க. ஆனால் பின் வரிசையில் இருப்பவர்களிடம் கேட்டால் ஒருத்தருக்கும் பதில் தெரிஞ்சிருக்காது." என்று சொல்லிவிட்டு பேச்சு ஆங்கிலத்தை முன்னேற்ற வேண்டிய அவசியம் பற்றி உரையாற்றுகிறார்.

அமைச்சர் கீர்த்தனா செய்தது சுத்த அயோக்கியத்தனம் - அந்த மாணவர்களைச் சரிவர சோதிக்காமல் அவர்களுடைய கல்வியில் ஒரு இடைவெளி (learning gap) இருப்பதாக அவரே ஒரு முன்முடிவுக்கு வந்து தன் திடீர் ஆய்வில் அதைக் கண்டுபிடித்ததாக காமிராவில் பதிவு பண்ணி அக்குழந்தைகளை அவமதிக்கிறார். இதை அவரால் ஒரு தனியார் பள்ளியில் போய் செய்ய இயலுமா? லதா ரஜினிகாந்தின் பள்ளிக்குச் சென்று அங்குள்ள மாணவர்களிடம் உங்களுக்கு அறிவு போதவில்லை என்று கூற முடியுமா? ஒரு தொழில்துறை அமைச்சருக்கு இத்தகுதி எங்கிருந்து வருகிறது? மேலும், ஒரு வகுப்பில் எல்லா மானவர்களும் சமமான ஆற்றலுடன் இருக்க இயலாது. தனியார் பள்ளிகளிலும் கூட இப்படித்தான் இருப்பார்கள். எல்லாருக்குமான கல்வியை அளிப்பதையே differentiated instruction என்கிறார்கள். பலவிதமான மாணவர்களை அடையாளம் கண்டு தனித்தனியாக கவனம் செலுத்தி முன்னேற்றுவது. எல்லா மாணவர்களையும் ஒரே போல பாவிப்பது அல்ல. கல்வியல் மட்டுமல்ல காமன் சென்ஸே இல்லாதவராக அமைச்சர் இருக்கிறார்.
நான் ஒரு ஆசிரியராக அங்கு இருந்திருந்தால் மாணவர்களை இப்படி காமிரா முன்னால் அவமதித்து ஊக்கமிழக்கச் செய்யக் கூடாது என்றும், அதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்லி இருப்பேன். ஏனென்றால் ஒரு வகுப்பில் ஆசிரியருக்கு உள்ள இறையாண்மை கேள்விக்கு அப்பாலானது. அடுத்து பேச்சு ஆங்கிலத்தை மேம்படுத்த வேண்டுமெனில் அதற்கு ஒரு தனி ஆசிரியரை நியமித்து அதற்கென ஒரு பாடத்திட்டத்தைத் தயார் பண்ண வேண்டும். அதற்கென நேரத்தை ஒதுக்க வேண்டும். அதற்கென்ன நடைமுறைகள் உள்ளன. சும்மா வந்து ஆங்கில ஆசிரியரை மிரட்டினால் ஒன்றும் நடக்காது. அடுத்து, ஒரு வகுப்பறைக்குள் இப்படியான ஆய்வுகளைக் காணொளியாகப் பதிவு பண்ணுவது ஒரு அத்துமீறல். மாணவர்களை இது கடுமையாகப் பாதிக்கும்.
அரசுப் பள்ளிகள் குறித்து தவெக அமைச்சர்கள் கொண்டுள்ள தாழ்வான எண்ணத்தையே இது காட்டுகிறது. தனியார் பள்ளிகளில் மட்டுமே மாணவர்கள் படிக்கிறார்கள், அரசுப் பள்ளிகளில் தரமற்ற கல்வியே உள்ளது எனும் கீழான எண்ணத்தையே அவர் அங்கு நிறுவ முயல்கிறார். பள்ளியை மேம்படுத்த முயன்றதாக பாவிப்பது ஒரு பாசாங்கு மட்டுமே. அவரது உடல்மொழியில் தென்பட்டது திமிர்த்தனம், நடத்தையில் தெரிந்தது கல்வி குறித்த அறிவீனம்.
ஒரே ஒரு விசயத்துக்காக கீர்த்தனாவைப் பாராட்ட வேண்டும் - அவர் மாணவர்களிடம் விஜய் பாடல்களுக்கு நடனமாடச் சொல்லவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...