Skip to main content

கதை சொல்ல வாழ்கிறேன்: அத்தியாயம் 2



நான் வேலை பார்த்த செய்தித்தாள் அலுவலகத்தில் பணம் கிடைக்க வாய்ப்பே இல்லை. அலுவலக எழுத்தாளர்கள் விடுப்பில் செல்லும்போது மூன்று பிசோக்களுக்கு தினசரி உரையும், நான்கு பிசோக்களுக்கு தலையங்கமும் எழுதும் வாய்ப்பு எனக்குக்கிடைக்கும்; ஆனால் அது ஏதோ உயிர் வாழ்வதற்கு மட்டுமே போதுமானதாய் இருந்தது. காசு கடன் வாங்க முயன்ற போது, திருப்பி செலுத்த வேண்டிய கடன் ஏற்கனவே ஐம்பது பிசோக்களுக்கு மேல் என்று மேலாளர் நினைவூட்டினார். அன்று பிற்பகல் என் நண்பர்கள் எவரும் துணிந்திராத கொடுமை ஒன்றை நான் செய்தேன். புத்தகக் கடைக்கு அடுத்துள்ள கபே கொலோம்பியாவின் வாசலில் நின்று, முதிய கேடலன் ஆசிரியரும், புத்தக விற்பனையாளருமான டோன் ரெமோன் வின்யாஸிடம் பத்து பிசோக்கள் கடனாகக் கேட்டேன். அவரிடம் ஆறு பிசோக்கள் மட்டுமே இருந்தன.

எத்தனை கவனமாய் நெடுங்காலம் வாழ்ந்தாலும், திரும்ப சொல்ல போதாமல் போகும் அளவிற்கான ஒரு திருப்புமுனையாய் அந்த எளிய இருநாள் பயணம் அமையும் என்று அம்மாவோ நானும் கற்பனையில் கூட எண்ணவில்லை. இப்போது எழுபத்தைந்து வருடங்கள் தாண்டி நின்று யோசிக்கையில், என் எழுத்துப் பணியில், அதாவது என் முழுவாழ்வில், நான் செய்த முடிவுகளிலேயே அதிமுக்கியமானது இது என்று புரிகிறது.

விடலைப் பருவம் அடைவதற்கு முன், நினைவுகள் இறந்த காலத்தை விட எதிர்காலத்தை நோக்கியே இச்சையுடன் பாய்கின்றன. இதனால் அந்த நகரத்தைப் பற்றிய என் ஞாபகங்கள் வீட்டு ஏக்கம் காரணமாய் லட்சியத்தன்மை அடையவில்லை. நான் அது எப்படி இருந்ததோ அவ்வாறே நினைவு கூர்ந்தேன்: வரலாற்றுக்கு முந்திய முட்டைகளாய் பெரிதாகவும், வெள்ளையாகவும் உள்ள வழவழப்பான கற்கள் கொண்ட படுகை மேல் விரைந்து ஒடும் தெளிந்த நீருடைய ஆற்றின் கரையில் அமைந்த, எல்லாரையும் எல்லாரும் அறிந்த வாழ்வதற்கு ஏற்ற ஊர். அந்தியில், குறிப்பாய் டிசம்பரின் போது, மழைக்காலம் முடிந்து காற்று வைரமாய் தெரிகையில், சீயரா நெவேடா டீ சேன்டா மார்டா மற்றும் அதன் வெள்ளை கூரிய உச்சிகள் சரியாய் நதியின் மறுகரையிலுள்ள வாழைத்தோப்பு வரை இறங்கிச் செல்வதாய் தோன்றும். வாழ்வின் கசப்பை மறக்க கொக்கோ உருண்டைகளை மென்று, முதுகில் இஞ்சி மூட்டைகளை சுமந்தவாறு அரவாக் இந்தியர்கள் எறும்புகள் போல் வரிசைகளில் சியராவின் செங்குத்தான முகடுகளிலிருந்து இறங்குவதை அங்கிருந்து நாம் பார்க்கலாம். குழந்தைகளாய் இருக்கையில் நிரந்தர பனியிலிருந்து பந்துகள் செய்யவும், உலர்ந்து எரியும் தெருக்களில் அவற்றால் போர் புரியவும் நாங்கள் கனவு கண்டோம். கற்பனைக்கெட்டா விதம் வெப்பம் அதிகமாய் இருந்ததால், குறிப்பாய் மதியம் குட்டித்தூக்கம் போடும் வேளையில், பெரியவர்கள் அது ஏதோ தினசரி அதிசயம் என்பது போல் அங்கலாய்ப்பார்கள். பகலில் காயும் வெயிலில் கருகிகளை தூக்கக் கூட முடியாத அளவிற்கு அவை சுடும் என்பதால் ஒருங்கிணைந்த பழ நிறுமத்தின் ரயில் தண்டவாளங்களும், முகாம்களும் இரவிலேயே அமைக்கப்பட்டன என்று நான் பிறந்த நாளிலிருந்து திரும்ப திரும்ப கூறக் கேட்டிருக்கிறேன்.

அரகடகாவிலிருந்து பாரன்குல்லாவிற்கு போவதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு; காலனி ஆட்சி காலத்தில் அடிமைத் தொழிலாளர்களால் தோண்டப்பட்ட ஒரு குறிகிய கால்வாய் வழியே சிதிலமடைந்த ஒரு பெரும் எந்திரப் படகு மூலம் சென்று, சியனெகா எனும் ஆளரவமற்று விரிந்து பரந்த சதுப்பு நிலத்தைக் கடந்து சியனேகா எனும் அதே பெயர் கொண்ட நகரத்தை சென்றடைய வேண்டும். பயணத்தின் கடைசி படலத்தை மிகப்பெரும் வாழைத் தோட்டங்களின் ஊஉடே கடந்து, வெக்கையடிக்கும் தூசு மண்டிய சிற்றூர்களிலும், ஏகாந்தமான ரயில் நிலையங்களிலும் அர்த்தமில்லாமல் நிறுத்திப் போகும் தினசரி புகை வண்டியில் அங்கிருந்து ஏற வேண்டும்.

இதுவே 1950-ஆம் ஆண்டு பெப்ரவரி 10 அன்று---கோலாகல கொண்டாட்டத்திற்கு முந்தைய நாளில்---சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு, பருவம் தவறி வந்த புயல் மழையில், கையில் ஒருவேளை அவள் எதிர்பார்த்த விலைக்கு வீடு போகாவிட்டால் வீடு திரும்புவதற்கு மட்டுமே போதுமான முப்பத்திரெண்டு பெசோக்களுடன் நானும் அம்மாவும் மேற்கொண்ட சிறு பயணம்.

Comments

மிக்க நல்ல முயற்சி அனுப்பியதற்கும் நன்றி
எழுதும் மனோநிலை இல்லை. வாசிக்கவாவது செய்கிறோம். மொழிபெயர்ப்புகள் வேறு தளங்களுக்கு நம்மை இட்டுச்செல்லலாம். நன்றி.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...