முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இணையம் நிரந்தரம் அல்ல

 ஒரு எழுத்தாளராக இணையத்தில் நான் ஒரு முக்கியமான பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறேன்: நீங்கள் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் நவீன இலக்கியம் குறித்த நல்ல வலைப்பூக்களைப் படித்திருக்க முடியும். நான் என் முனைவர் பட்ட ஆய்வுக்கு புத்தகங்களையும் இதழ்களையும் படித்ததற்கு இணையாக இந்த வலைப்பூக்களில் வந்த கட்டுரைகளையும் விமர்சனங்களையும்தாம் படித்தேன். ஆனால் அண்மையில் நான் தேடும்போது பல வலைப்பூக்கள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நீங்களும் இதை முயன்று பாருங்கள்: எதாவது ஒரு செவ்வியல் நாவலை இணையத்தில் தேடுங்கள். முதலில் இணைய புத்தகக் கடைகளின் தொடுவழிகளும் விக்கிபீடியா பக்கங்களும் நாளிதழ் பக்கங்களும் வரும். அதன்பிறகு நாம் பார்ப்பதெல்லாம் மீண்டும் மீண்டும் விற்பனைத் தளங்களையே. சில பக்கங்களிலேயே இந்த தேடல் விளைவுகள் முடிந்து போகின்றன. சில வருடங்களுக்கு முன் வரைக்கும் நூற்றுக்கணக்கான வலைப்பூக்களை நான் படித்திருக்கிறேன். எந்த எழுத்தாளர், புத்தகம் பற்றியும் எத்தனையோ கருத்துக்களும் வாசிப்புகளும் இருக்கும். அவை இன்று மறைந்து விட்டன. எங்கே போயின?

நான் இதைக் குறித்து ஆய்வு செய்தபோது கூகிள் உள்ளிட்ட தேடல் எந்திரங்கள் அதிகமாக பார்வையிடப்படாத இணையதளங்களை யார் பார்வைக்கும் படாதபடி மிகவும் பின்னால் தள்ளிவிடுகிறது என அறிந்து கொண்டேன். நீங்கள் எவ்வளவுதான் தேடினாலும் அந்த தொடுவழிகளைக் கண்டடைய முடியாது. இதை நினைத்தால் அச்சமாக உள்ளது. அற்புதமான நேர்முகங்கள், விமர்சனங்கள், உரையாடல்கள் இனி நம் விரல் சொடுக்கில் வரப் போவதில்லை. இணையம் நிரந்தரமானது என்பது உண்மையல்ல என்பதை அறிய அதிர்ச்சியாக இருந்தது. அதாவது இணையம் கிட்டத்த சமூகவலைதளம் போல மாறிவிட்டது. அதிகப் பார்வைகளைத் தொடர்ந்து பெறாதவை கண்ணுக்குப் படாதபடி மாயாவி ஆக்கப்படுகின்றன. ஒன்றின் மீது மற்றொன்று என்று புதுத் தகவல்கள் அவற்றின் மீது விழுந்து பாலையில் மணற் துகள்கள் கற்பாறைகளை மூடுவதைப் போல மூடி மொழுகி விடுகின்றன. ஆகையால் இனி முக்கியமான எழுத்துக்களை ஒன்று தொடர்ந்து புதுப்பிக்கப்படும் இணையதளத்தில் வைத்திருக்க வேண்டும். அல்லது புத்தகமாக வெளியிட வேண்டும். இணைய தளத்தை நீங்கள் புதுப்பிக்காவிட்டால் எழுத்துக்கள் மறைக்கப்படும் என்பதால் அச்சுநூல்களே நிரந்தரம் எனத் தோன்றுகிறது.
இலக்கியம் மீண்டும் அச்சுக்குத் திரும்பும் காலம் அண்மித்து விட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...